என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி100 மாடல் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புது ஸ்மார்ட்போனின் டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது. 

    புதிய மோட்டோ ஜி100 அந்நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் டீசர்களில் தேதியை குறித்து கொள்ளுங்கள் எனும் வாசகம் மற்றும் மார்ச் 25 மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேதியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த டீசர்களில் தெரியவரும்.

    முந்தைய தகவல்களின் படி மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் இதில் குவாட் கேமரா சென்சார், டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம். 
    விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு புதிய அம்சங்கள் நிறைந்த ஒஎஸ் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.


    விவோ நிறுவனம் தனது வி17 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. புது அப்டேட் பன்டச் ஒஎஸ் 11 யுஐ உடன் வழங்கப்படுகிறது. விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 சார்ந்த பன்டச் ஒஎஸ் 9.2 ஒஎஸ் உடன் 2019 டிசம்பர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்தியாவில் மட்டும் இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.

    புதிய பன்டச் ஒஎஸ் அப்டேட் அளவில் 3.43 ஜிபியாக இருக்கிறது. இந்த அப்டேட் PD1948F_EX_A6.70.8 எனும் பில்டு நம்பர் கொண்டுள்ளது. விவோ வி17 பயன்படுத்துவோர் புது அப்டேட் மாற்றங்களை ஸ்கிரீன்ஷாட் வடிவில் ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 

     விவோ வி17

    சிலர் புது அப்டேட் பிழைகள் நிறைந்துள்ளது என குற்றஞ்சாட்டி வருகின்றனர். எதுவாயினும் புது அப்டேட் வேண்டும் என நினைப்போர் இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்யலாம். இவ்வாறு செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். 

    விவோ வி17 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி ரேம், 12ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 48 எம்பி குவாட் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலுக்கு இந்தியாவில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. இன்டெல் பிராசஸர் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி லேப்டாப் மாடல்கள் ஆகும். இதன் 13 இன்ச் மாடல் தற்போது 256ஜிபி அல்லது 512 ஜிபி என இருவித ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    அமேசான் தளத்தில் இன்டெல் ஐ5 பிராசஸர் கொண்ட 13 இன்ச் மேக்புக் ப்ரோ 256 ஜிபி எஸ்எஸ்டி விலை ரூ. 99,990 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 18 ஆயிரம் குறைவு ஆகும். இதுதவிர 256 ஜிபி வேரியண்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இதே மாடல் 512 ஜிபி வேரியண்ட் ரூ. 1,41,719 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ. 1200 குறைவு ஆகும்.

     மேக்புக் ப்ரோ

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 மாடலுடன் மேஜிக் கீபோர்டு, சிசர் ஸ்விட்ச்கள் வழங்கப்படுகிறது. இது 8th Gen இன்டெல் ஐ5 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி அல்லது 512 ஜிபி எஸ்எஸ்டியுடன் கிடைக்கிறது. இது 13.3 இன்ச் 2560x1600 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 3 தண்டர்போல்ட் போர்ட், டச் பார் வசதி கொண்டுள்ளது. 

    எம்1 பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல் விலை ரூ. 1,22,900, எம்1 பிராசஸர் கொண்ட மேக்புக் ஏர் மாடல் விலை ரூ. 92,900 ஆகும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் மாடல்களில் இப்படி ஒரு சங்கதி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடல்களில் டவுன்லோட் வேகம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தையில் கிடைக்கும் சுமார் 25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் 5ஜி டவுன்லோட் வேகம் ஐபோன் மாடல்களை விட அதிகமாக இருக்கிறது என ஒபன்சிக்னல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 60 சதவீதம் சாம்சங் நிறுவன மாடல்கள் ஆகும். ஐபோன் பயனர்களின் ஒட்டுமொத்த 4ஜி டவுன்லோட் வேகத்தை விட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களில் 2.3 மடங்கு அதிவேக டவுன்லோட் கிடைத்தது. 5ஜி டவுன்லோட் வேகத்தை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி 56Mbps வேகம் கொடுத்து முதலிடம் பிடித்து இருக்கிறது. டிசிஎல் ரெவல் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 8டி பிளஸ் முறையே 49.8Mbps மற்றும் 49.3Mbps வேகம் கொடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்து உள்ளன.

     ஐபோன் 12

    5ஜி கிடைக்கும் பகுதிகளில் ஆப்பிள் பயனர்கள் சாம்சங் மாடல்களில் கிடைப்பதை விட 18 சதவீதம் குறைவான டவுன்லோட் வேகத்தை அனுபவிக்கின்றனர். இதுபற்றிய தகவல்கள் நவம்பர் 11, 2020 முதல் பிப்ரவரி 26, 2021 வரையிலான காலக்கட்டங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளன. அதிவேக 5ஜி டவுன்லோட் வழங்கிய மாடல்களின் டாப் 10 பட்டியலில் மற்ற இரண்டு கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்கள் இடம்பெற்று உள்ளன. 

    இதுதவிர மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான மோட்டோரோலா ரேசர் 5ஜி, சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 2 5ஜி உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன. இந்த மாடல்கள் முறையே 44Mbps, 44.7Mbps மற்றும் 39.4Mbps வேகம் கொடுத்துள்ளன.
    கூகுள் நிறுவனம் விரைவில் புது பிக்சல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கான பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இது ஏற்கனவே இங்கு விற்பனையாகும் பிக்சல் 4ஏ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

     கூகுள் பிக்சல் 4ஏ

    இந்தியாவில் பிக்சல் 4ஏ மாடலை விட பிக்சல் 5ஏ மாடலை இருமடங்கு அதிக யூனிட்களை கொண்டுவர இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது. பிக்சல் 5ஏ பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புது பிக்சல் போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
    நார்டு மாடலில் சிறு கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டை ஒன்பிளஸ் மீண்டும் வழங்க துவங்கி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்சிஜன் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு இந்த மாத துவக்கத்தில் வழங்கியது. பின் இந்த அப்டேட்டில் கோளாறு இருப்பதாக கூறி அப்டேட் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியது. 

    தற்போது பிழை சரி செய்யப்பட்டதை தொடர்ந்து புது ஆண்ட்ராய்டு அப்டேட் மீண்டும் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மீண்டும் வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஆண்ட்ராய்டு 10 வைத்திருப்போருக்கு தற்போதும் புது அப்டேட் அளவு 2.9 ஜிபியாகவே இருக்கிறது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்-ஐ அப்டேட் செய்தவர்களுக்கு இந்த அப்டேட் வெறும் 11 எம்பி தான்.
    போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகிறது.


    போக்கோ நிறுவனம் தனது எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ எப்1 மாடலுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போக்கோ எப்1 ஸ்மார்ட்போனினை போன்றே புதிய எக்ஸ்3 மாடலுக்கும் #PROformance ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போக்கோ நிறுவனம் மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச நிகழ்வு பற்றி அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் போக்கோ எப்3 அறிமுகம் செய்யப்படலாம். இது ரெட்மி கே40 மாடலின் சர்வதேச எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம். 

    இந்த ஸ்மார்ட்போன் பிராஸ்ட் புளூ, பேண்டம் பிளாக் மற்றும் மெட்டல் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 27 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் புது ஏர்பாட்ஸ் 3 மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை அறிமுகம் செய்யப்படாது என தற்போதைய தகவல்களில் தெரியவந்துள்ளது. பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு உள்ள புது அறிக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஆடியோ சாதனங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி முந்தைய தகவல்களில் கூறப்பட்டதற்கு மாறாக புது ஹெட்போன்கள் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகமாகாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்

    ஏர்பாட்ஸ் 3 மாடலின் உற்பத்தி பணிகள் 2021 மூன்றாவது காலாண்டில் தான் துவங்கும் என கூறப்படுகிறது. புது ஹெட்போனை வடிவமைக்கும் பணிகள் முழுமை பெறாததே இதற்கு காரணம் என தெரிகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் மற்றொரு ஆடியோ சாதனத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளலாம்.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் 2021, மார்ச் 23 ஆம் தேதி ஆப்பிள் நிகழ்வு நடைபெறலாம் என்றும் இதில் புதிய ஆடியோ சாதனம் அறிமுகமாகலாம் என்றும் கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில், இந்த விழாவில் புது ஐபேட் மாடல்கள், ஏர்டேக், ஆப்பிள் டிவி ஸ்டிரீமிங் சாதனம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருக்கிறது. இதுவரை மார்ச் மாத ஆப்பிள் நிகழ்வு பற்றி அந்நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ரியல்மி நிறுவனத்தின் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனை மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. முன்னதாக மார்ச் 23 ஆம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    புதிய 108 எம்பி கேமரா ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் வெளியிட்டார். டீசர் வீடியோவில் இரண்டு ஸ்போர்ட்ஸ் கார்கள் இன்பினிட்டி டிசைன் உருவாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

    ரியல்மி டீசர்

    எனினும், தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 8 சீரிஸ் மாடல்கள் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படகிறது. புது சீரிஸ் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இரு மாடல்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    முந்தைய டீசர்களில் ஸ்டான்டர்டு மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி ப்ரோ வேரியண்ட் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும். இதுதவிர இரண்டு மாடல்களிலும் மொத்தம் நான்கு கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கலாம்.
    ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வழக்கமான மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஒப்போ மட்டுமின்றி பல்வேறு இதர சீன நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிட திட்டமிட்டு வருகின்றன. முன்னதாக பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கின்றன. 

     ஒப்போ ஸ்மார்ட்போன் கான்செப்ட்

    கூகுள் நிறுவனமும் இந்த ஆண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு சாம்சங் நிறுவனம் டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    இது திறக்கப்பட்ட நிலையில் 7.7 இன்ச் அளவிலும், வெளிப்புறம் 2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் தனது மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதுதவிர சாம்சங் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய மாடல்களை மேம்படுத்தி புது மாடல்களை அறிமுகம்  செய்ய இருக்கிறது.  
    அமேசான் தளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆப்பிள் டேஸ் பெயரில் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த விற்பனையில் ஐபோன் 12 சீரிஸ், ஐபேட் மினி, மேக்புக் ப்ரோ என பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     ஐபோன்

    அமேசானில் ஆப்பிள் டேஸ் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபோன் 12 மினி மாடல் ரூ. 67100 துவக்க விலையில் கிடைக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 2800 குறைவு ஆகும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஐபோன் 11 ப்ரோ விலை ரூ. 79,900 என மாறி இருக்கிறது. இதுதவிர ஐபேட் மாடல்களுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான சேமிப்பு, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு தள்ளுபடி, கேஷ்பேக் தவிர, ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் இன் 1 பெயரில் அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடல் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.

    இதற்காக மைக்ரோமேக்ஸ் வெளியிட்டு இருக்கும் டீசர்களை கொண்டு பார்க்கும் போது, புது மாடல் மல்டிமீடியா சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் எந்த விவரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

     மைக்ரோமேக்ஸ் இன் 1

    எனினும், இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன் 1பி மற்றும் இன் நோட் 1 மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. முந்தைய இன் நோட் 1 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் 4 ஜிபி ரேம் கொண்டிருந்தது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டது.
    ×