search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்விட்"

    இந்திய மக்கள் பயணங்களில் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆனந்த் மஹிந்திராவுக்கு 11 வயது சிறுமி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். #AnandMahindra
    மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா 11 வயது சிறுமிக்கு ட்விட்டரில் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில் 11 வயது சிறுமி தனக்கு எழுதியிருந்த கடிதத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

    இந்திய சாலைகளில் பயணிக்கும் போது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய மிக எளிய வழிமுறையை மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்திருக்கிறார். சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஹாரன் எழுப்பப்படும் போது பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருப்போம்.



    இதற்கு தீர்வு காண 11 வயதான மஹிகா மிஸ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு கோரிக்கையாக வைத்திருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் தேவையற்ற நிலைகளில் ஹாரன் எழுப்புவதை தடுக்கும் நோக்கில், பத்து நிமிடங்களில் ஐந்து முறை மட்டும் ஹாரன் வேலை செய்யும் படி மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

    இத்துடன் ஹாரன் ஒலிக்கும் நேரம் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இதுபோன்று மாறும் போது ஹாரன் மூலம் ஏற்படும் ஒலி மாசு பெருமளவு குறைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.


    சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra

    ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. #Twitter



    ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் ட்விட்களை புகார் அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் ட்விட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாக புரிந்து கொள்ள முடியும்.

    புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் ட்விட்கள் பற்றி அதிகளவு விவரங்களை தெரிவிக்க முடியும்.



    இத்துடன் ரிப்போர்ட் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும். முன்னதாக பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ட்விட்டர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

    இவற்றில் பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் ஆகும். டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தாகும். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தீங்கு ஏற்படுத்த காரணமாக அமையும். 

    ட்விட்டரில் கருத்து சுதந்திரம் மற்றும் கேலி கிண்டல்களை வித்தியாசப்படுத்துவதில் ட்விட்டர் சிரமப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் அவற்றை எதிர்கொள்ள ட்விட்டர் முயன்று வருகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விளம்பரப்படுத்த ஐபோன் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #Samsung



    சாம்சங் மற்றும் ஐபோன்களிடை அவ்வப்போது நடைபெறும் அக்கப்போர் இம்முறை ட்விட்டரில் ஆரம்பித்து இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் மூலம் ஏற்கனவே சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், மற்றொரு சாம்சங் அக்கவுண்ட் ஐபோன் மூலம் ட்விட் பதிவிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    கடந்த முறை சாம்சங் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்த சாம்சங் இம்முறை எதுபோன்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    சாம்சங் மொபைல் நைஜீரிய அக்கவுண்ட் ட்விட்டர் கணக்கில் சாம்சங் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான விளம்பர வீடியோ ஐபோன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பிரபல யூடியூபரான MKBHD தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருக்கிறார். 



    விவகாரம் ட்விட்டரில் சூடுப்பிடித்த நிலையில், சாம்சங் மொபைல் நைஜீரிய ட்விட்டர் அக்கவுண்ட் சில மணி நேரங்களுக்கு டி-ஆக்டிவேட் செய்யப்பட்டு பின் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட சாம்சங் அதிகாரிகள் தான் காரணம் என தெரிகிறது.

    சமீபத்தில் ரஷ்யாவுக்கான சாம்சங் விளம்பர தூதர் செனியா சோப்சாக் பொதுவெளியில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரான செனியா சோப்சாக் ஐபோன் X பயன்படுத்திய வீடியோ தொலைகாட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சாம்சங் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது. #Samsung #iPhone
    ×