என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோல்களில் பயன்படுத்த புது வி.ஆர். கண்ட்ரோலர்களை அறிமுகம் செய்தது.


    பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல்களுக்கான புது வி.ஆர். கண்ட்ரோலர்களை சோனி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. புது கண்ட்ரோலர்கள் ஆர்ப் வடிவம் கொண்டுள்ளன. இவை தற்போதைய மூவ் மோஷன் கண்ட்ரோலர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. 

     சோனி வி.ஆர். கண்ட்ரோலர்

    மேலும் புது வி.ஆர். கண்ட்ரோலர்கள் பேஸ்புக்கின் ஆகுலஸ் குவெஸ்ட் 2 கண்ட்ரோலர்களை போன்றே இருக்கின்றன. புது வி.ஆர். கண்ட்ரோலர்களில் கட்டை விரல் படும் பகுதியில் ட்ரிகர் பட்டன் மற்றும் சிறு ஜாய் ஸ்டிக் உள்ளது. புது கண்ட்ரோலர்கள் வழங்கும் வித்தியாசமான அம்சங்களை சோனி நிறுவனம் தனது வலைதளத்தில் விரிவாக பட்டியலிட்டு இருக்கிறது.

    கடந்த மாதம் பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கான அடுத்த தலைமுறை வி.ஆர். ஹெட்செட் உருவாக்கப்பட்டு வருவதாக சோனி டீசர்களில் தெரிவித்தது. தற்போது இவற்றுடன் பயன்படுத்தக்கூடிய கண்ட்ரோலர்களை மட்டும் சோனி அறிமுகம் செய்து இருக்கிறது. 

    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 மற்றும் ஏ72 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த இரு மாடல்களும் ஆசம் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சிறு பன்ச் ஹோலினுள் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ52 அம்சங்கள்

    - 6.5 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி 8nm பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS
    - 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.2
    - 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - சாம்சங் பே 
    - 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
    - 5ஜி SA / NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
    - யுஎஸ்பி டைப் சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

     சாம்சங் கேலக்ஸி ஏ72

    சாம்சங் கேலக்ஸி ஏ72 அம்சங்கள்

    - 6.7 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி 8nm பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS
    - 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.4, OIS
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.2
    - 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - சாம்சங் பே 
    - 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் ஆசம் பிளாக், ஆசம் வைட், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 26,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 34,999 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 37,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் பிராண்டிங்கில் புது ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியி ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இறுக்கிறது.

    புதிய இன் 1 ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மே மாத வாக்கில் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து  உள்ளது.

     மைக்ரோமேக்ஸ் இன் 1

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பர்பிள் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 1 (4 ஜிபி +64 ஜிபி) மாடல் விலை ரூ. 10499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் அறிமுக விற்பனையில் இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சிறுவர்கள் மட்டும் பயன்படுத்தும் அம்சங்கள் நிறைந்த இன்ஸ்டாகிராம் புது வெர்ஷன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய புது இன்ஸ்டாகிராம் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இது 13 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புது செயலி பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. 

    இன்ஸ்டாகிராம் துணை தலைவர் விஷால் ஷா தனது ஊழியர்களுக்கு எழுதிய பதிவின் விவரங்கள் தனியார் செய்து நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராமின் ஹெச்1 பிரியாரிட்டி பட்டியலில் புது செயலி சேர்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான, அதே சமயம் நேர்மையாகவும் பணியாற்றி 13 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய இன்ஸ்டாகிராம் செயலியை உருவாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறுவர்களுக்கு பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. 

    புது செயலி யூடியூப் கிட்ஸ் போன்றே செயல்படும். இதில் சிறுவர்களுக்கான தரவுகள் வழக்கத்தைவிட அதிகளவு இடம்பெற்று இருக்கும். புதிய இன்ஸ்டாகிராம் பார் கிட்ஸ் செயலி இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி மற்றும் பேஸ்புக் துணை தலைவர் பவ்னி திவாஞ்சி ஆகியோர் மேற்பார்வையில் உருவாகிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் அந்த விஷயத்தில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஜனவரி மாதத்திற்கான டெலிகாம் சந்தாதாரர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 2021 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவை விட 300 மடங்கு அதிக வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. 

    ஜனவரி மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் மொத்தம் 58.9 லட்சம் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே மாதத்தில் ஜியோ நிறுவனத்தில் 19.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையிலும், டெலிகாம் சந்தையில் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

     ஜியோ

    டிராய் வெளியிட்டு இருக்கும் தற்போதைய அறிக்கையின் படி ஜியோ சேவையை சுமார் 41.073 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒட்டுமொத்த சந்தையில் 35.30 சதவீதம் ஆகும். ஏர்டெல் நிறுவனம் 34.460 கோடி பயனர்களையும், வி சேவையை 28.596 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர். 

    பி.எஸ்.என்.எல். நிறுவன சேவையை சுமார் 11.869 கோடி  பேர் பயன்படுத்தி வருகின்றனர். வளர்ச்சி விகிதத்தில் ஏர்டெல் 1.74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜியோ 0.48 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 
    ஐகூ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இந்திய சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் ஐகூ 7 ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது இரண்டு புதிய ஐகூ ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இதில் ஒன்று ஐகூ 7 என்றும் மற்றொரு மாடல் ஐகூ நியோ 5 என கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் அறிமுகமானதில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஏற்கனவே ஐகூ 7 இந்திய வேரியண்ட் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

     ஐகூ 7

    பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு ஐகூ ஸ்மார்ட்போன்கள் I2009 மற்றும் I2011 எனும் மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. இதில் I2009 ஐகூ 7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றும் I2011 ஐகூ நியோ 5 மிட்-ரேன்ஜ் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். தளத்தில் I2012 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. 

    தற்போதைய தகவல்களின்படி ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஐகூ பிராண்டின் ஐகூ 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீடு சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் வட்ட வடிவ டையல், சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஒப்போ வாட்ச் போன்றே புதிய ஒன்பிளஸ் வாட்ச் மாடலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் பேண்ட் மாடலை தொடர்ந்து ஒன்பிளஸ் அறிமுகம் செய்யும் இரண்டாவது அணியக்கூடிய சாதனமாக ஒன்பிளஸ் வாட்ச் இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஒன்பிளஸ் பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 

     ஒன்பிளஸ் வாட்ச்

    தற்போதைய தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் 46எம்எம் டையல் மற்றும் சில்வர், பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் ஆட்டோமேடிக் வொர்க்-அவுட் டிடெக்ஷன், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 சென்சார், ஸ்டிரெஸ், ஸ்லீப் டிராக்கிங் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது போன்ற வசதியும் வழங்கப்படலாம். இதில் வழங்கப்படும் பேட்டரி 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதுதவிர வார்ப் சார்ஜ் தொழில்நுட்பம், 4 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக சீனாவை சேர்ந்த நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது.


    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளாக சியோமி நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. தற்போதைய தகவல்களின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் 2021 ஆண்டு மூன்றாவது இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் மூன்றாவது பெரும் நிறுவனமாக இருக்கிறது.

    ஹூவாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சியோமி நிறுவனம் உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக உருவெடுக்கும் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆசியா பசிபிக், மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் சியோமி கவனம் ஈர்த்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் 2021 ஆண்டிற்குள் சியோமி உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய சந்தைகளில் சியோமி நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. இதேபோன்று மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளிலும் சியோமி சாதனங்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.

    2021 சீன ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களுக்கான ஆண்டாக இருக்கும். சியோமி மட்டுமின்றி ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் ஆசியா பசிபிக் பகுதிக்கான முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறலாம் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் லிண்டா சு தெரிவித்தார். 
    ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரத்தை அதன் சி.இ.ஒ. அறிவித்து இருக்கிறார்.


    ரியல்மி நார்சோ 30 சீரிஸ் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார். புதிய ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாத வாக்கில் வெளியிடப்பட்டது. சமீபத்திய யூடியூப் நேரலையில், ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நார்சோ 30 4ஜி வெர்ஷன் மட்டும் வெளியிட திட்டமிட்டு, தற்போது 4ஜி மட்டுமின்றி 5ஜி வெர்ஷனும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

     ரியல்மி நார்சோ 30 ப்ரோ

    மேலும் ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒரே நிகழ்வில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ரியல்மி நார்சோ 30 பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. 

    ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ மாடல்கள் தற்போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ரியல்மி யுஐ கொண்டுள்ளது. விரைவில் இரு மாடல்களுக்கும் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     
    ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான தனது முதல் அறிமுக நிகழ்வை ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் மேம்பட்ட பிராசஸர், கேமரா, மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட புதிய ஐபேட் ப்ரோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புது மாடல்களும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் அதே வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடலில் உள்புற அம்சங்களான பிராசஸர் மற்றும் கேமரா சிஸ்டம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

     ஐபேட் ப்ரோ

    ஆப்பிள் சிலிகான் எம்1 சிப்செட்-க்கு இணையான செயல்திறன் வழங்கும் புது பிராசஸர் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை மினி எல்இடி பேனல் கொண்ட முதல் ஐபேட் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
     
    இவைதவிர புதிய ஐபேட் ப்ரோ தன்டர்போல்ட் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஐபேட் ப்ரோ மாடலை மாணிட்டர், ஹார்டு டிரைவ் என பல்வேறு இதர சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் மாடல்கள் அசத்தல் சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒப்போ நிறுவனம் எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை சில தினங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் விற்பனையும் இன்று (மார்ச் 17) துவங்குகிறது.

    ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி அமேசான் தளத்தில் ரூ. 25,990 விலையிலும், ஒப்போ எப்19 ப்ரோ ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் முன்னணி வலைதளங்களில் ரூ. 21,490 எனும் துவக்க விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. 

     ஒப்போ எப் 19 ப்ரோ பிளஸ்

    இன்று துவங்கி மார்ச் 19 வரை இரு மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் அசத்தலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பணம் செலுத்தாமல் மாத தவணை முறையை பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    மார்ச் 20 ஆம் தேதிக்குள் புது ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் one-time screen replacement வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் சேதமடைந்தால் மாற்றிக் கொள்ளலாம். மார்ச் 23 ஆம் தேதிக்குள் வாங்குவோர் ஒப்போ என்கோ டபிள்யூ11 வாங்கும் போது ரூ. 999 தள்ளுபடியும், ஒப்போ பேண்ட் ஸ்டைல் ரூ. 2499 விலைக்கும் வாங்க முடியும்.

    இத்துடன் உறுதியான பை பேக் சலுகை வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 70 சதவீதம் பை பேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 19 ஆம் தேதிக்குளஅ வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எப்19 ப்ரோ மாடலுக்கு ரூ. 1500 உடனடி தள்ளுபடி பெறலாம். 
    ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.


    ரெட்மி பிராண்டு ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது டிவி 50, 55 மற்றும் 65 இன்ச் 4கே மாடல்கள் ஆகும். இவற்றில் டால்பி விஷன், ஹெச்டிஆர், ஹெச்டி ஆர் 10 பிளஸ், ஹெச்எல்ஜி மற்றும் ரியால்டி புளோ டெக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் பிரத்யேக MEMC சிப், ஆட்டோமேடிக் லோ லேடன்சி மோட் உள்ளது.

    இந்த டிவிக்கள் ஆண்ட்ராய்டு டிவி 10 ஒஎஸ் கொண்டுள்ளன. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அனைத்து ஹெச்டிஎம்ஐ போர்ட்களிலும் ஹெச்டிஎம்ஐ 2.1 வசதி கொண்டுள்ளன. மேலும் இது டால்பி அட்மோஸ் வசதி, 30 வாட் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கிறது.  

     ரெட்மி ஸ்மார்ட் டிவி

    டிவி ரிமோட்டில் எம்ஐ லோகோவுக்கு மாற்றாக பேட்ச்வால் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த ரிமோட் குவிக் மியூட், குவிக் செட்டிங் மற்றும் குவிக் வேக் போன்ற ஆப்ஷன்களுக்கான பட்டன் கொண்டுள்ளது. புதிய ரெட்மி டிவி மாடல்கள் குவாட்கோர் மீடியாடெக் எம்டி9611 பிராசஸர், மாலி ஜி52, 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்50 மாடல் விலை ரூ. 32,999, எக்ஸ்55 மாடல் ரூ. 38,999 மற்றும் டாப் எண்ட் எக்ஸ்65 மாடல் விலை ரூ. 57,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிவி மாடல்கள் அமேசான், எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் மார்ச் 26 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ×