என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மேம்பட்ட பிராசஸர்களுடன் விரைவில் அறிமுகமாகும் ஐபேட் ப்ரோ?
Byமாலை மலர்18 March 2021 9:44 AM GMT (Updated: 18 March 2021 9:44 AM GMT)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான தனது முதல் அறிமுக நிகழ்வை ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் மேம்பட்ட பிராசஸர், கேமரா, மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட புதிய ஐபேட் ப்ரோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புது மாடல்களும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் அதே வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடலில் உள்புற அம்சங்களான பிராசஸர் மற்றும் கேமரா சிஸ்டம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
ஆப்பிள் சிலிகான் எம்1 சிப்செட்-க்கு இணையான செயல்திறன் வழங்கும் புது பிராசஸர் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை மினி எல்இடி பேனல் கொண்ட முதல் ஐபேட் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இவைதவிர புதிய ஐபேட் ப்ரோ தன்டர்போல்ட் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஐபேட் ப்ரோ மாடலை மாணிட்டர், ஹார்டு டிரைவ் என பல்வேறு இதர சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X