என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சிக்னல் குறுந்தகவல் செயலியில் அதிக பயனர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
     

    சிக்னல் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் தொடர்ந்து புது அம்சங்களை வழங்கி வருகிறது. புதிய பிரைவசி பாலிசி விவகாரம் காரணமாக சிக்னல் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிக்னல் இவ்வாறு செய்கிறது.

    புதிய அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாட் வால்பேப்பர், அனிமேடெட் ஸ்டிக்கர், ப்ரோபைல் பகுதியில் அபவுட் எனும் உட்பிரிவு உள்ளிட்டவை சிக்னல் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றன.

     டெலிகிராம்

    முதற்கட்டமாக சிக்னல் பீட்டா பதிப்பில் 24 அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் பயனர்களுக்கு அழைப்பின் போது குறைந்த டேட்டா பயன்படுத்த கோரும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

    சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை ஐஒஎஸ் தளத்தில் இம்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் இதுவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படவில்லை.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கி உள்ளது.


    இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 5ஜி, கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கி உள்ளது.

    புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் சலுகை, பலன்கள் மற்றும் அப்கிரேடு போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    இதுதவிர கேலக்ஸி எஸ்21 பிளஸ் வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 வாங்கும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எஸ்21 சீரிஸ்

    அப்கிரேடு சலுகையின் படி கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலுக்கு ரூ. 7 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 பிளஸ் மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் மற்றும் கேலக்ஸி எஸ்21 வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை பழைய ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்வோருக்கு மட்டும் கிடைக்கும்.

    கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10, நோட் 10 சீரிஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வாங்கும் போது ரூ. 10 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 பிளஸ் வாங்கும் போது ரூ. 7 ஆயிரமும், கேலக்ஸி எஸ்21 வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ்: பேண்டம் பிளாக், பேண்டம் சில்வர், பேண்டம் வைலட், பேண்டம் வைட், பேண்டம் கிரே மற்றும் பேண்டம் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

    கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விலை விவரம்

    கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 69,999
    கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 73,999
    கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 81,999
    கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 85,999
    கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 1,05,999
    கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,16,999 

    கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இயர்போன்களின் விற்பனையும் இந்தியாவில் துவங்கி உள்ளது. விசேஷ சலுகையாக கேலக்ஸி பட்ஸ் ப்ரோ வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி கேஷ்பேக் பெற முடியும்.
    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்21 மற்றும் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி எம்21 மாடலுக்கு இந்த அப்டேட் மார்ச் மாத வாக்கில் வழங்கப்பட இருந்தது. எனினும், முன்கூட்டியே இந்த அப்டேட் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனிற்கான அப்டேட் M215FXXU2BUAC எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. கேலக்ஸி எப்41 மாடலுக்கான பில்டு நம்பர் F415FXXU1BUAC ஆகும். புதிய ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் இதில் இடம்பெற்று இருக்கிறது.

     கேலக்ஸி எப்41

    புதிய அப்டேட் இரு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள், மேம்படுத்தல்கள் மற்றும் பயன்பாட்டு அளவில் மாற்றங்களை வழங்குகிறது. இவற்றில் வடிவமைப்பு மாற்றம், மேம்பட்ட செயல்திறன், அதிகளவு கஸ்டமைசேஷன், பல்வேறு புதிய அம்சங்கள் என ஏராளமான மாற்றங்கள் இடம்பெற்று இருக்கிறது. 

    இரு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி மற்ற கேலக்ஸி எம் மற்றும் ஏ சீரிஸ் மாடல்களுக்கும் இந்த அப்டேட் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    போக்கோ பிராண்டின் புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்திய சந்தையில் மற்றொரு போக்கோ ஸ்மார்ட்போன் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. போக்கோ பிராண்டு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த எம்2 ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்த மைல்கல் கடந்துள்ளது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் 2020 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விற்பனை மைல்கல் தவிர சியோமி மற்றும் ரியல்மியை தொடர்ந்து மூன்றாவது பெரிய ஆன்லைன் பிராண்டாக போக்கோ இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ரூ. 10,999 மற்றும் ரூ. 12,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு பின் இவற்றின் விலை முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 10,999 என குறைக்கப்பட்டது.

     போக்கோ எம்2

    போக்கோ எம்2 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
    - ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
    - 6 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 
    - 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை வழங்கி வருகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வெப் அல்லது டெஸ்க்டாப் தளத்தை பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.

    வாட்ஸ்அப் பிரைமரி சாதனம் மற்றும் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்கும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் உரையாடல்களை துவங்கும் முன் கைரேகை அல்லது பேஸ் அன்லாக் போன்ற சோதனையை கொண்டு மற்றவர்கள் வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்குவதை தவிர்க்க உதவுகிறது.

     வாட்ஸ்அப்

    ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய பாதுகாப்பு அம்சத்தை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் More options ⇾ Link a Device ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின் வாட்ஸ்அப் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை இயக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிவிக்கும். 

    ஐபோன்களில் Link a Device ⇾ OK ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். பின் பயனர்கள் திரையில் தெரியும் கியூஆர் கோட் கொண்டு வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பயன்படுத்த துவங்கலாம்.
    ஏர்டெல் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை விரைவில் வழங்க தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி சோதனையை ஐதராபாத் நகரில் வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சோதனை வர்த்தக நெட்வொர்க்கில் நடத்தப்பட்டது. வெற்றிகர சோதனையை தொடர்ந்து நாடு முழுக்க விரைவில் 5ஜி சேவையை வழங்க ஏர்டெல் தயாராகி வருகிறது.

    இதற்கென ஏர்டெல் நிறுவனம் Sub-6GHz NSA நெட்வொர்க் தளத்தை 1800MHz பேண்ட் பயன்படுத்தி இருக்கிறது. இதன் உபகரணம் 1800/2100/2300MHz மற்றும் sub-GHz பேண்ட்களான 800/900 MHz உள்ளிட்டவைகளுடன் இயங்கும் திறன் கொண்டது.

     கோப்புப்படம்

    ஆற்றல் மிக்க ஸ்பெக்ட்ரம் ஷேரிங் தொழில்நுட்பம் கொண்டு ஏர்டெல் நிறுவனம் ஒரே ஸ்பெக்ட்ரமில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்களை இயக்க இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் ஏர்டெல் 5ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    4ஜி சேவையை போன்றே இந்த தொழில்நுட்பமும் படிப்படியாக பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய சோதனைகளில் ஒப்போ ரெனோ5 ப்ரோ மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 3Gbps வேகத்தில் இணைய வசதி கிடைத்ததாக கூறப்படுகிறது. இது முன்கூட்டியே சோதனையை துவங்கிய ஜியோவின் 1Gbps-ஐ விட அதிகம் ஆகும்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

     கேலக்ஸி எம்02

    இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஒன்யுஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்02 விலை ரூ. 7 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வியாபாரங்கள் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கின்றன.

    டிசம்பர் 26 ஆம் தேதி வரையிலான காலாண்டு வாக்கில் இந்திய வியாபாரத்தில் ஆப்பிள் நிறுவனம் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

    இத்துடன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவன வருவாய் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து ரூ. 8,14,270 கோடியாக உள்ளது. இது சர்வதேச அளவில் முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வளர்ச்சிக்கு ஐபோன் 12 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

     ஐபோன் 12

    இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் சில்லறை வியாபாரத்தை பிரத்யேக ஆன்லைன் ஸ்டோர் மூலம் துவங்கியது. இதுதவிர ஆப்லைன் ஸ்டோர்களை திறப்பதிலும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து திட்டமிட்டு அதற்கென கவனம் செலுத்தி வருகிறது.

    2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 93 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. மேலும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பங்குகளை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 
    சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு தணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் யூடியூப், கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் பதில் அளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.


    சென்னையில் தவறான வார்த்தைகளில் கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

    தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் அதிகப்படியாக செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் அதிக அளவில் சமூகவலைதளங்களை உபயோகிக்க வாய்ப்பு உள்ளது. 

    சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த படங்கள், வார்த்தைகள் நிறைய வருவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. யூடியூப்பில் ஆபாசமாக பதிவிட்ட சில பதிவுகள் நீக்கம் செய்திருந்தாலும் பல பதிவுகள் நீக்கம் செய்யப்படவில்லை. பலர் நூதன முறையில் ஆபாச வீடியோக்கள், பதிவுகளை வெளியிடுகின்றனர். 

    யூடியூப்பை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தடை செய்துள்ளன. வருமுன் காப்பதே சிறந்தது. எனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகளை தணிக்கை செய்ய வேண்டும்.

     கூகுள்

    மேலும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கட்டுப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் வழிமுறைப்படுத்தவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என நெல்லையை சேர்ந்த உமாமகேசுவரன், மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். புகார்கள் ஏதேனும் வரும் பட்சத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து நீதிபதிகள், யூடியூப், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
    48 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டு-டோன் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

     போக்கோ எம்3

    போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
    இந்திய சந்தையில் மூன்றாம் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான மூன்றாவது காலாண்டில் மட்டும் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்று இருக்கிறது.

    ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ உள்நாட்டில் வாய்ஸ் கால் சேவையை இலவசமாக வழங்க துவங்கியது. விதிகளில் தளர்வு மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்வு உள்ளிட்டவை புது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    டெலிகாம் சந்தையில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. 2020 ஆண்டு மட்டும் ஜியோ நிறுவனத்தில் சுமார் 4 கோடி பேர் இணைந்துள்ளனர். 

    இது டெலிகாம் துறையில் இதுவரை இல்லாத அளவு அதிகம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவின் ARPU ரூ. 151 ஆக அதிகரித்து இருக்கிறது. ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.08 கோடியாக இருக்கிறது. ஜியோவின் டேட்டா பயன்பாடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 28.4 சதவீதம் அதிகம் ஆகும்.
    நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    5ஜி வசதி கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் முதல் காலாண்டு அல்லது இரண்டாம் காலாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 1.4, நோக்கியா 6.4 5ஜி மற்றும் நோக்கியா 7.4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஹெச்எம்டி குளோபல் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

    நோக்கியா 1.4 என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.51 இன்ச் ஹெச்டி எல்சிடி ஸ்கிரீன், 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமராக்கள், 5 எம்பி செல்பி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    நோக்கியா 6.4 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா அல்லது 24 எம்பி சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ரா கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

    நோக்கியா 7.3 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 24 எம்பி செல்பி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ×