என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்படும் பாம்புகளை காட்டில் விட வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வனத்துறையினர் மலையடிவாரத்திற்கு அருகில் விடுவதாக புகார்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் வெங்கடேசன் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது நிலத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. உடனே ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், வனச்சரக அலுவலர்கள் மீட்கப்பட்ட மலை பாம்பை ஒடுகத்தூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் இருந்தும் விவசாய நிலங்களில் இருந்தும் மீட்கப்படும் மலைப்பாம்புகளை வனத்துறையினர் எடுத்துச் சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விடாமல் மலையடிவாரத்திற்கு அருகில் விடுகின்றனர்.
இதனால் இறை தேடி மலைபாம்புகள் மீண்டும் குடியிருப்பு பகுதியை தேடி படையெடுத்து வருவதாக வனத்துறை மீது குற்றம் சாற்றுகின்றன.
வனத்துறையினர் பிடிப்படும் மலை பாம்புகளை அடர்ந்த காப்பு காட்டுக்குள் பத்திரமாக விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்