என் மலர்
நீங்கள் தேடியது "அரசு உதவிகள்"
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- வேலூரில் 7 இடங்களில் தடுப்பணை
வேலூர்:
காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை மலர் வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
அரசால் தரப்படுகின்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாவட்டத்தின் கடமை. குறிப்பாக கலெக்டரின் கடமை. ஒரு ஆட்சி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு உதவுவது கடமை. .வாழ்வில் நலிந்த பிரிவினருக்கு உதவி பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு அரசே முன் நின்று விலையில்லா பொருட்களை தந்து அவர்களை வாழ வைக்கிறது.
வாழ்வாதாரம் இருப்பவர்களுக்கு தொழில் முனைவோராக நிதியை அரசு கொடுக்கிறது. கொடுக்கும் நிதியை பல்வேறு பிரிவு அதிகாரிகள் அந்தந்த துறையை செம்மைப்படுத்த வேண்டும். அப்போது தான் அரசு போட்ட திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும்.
இப்போது ரூ.3 கோடியே 61 லட்சத்து 88,ஆயிரத்து33 அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போதாது. இது ரூ.30 கோடியாக இருந்தால் அனைவரையும் பாராட்டியிருப்பேன். சில இடங்களில சில துறைகளை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் துறையில் தையல் எந்திரம் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. உதவித்தொகை 4 பேருக்கும், சலவை பெட்டி 5பேருக்கும், புதிய தொழில் முனைவராக ஒருவருக்கும், வீல் சேர் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது.
அரசு கொடுக்கிறது. அதிகாரிகள் இறங்கி வேலை செய்ய வேண்டும். கலெக்டர் சுறுசுறுப்பானவர் தான். ஆனால் அவர் இலாக்காவை முடுக்கிவிட வேண்டும்.அடுத்த முறை வரும்போது ரூ.30 கோடி அளவில் நலத்திட்டம் இருந்தால் அனைவரையும் வாழ்த்துவேன்.
விஷ சாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன் முதல்-அமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்பு ரத்திற்கு சென்று விட்டார். அங்கு சிகிச்சை பெறுபவ ர்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார்.
கொரோ னா காலத்தில் தன்னுடைய உயிரை பணயம் வைத்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்த்து அவர்கள் தேவையான உதவிகளை செய்ய சொல்லி உத்தரவிட்டார். அடிதட்டு மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளார்.
அதனை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம், தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம் அமைத்து இப்போது கிராமப் பகுதிகளில் தொழு நோயாளிகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
வேலூர் சேண்பாக்கத்தில் 5 அடி அளவில் ஒரு தடுப்பணை கட்டப்படுகிறது. இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்.
காவிரியில் மாயனூர் என்ற இடத்தில் நான் அப்போது தடுப்பணை கட்டினேன். அந்த இடங்கள் முள் காடுகளாக இருந்தது மாறி வாழைத்தோட்டங்க ளாக மாறி நிலங்களே அதிக விலைக்கு விற்கிறது.
வேலூர் மாவட்டத்தில் இறைவன்ங்காடு, கவசம்பட்டு உள்பட 7 இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது.
இந்த ஆண்டு சிப்காட் தொழிற்சாலை காட்பாடியில் கொண்டுவரப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூரில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் குமார் , காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






