search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிய நிறத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்
    X

    புதிய நிறத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்

    சாம்சங் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. #GalaxyS9Plus #GalaxyNote9



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனினை புதிய பர்கன்டி ரெட் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு, மிட்நைட் பிளாக், கோரல் புளு மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக லேவென்டர் பர்பிள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது.



    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் லேவென்டர் பர்பிள் மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பர்கன்டி ரெட் நிற வேரியன்ட்கள் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள், ஆன்லைன் போர்டல் மற்றும் சாம்சங் ஷாப் மையங்களில் கிடைக்கிறது. 

    இத்துடன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.24,990 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலைக்கு வழங்குகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் நோட் 9 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×