search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது.
    • பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது. அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம். அவர் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும்.

    பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் தெரிந்தும் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
    • கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

    பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-

    1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.

    2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.

    3. சொந்த வாகனம் கிடையாது.

    4. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.

    5. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    6. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

    7. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.

    8. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.

    9. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.

    10. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.

    11. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.

    12. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களின் உயிர் அபாயகர சூழலில் உள்ளது.
    • நன்கொடை பெற்றது அனைவருக்கும் தெரியும்.

    இந்திய மக்களின் வாழ்க்கை அபாயகர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் இலவசமாக இதய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெயின்பூரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், "அரசாங்கத்தின் முடிவு காரணமாக அரசியலமைப்பு மட்டுமின்றி மக்களின் உயிரும் அபாயகர சூழலில் உள்ளது."

    "கொரோனா காலக்கட்டத்தில் இந்த அரசாங்கம் தடுப்பூசியை எப்படி கையாண்டது என்பதும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் நன்கொடை பெற்றதும் அனைவருக்கும் தெரியும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று இதய பரிசோதனை செய்து கொள்கின்றனர்."

    "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, நாடு முழுக்க மருத்துவமனைகளில் இ.சி.ஜி. போன்ற இதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எங்கு, எப்போது பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும், எடுத்துக் கொள்ளலாம். நாட்டு மக்களின் வாழ்க்கையை பா.ஜ.க. தலைவர்கள் அபாயத்தில் தள்ளிவிட்டனர்," என்று தெரிவித்தார். 

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியே வந்து வாக்களிக்க சிரமமாக இருக்கும்.
    • 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைக்கிறது.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. 14 இடங்களுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 2-வது கட்டமாக வருகிற 7-ந்தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    தற்போது நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெளியேற வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு வெயில் முக்கிய காரணம்.

    வழக்கமாக காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளரக்ள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெயில் காரணமாக வாக்குப்பதிவு நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கர்நாடகா மாநில பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

    கார்நாடகா மாநில பா.ஜனதா அந்த மனுவில் "காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாக்களிக்க மக்கள் வெளியே வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். 14 தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு கர்நாடகாவில் வெப்பநிலை 37 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வருகிறது. அபாய நிலையை வெப்பநிலை எட்டியுள்ளது. இது தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க கஷ்டமானதாக இருக்கும். வாக்குப்பதிவை சிறப்பாக நடத்த, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
    • வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால் இடைக்கால ஜாமின் குறித்து பரிலீசனை.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த தடயங்களும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் 2023-க்கு முந்தையவை. அனைத்தும் ஜூலை 2023-ல் உடையது. மணிஷ் சிசோடியா வழக்கில் உள்ள ஆதாரங்கள் அப்படியே உள்ளது" என கெஜ்ரிவால் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் "இந்த வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால், நாங்கள் தேர்தல் காரணமாக இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலிக்கலாம். 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இதுவரை முடிவு செய்யவில்லை.

    இரு தரப்பினரும் ஆச்சரியப்படாமல் இருக்க நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு இரு தரப்பிலும் தயாராகி வரவேண்டும்" கேட்டுக்கொண்டனர்.

    • எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தல்.
    • தூதரகத்துடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்துகிறோம்.

    இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு வர்த்தக ரீதியிலான வான்வழி போக்குவரத்து திறக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு பயணம் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் தங்களது வான்வழியை வர்த்தக போக்குவரத்திற்கு திறந்துள்ளன. எனினும், இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், வான்வழி எவ்வளவு காலம் வரை திறக்கப்பட்டு இருக்கும் என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.

    "அந்த பகுதியில் நிலவும் சூழலை தொடர்ச்சியாக உற்று கவனித்து வருகிறம். ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழியை கடந்த சில நாட்களாக திறந்து வைத்துள்ளன. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும், இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்துகிறோம்," என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

    • ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி- மரியம் ஆலம்.
    • மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பர்தாமன்-துர்காபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் இங்கே அனுபவிப்பதற்கான வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கான என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் இந்துக்களை திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாம் தர குடிமக்களாக்கியுள்ளது. காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்றி தலித் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடுகளை பறித்து ஜிஹாதி வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகிறது.

    மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக அளிக்க முடியுமா? என காங்கிரஸ்க்கு சவால் விட்டிருந்தேன். ஆனால், அவர்கள் அமைதியாக உள்ளனர். காங்கிரசின் இளவரசர் பயந்து ரேபரேலியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்காள அரசுக்கு மனிதாபிமானத்தை விட சமரச அரசியல்தான் மிகவும் முக்கியமானது. இதனால் சந்தேஷ்காளி குற்றவாளி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து வருகிறது. மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி 2024 தேர்தலில் இதுவரை எந்த காலத்திலும் மிகவும் குறைவான எண்ணிக்கை என்ற வகையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும்.

    காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு மாநிலங்களை மூலும் பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளார். இதன்மூலம் அக்கட்சியின் உடனடித் தோல்வியை முன்னதாகவே கண்டேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமரச அரசியலுக்காக சிஏஏ-வை எதிர்க்கிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் சமரச அரசியலை மட்டுமே நம்புகின்றனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாவல் கிஷோர் ஷக்யாவை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், சல்மான் குர்ஷித்தின் உறவினருமான (Niece- சகோதரர் மகள், அல்லது சகோதரி மகள்) மரியா ஆலம் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மரியா ஆலம் கூறியதாவது:-

    புத்திசாலிதனத்தோடு, உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக ஒன்றிணைந்து ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி. அரசியலமைப்பு, ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன். மனிதாபிமானம் (மனிதநேயம்) அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

    நாடு, அதன் அழகு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க விரும்பினால், எந்தவிதமான உந்துதலையும் பெறாமல் புத்திசாலித்தனமாக வாக்களிக்களியுங்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களை புறக்கணியுங்கள்.

    இவ்வாறு மரியம் ஆலம் பேசியிருந்தார்.

    இந்த வீடியோ வைரலாக பரவி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீதும், அவர் பேசியபோது அங்கிருந்து சல்மான் குர்ஷித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.

    இது தொடர்பாக முன்னதாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி முஸ்லிம்கள் ஜிஹாத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. இது மிகவும் கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்துள்ளது. மதராஸில் இருந்து வந்த சிறுவனிடம் இருந்து வரவில்லை. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கூறிக் கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா கூட்டணி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை இழிவுப்படுத்தியுள்ளது.

    ஒருபுறம் SC, ST, OBC மற்றும் பொது பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கூட்டணி மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறது. அவர்களின் எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் ஜிஹாத் வாக்கு வங்கி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச ஜிஎஸ்டி தேவையா?
    • பிற நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

    வாகனங்கள் விலை உயர்ந்து வருவதற்கு மத்திய அரசு விதிக்கும் அதிக ஜிஎஸ்டி விகிதங்களே காரணம் என, மத்திய அரசு மீது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மத்திய அரசின் அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் அதிக ஜிஎஸ்டி விகிதங்களே வாகனங்களின் கணிசமான விலை உயர்வுக்குக் காரணம்.

    பிஎஸ்6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தான் எதிர்க்கவில்லை, ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச ஜிஎஸ்டி தேவையா?

    இந்தியாவின் ஜிஎஸ்டி விகிதங்களை ASEAN (தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கம்) மற்றும் பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்ட ராஜீவ் பஜாஜ், அந்த நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

    இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18% அல்லது 12%-ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.
    • ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.

    பள்ளி என்பது குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்கும் இடமாகவும், அவர்களின் கனவுகளை நினைவாக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு குருவாக பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.

    சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே வாய் சண்டை முற்றி ஒருவரையொருவர் தலைமுடியை போட்டு இழுத்து, அடித்து சண்டையிடுகின்றனர்.

    இதனை அந்த பள்ளியின் வேலை பார்க்கும் ஊழியர் பார்த்து இருவரையும் பிரித்து சண்டையை நிறுத்தினார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரஜ்வல் வீட்டில் வேலைப் பார்த்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேவண்ணா மீது வழக்கு.
    • தற்போது பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ள நிலையில், ஆட்கடத்தல் வழக்குப்பதிவு.

    கர்நாடகா மாநிலத்தில் மக்களவை எம்.பி.யாக உள்ள தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது வீட்டிடில் வேலைப்பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த புகார் தொடர்பாக தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக ரேவண்ணா நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கக்கூடிய பிரிவில்தானே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு ஏன் முன் ஜாமின் மனு தாக்கல் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர் முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார்.

    இந்த நிலையில் தனது தாயார் கடத்தப்பட்டுள்ளதாக ரேவண்ணா மீது இளைஞர் ஒருவர் மைசூரு கே.கே.ஆர். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரேவண்ணா அழைத்ததாக தனது தாயாரை அவரது உதவியாளர் அழைத்துச் சென்றார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலீசார் ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு ரேவண்ணா செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    • பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோயில்- மசூதி, தாலி, பசு, எருமை.
    • 2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும்.

    பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்களுடைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காமல் வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    குறிப்பாக எஸ்.டி., எஸ்.சி., ஓபிசி-க்களின் இடஒதுக்கீடு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும், நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சு குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

    இந்தியில் கிட்டதட்ட 1.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. டெக்னிக்கல் மற்றும் படிப்பு தொடர்பான அனைத்து பிரிவுகள் உள்பட ஏறத்தாழ 6.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால் பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோவில்- மசூதி, தாலி, பசு, எருமை.

    2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். இன்னும் ஏழு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும். வேலைவாய்ப்பு, ஏழைகள், விவசாயிகள், விலைவாசி, வளர்ச்சி, இளைஞர்கள், அறிவியல், முதலீடு போன்ற வார்த்தைகளை அவர் மறந்துவிட்டார்.

    இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.
    • அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்தது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.

    அதில், ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேசத்தின் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது:-

    பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை தனது தீவிரமான பரப்புரையின்மூலம் ஒற்றை ஆளாக தவிடுபொடியாக்கி வருகிறார் பிரியங்கா காந்தி.

    காங்கிரஸ் கட்சிக்காக அவர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் பிரியங்கா காந்தி சுருங்கிவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×