search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசத்தினர் 9 பேர் கைது"

    மகாராஷ்டிராவில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

    அம்மாவட்டத்தின் பிவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட சாரவல்லி என்ற கிராமத்தில் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 9 பேர் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 9 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் இந்தியாவில் தங்க எந்த வித ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


    கியா நிறுவனத்தின் புதிய இ.வி.9 கான்செப்ட் மாடல் 2021 எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
     

    தென் கொரிய கார் உற்பத்தியாளரான கியா இ.வி.9 கான்செப்ட் எஸ்.யு.வி. மாடலை 2021 எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்தது. இது கியா நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இந்த மாடல் இ.வி.9 பெயரிலேயே விற்பனைக்கு வர இருக்கிறது.

    அளவில் புதிய இ.வி.9 கான்செப்ட் மாடல் 4928 எம்.எம். நீளமும், 2057 எம்.எம். அகலம், 1778 எம்.எம். உயரமாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3099 எம்.எம். அளவு ஆகும். இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி மற்றும் மோட்டார் விவரங்கள் மர்மமாகவே இருக்கிறது. 

    கியா இ.வி.9 கான்செப்ட்

    எனினும் இ.வி.9 மாடலில் 350 கிலோவாட் பாஸ்ட் டி.சி. சார்ஜிங் வழங்கப்படுகிறது. இது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 முதல் 30 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nokia9PureView



    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஐந்து கேமரா சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் வீடியோவினை நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் மூன்று மோனோக்ரோம் மற்றும் இரண்டு ஆர்.ஜி.பி. சென்சார்களை கொண்டிருக்கிறது.



    நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் வெவ்வேறு கோணங்களில் காணப்படுகிறது. இத்துடன் விரைவில் நோக்கியா 9 கொண்ட தலைசிறந்த புகைப்படங்களை படமாக்க தயாராகுங்கள் என்ற வார்த்தை பதிவிடப்பட்டிருக்கிறது.

    சர்வதேச சந்தையில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,300) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

    எனினும், இந்திய விலை மற்றும் விற்பனை பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. இந்தியாவில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்
    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Nokiamobile #MWC19



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. இதில் நோக்கியா 9 பியூர் வியூ மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.

    இதில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் ஐந்து பிரைமரி கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. நோக்கியாவின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாக உருவாகி இருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்

    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

    - 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

    நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.
    சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது. #Israel #Beresheet
    டெல் அவிவ்:

    சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3-ந்தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது.

    இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. ‘பெரிஷீட்’ எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது.

    இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது.

    இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது.

    இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெகுட் நகரில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இது குறித்து, இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்.’ தலைவர் மோரிஸ்கான் கூறியதாவது:-

    “சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்” என்றார்.

    இஸ்ரேல் அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்புகிறது. இதில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. #Israel #Beresheet
    ஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி. வலைதளத்தில் சான்று பெற்றிருக்கிறது. #Nokia9PureView



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி. வலைதளத்தில் சான்று பெற்றிருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் செய்ஸ் கேமரா ஆப்டிக்ஸ் வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் டூயல் சிம் சர்வதேச வேரியண்ட் TA-1087 என்ற மாடல் நம்பரும், சிங்கிள் சிம் கொண்ட சர்வதேச வேரியண்ட் TA-1082 என்ற மாடல் நம்பரும், டூயல் சிம் சீனா வேரியண்ட் TA-1094 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் கேமரா ரெசல்யூஷன் பற்றி எவ்வித தகவலும் இல்லை. 

    சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இரண்டு 12 எம்.பி. கேமராக்களும், 16 எம்.பி. பிரைமரி கேமராக்களும், ஒரு 8 எம்.பி. பிரைமரி கேமராவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டெலிபோட்டோ, வைடு-ஆங்கிள் மற்றும் டெப்த் சென்சிங் லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: fcc

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் லைட் கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்றும் இது ஒரே சமயத்தில் ஐந்து புகைப்படங்களை படமாக்கும் என்றும், வழக்கமான ஸ்மார்ட்போன்களை விட 10X அதிக வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுக்கும் என கூறப்படுகிறது. இவற்றை ஒன்றிணைக்கும் போது 64 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும்.

    ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொருத்தவரை 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    எல்.ஜி. நிறுவனத்தின் கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LG #Smartphone



    எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கியூ9 ஒன் என அழைக்கப்படுகிறது. இதில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜி.பி. ரேம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    எல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் தனது கியூ9 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஜி7 ஒன் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகமானது. எல்.ஜி. ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. கியூ9 ஒன் சிறப்பம்சங்கள்

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார்
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. கொரியாவில் இதன் விலை 599,500 கொரியன் வொன் (இந்திய மதிப்பில் ரூ.37,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #Nokia9PureView #Smartphone
     


    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 பியூர் வியூ மாடல் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    நோக்கியா பவர்யூசர் சார்பில் வெளியாகி இருக்கும் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதும் கிளாஸி பேக் பேனல் கொண்டிருப்பதும் உறுதியாகியிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: NokiaPowerUser

    ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச் எதுவும் காணப்படவில்லை, இதன் பெசல்கள் தடிமனாகவும் அதில் செல்ஃபி கேமரா, இயர்பீஸ் மற்றும் இதர சென்சார்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக வெளியான ரென்டர்களிலும் நோக்கியா 9 பியூர்வியூ மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டெப்த் சென்சார் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸமார்ட்போனின் விலை ரூ.7,000 குறைக்கப்பட்டுள்ளது. #GalaxyS9plus #Smartphone



    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்சமயம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் 64 ஜி.பி. வெர்ஷன் விலை ரூ.57,900 ஆக குறைந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.64,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    கேலக்ஸி எஸ்9 பிளஸ் 128 ஜி.பி. வெர்ஷன் விலை தற்சமயம் ரூ.61,900 என்றும் 256 ஜி.பி. வெர்ஷன் ரூ.65,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.68,900 மற்றும் ரூ.72,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் புதிய விலையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் அமலாகியிருக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    -  6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
    - அட்ரினோ 630, மாலி G72M18GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
    - 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி
    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் வெளியானது. #GalaxyNote9 #GalaxyS9Plus

     

    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் லிமிட்டெட் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆல்பைன் வைட் நிறத்திலும், கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புது ஆல்பைன் வைட் நிறம் தவிர ஓசன் புளு, மிட்நைட் பிளாக், மெட்டாலிக் காப்பர் மற்றும் லாவென்டர் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

    இதேபோன்று கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறம் தவிர மிட்நைட் பிளாக், கோரல் புளு, லிலாக் பர்ப்பிள், சன்ரைஸ் கோல்டு, பர்கன்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆல்பைன் வைட் எடிஷன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ.67,900 என்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போலாரிஸ் புளு நிற எடிஷன் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களும் சாம்சங் ஆன்லைன் வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆன்லைன் வலைதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் 10ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ.6000 வரை கேஷ்பேக், பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ.9,000 வரை தள்ளுபடி பெற முடியும். #GalaxyNote9 #GalaxyS9Plus 
    கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    சிதம்பரம்:

    கஜா புயல் கடந்த 16-ம் தேதி வேதாரண்யம், நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அன்று நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் நவம்பர் 16-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் இன்று அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
    சாம்சங் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. #GalaxyS9Plus #GalaxyNote9



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனினை புதிய பர்கன்டி ரெட் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு, மிட்நைட் பிளாக், கோரல் புளு மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக லேவென்டர் பர்பிள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது.



    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் லேவென்டர் பர்பிள் மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பர்கன்டி ரெட் நிற வேரியன்ட்கள் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள், ஆன்லைன் போர்டல் மற்றும் சாம்சங் ஷாப் மையங்களில் கிடைக்கிறது. 

    இத்துடன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.24,990 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலைக்கு வழங்குகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் நோட் 9 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    ×