search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறில் இ-சேவை மையம்
    X

    செய்யாறில் இ-சேவை மையம்

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • விண்ணப்பங்களை மாணவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

    செய்யாறு:

    செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் வகையில் புதியதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொது மக்களின் பயன்பா ட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    மேலும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை இந்த மையத்தில் இலவசமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்தி, சௌந்தர பாண்டியன் மற்றும் கோபு, ஆறுமுகம், ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×