என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் செயல்பட்டு வந்த சுமார் 100 கோடிக்கும் அதிகமான அக்கவுண்ட்களை நீக்கியதாக தெரிவித்து இருக்கிறது.


    பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலி அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் நீக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்தது.

    இது மட்டுமின்றி கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து பரவிய 1.2 கோடி போலி தகவல்கள் அடங்கிய பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில், இதுபற்றிய போலி தரவுகள் அதிக எண்ணிக்கையில் பரவி வந்தது.

    பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் போலி செய்தி பரவலை எவ்வாறு கையாள்கின்றன என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விரைவில் விளக்கமளிக்க இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது போலி அக்கவுண்ட் நீக்கம் பற்றிய தகவல்களை பேஸ்புக் வெளியிட்டு உள்ளது.
    போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எப்3 ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.


    போக்கோ நிறுவனத்தின் புதிய எப்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரெட்மி கே40 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷன் ஆகும். புது போக்கோ எப்3 மாடலில் 6.67 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 20 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4520 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

     போக்கோ எப்3

    போக்கோ எப்3 அம்சங்கள் 

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் 
    - அட்ரினோ 650 GPU
    - 6 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
    - 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
    - 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
    - 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.4
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - 4520 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் வைட், நைட் பிளாக் மற்றும் டீப் ஓசன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 349 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 30,100 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 399 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 34,410 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ப்ரோ மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் இது ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     போக்கோ எக்ஸ்3 ப்ரோ

    போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 8 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ் 
    - 8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் சென்சார், f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5160 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக், பிராஸ்ட் புளூ மற்றும் மெட்டல் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 249 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 21,480 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 299 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,790 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ பிராண்டு லேப்டாப் மாடல்கள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், ஜியோபுக் பெயரில் குறைந்த விலை லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய 5ஜி ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகி இருப்பதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அல்லது ஆண்ட்ராய்டு கோ தளத்தை சார்ந்து இயங்கும் ஜியோஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு கோ தளம் என்ட்ரி லெவல் ஹார்டுவேர் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும்.

     ஜியோ

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ ஒஎஎஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஜியோபுக் லேப்டாப் மாடலும் இந்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த லேப்டாப் ஹெச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4ஜி மோடெம், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பரடுகிறது.
    ட்விட்டரில் மேற்கொள்ளப்பட்ட ட்விட் ஒன்று ரூ. 18 கோடிக்கு ஏலம் விடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி மேற்கொண்ட முதல் ட்விட்டர் பதிவு ரூ. 18 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கிடைத்த தொகையை பிட்காயின்களாக தொண்டு நிறுவனத்திற்கு வழங்குகிறார். ஏல தொகை முழுவதும் உடனடியாக பிட்காயின்களாக மாற்றப்பட்டு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

     ஜாக் டார்சி

    மார்ச் 6, 2006 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவு என்.எப்.டி. (non-fungible token) ஆக வேல்யுபில்ஸ் எனும் தளத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட பிரிட்ஜ் ஆரகிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சினா எஸ்டவி ட்விட்டர் பதிவை ஏலத்தில் வாங்கினார்.

    `நீங்கள் வாங்குவது ட்விட்டர் பதிவின் டிஜிட்டல் சான்றிதழ் ஆகும். இதனை கிரியேட்டர் வெரிபை மற்றும் கையொப்பம் இட்டு கொடுப்பதால், இது பிரத்யேகமானதாக மாறுகிறது.' என வேல்யுபில்ஸ் தெரிவித்து இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவின் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் SM-M626B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமகம் செய்யப்பட்ட கேலக்ஸி எப்62 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எப்62 மாடலில் 7000 எம்ஏஹெச் பேட்டரி, 64 எம்பி குவாட் கேமரா, sAMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    தற்சமயம் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கும் SM-M626B/DS மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதன் 4ஜி வெர்ஷன் SM-M625 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. முந்தைய கேலக்ஸி ஏ32 4ஜி வேரியண்ட் SM-A325 எனும் மாடல் நம்பரும், 5ஜி வேரியண்ட் SM-A326 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. 

    சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9825 4ஜி பிராசஸர் கொண்டிருந்ததால், கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் வேறு பிராசஸர் அல்லது இதே பிராசஸருடன் கூடுதலாக எக்சைனோஸ் 5100 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சொந்தமாக சமூக வலைதள சேவையை துவங்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதள சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சமூக வலைதளம் பற்றிய தகவலை டிரம்ப் முன்னாள் ஆலோசகர் தெரிவித்தார்.

    டிரம்ப் மீண்டும் சமூக வலைதளங்களில் திரும்புகிறார், சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இது நடைபெறலாம் என ஜேசன் மில்லர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

     கோப்புப்படம்

    இது போட்டியை முற்றிலும் மாற்றி அமைக்க போகிறது. டிரம்ப் என்ன செய்யப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இது அவரின் சொந்த தளமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜேசன் மில்லர் டிரம்ப் தேர்தல் பரப்புரை பணிகளில் மூத்த பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனம் இரண்டு மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த பிரேசில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
     

    பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான ப்ரோகான்-எஸ்.பி. ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 14,49,26,800 அபராதம் விதித்து உள்ளது. ஐபோன் 12 மாடலுடன் சார்ஜர் வழங்காததே இதற்கு காரணம் என அந்த ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

    தவறாக விளம்பரப்படுத்துதல், சார்ஜர் இல்லாமல் சாதனத்தை விற்பது மற்றும் முறையற்ற வாசகங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு ப்ரோகான்-எஸ்.பி. அபராதம் விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. சார்ஜர் வழங்காமல் இருப்பதால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை ஆப்பிள் சரியாக விளக்கவில்லை என்றும் ப்ரோகான்-எஸ்.பி. தெரித்து இருக்கிறது.

     ஐபோன் 12

    முன்னதாக ஐபோன் 12 உடன் சார்ஜர் வழங்கப்படாததால், அதன் விலையை குறைக்க ப்ரோகான்-எஸ்.பி. ஆப்பிள் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தது. எனினும், ஆப்பிள் சார்பில் எந்த பதிலும் வழங்கப்படாததால் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

    “பிரேசில் நாட்டில் கடுமையான நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கி வருவதை ஆப்பிள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சட்ட விதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என ப்ரோகான்-எஸ்.பி. ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பெர்னான்டோ கேபெஸ் தெரிவித்தார். 
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவுகளை அந்த நாட்டில் துவங்கி இருக்கிறது.


    ஒன்பிளஸ் வாட்ச் மாடலுக்கான முன்பதிவு சீனாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிவிப்பு வெளியாகி சில தினங்களே ஆன நிலையில், தற்போது முன்பதிவு துவங்கி இருக்கிறது.

    ஒன்பிளஸ் வாட்ச் மாடல் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் விர்ச்சுவல் நிகழ்வில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாக இருக்கிறது. முன்பதிவு மட்டுமின்றி ஒன்பிளஸ் வாட்ச் ரென்டர்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்வாட்ச் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

     ஒன்பிளஸ் வாட்ச்

    சீனாவில் ஒன்பிளஸ் வாட்ச் முன்பதிவு செய்ய CNY50 இந்திய மதிப்பில் ரூ. 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் வாட்ச் வாங்கும் போது CNY 100 இந்திய மதிப்பில் ரூ. 1,100 உடனடி தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் வாட்ச் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தற்போதைய தகவல்களின்படி ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் ப்ளூடூத், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டண்ட், வட்ட வடிவ டையல் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஹெச்எம்டி குளோபல் உருவாக்கி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம்  செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

    கீக்பென்ச் விவரங்களின்படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். மற்ற அம்சங்களை பொருத்தவரை 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் 128 ஜிபி மெமரி, புளூ மற்றும் சேன்ட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. இதுமட்டுமின்றி 6 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட நோக்கியா எக்ஸ்10 ஸ்மார்ட்போனும் பின்னர் அறிமுகம்  செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் 5ஜி வசதி கொண்ட நோக்கியா எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படாது என கூறப்படுகிறது. இந்த சீரிஸ் ஐரோப்பியாவில் அறிமுகம் செய்யப்படும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    போக்கோ பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எப்3 ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.


    போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விர்ச்சுவல் முறையில் நடைபெறும் நிகழ்வில் புது எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் போக்கோ எப்3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்கள் அறிமுகம் பற்றி போக்கோ குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     போக்கோ எப்2 ப்ரோ

    சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் போக்கோ எப்3 மாடல் மார்ச் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம். போக்கோ வெளியிட்ட தகவல்களின்படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ வெளியீடு மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

    எனினும், போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலின் மற்றொரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களுடன் பிரத்யேக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.


    ஒன்பிளஸ் 9ஆர் எனும் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ உறுதிப்படுத்தி இருந்தார். மேலும் இதற்கான டீசரும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் குறைந்த விலை 5ஜி மாடல் ஆகும்.

    புதிய ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் மார்ச் 23 ஆம் தேதி ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் இந்தியாவில் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதையொட்டி ஒன்பிளஸ் 9ஆர் அறிமுகம் செய்யப்படுவதாக பீட் லௌ தெரிவித்தார்.

     ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி டீசர்

    ஒன்பிளஸ் 9ஆர் மாடலில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் நிச்சயம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் இந்த மாடல் சிறப்பான கேமிங் கண்ட்ரோல்கள், அலாதியான வியூவிங் அனுபவத்தை வழங்கும் என அவர் தெரிவித்தார்.

    முந்தைய தகவல்களின்படி ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே பிராசஸர், கடந்த ஆண்டு வெளிநாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு என்10 மாடலில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×