என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- நத்திங் போன் (2) மாடல் பற்றிய தகவலை நத்திங் நிறுவனர் கார்ல் பெய் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
நத்திங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு காதலர் தினத்தை ஒட்டி விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. நத்திங் போன் (1) மற்றும் இயர் (ஸ்டிக்) உள்ளிட்ட மாடல்களுக்கு காதலர் தின சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நத்திங் போன் (1) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இரு சாதனங்களும் பிரத்யேக டிசைன், க்ளிஃப் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றன. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பிரத்யேக டுவிஸ்டிங் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் 12.6mm டைனமிக் டிரைவர்கள், க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம், மூன்று HD மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
காதலர் தினத்தை ஒட்டி நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் தற்போது ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். அந்த வகையில் நத்திங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று நத்திங் போன் (1) மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் நத்திங் போன் (1) தற்போது ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
- டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டு வரும் விசேஷ டுவிட்டர் புளூ சேவை இந்திய விலை விவரங்கள் வெளியீடு.
- டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய பயனர்கள் இனி டுவிட்டர் புளூ சந்தாவில் இணைய முடியும். முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டுவிட்டர் புளூ சந்தா தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா பெறுவோருக்கு புளூ டிக் வழங்கப்பட்டு விடும். இந்தியாவில் டுவிட்டர் புளூ கட்டணம் வலைதளம் மற்றும் மொபைலில் மாதம் முறையே ரூ. 650 மற்றும் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வலைதள வெர்ஷனுக்கு வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவை வருடாந்திர அடிப்படையில் பெறும் போது ரூ. 6 ஆயிரத்து 800 மட்டுமே செலுத்தினால் போதுமானது. முன்னதாக வெரிஃபைடு டேக் பெற வாடிக்கையாளர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், டுவிட்டர் புளூ சேவை தற்போது இந்தியா, பிரேசில், இந்தோனேசியா என மொத்தம் 15 நாடுகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர், தங்களின் டுவிட்களை எடிட் செய்வது, நீண்ட நேர வீடியோக்களை பதிவிடுவது, 50 சதவீதம் வரை குறைந்த விளம்பரங்களை பெறுவது, புதிய அம்சங்களை முன்கூட்டியே பெற முடியும்.
இத்துடன் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போரின் பதிவுகளுக்கு டுவிட்டர் முன்னுரிமை கொடுக்கும். டுவிட் செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் அதிகபட்சமாக ஐந்து முறை அவற்றை எடிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
டுவிட்டர் புளூ சேவையை பெறுவது எப்படி?
பயனர்கள் டுவிட்டர் புளூ சேவையை இயக்க தங்களின் ப்ரோஃபைல் படத்தின் இடது புறத்தில் க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் அதிகபட்சம் டுவிட்டர் கணக்கை துவங்கி 90 நாட்கள் கழித்தே டுவிட்டர் புளூ சேவையை பெற முடியும். டுவிட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தி இருப்பவர்கள், தங்களின் புகைப்படம், ப்ரோஃபைல் பெயர் உள்ளிட்டவைகளை வெரிஃபைடு பேட்ஜ் வழங்கும் வரை மாற்ற வேண்டாம் என டுவிட்டர் கேட்டுக் கொண்டுள்ளது.
- வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் மீடியா ஃபைல் ஷேரிங்கை எளிமையாக்கி இருக்கிறது.
- வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியிலும் ஏராள மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக கூடுதல் வசதிகள் வழங்கப்படுகின்றன.
வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 100 மீடியா ஃபைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் 30 மீடியா ஃபைல்களை மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.4.3 வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு உள்ளது.
புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய செயலியினுள் ஒரே சமயத்தில் 30-க்கும் மேற்பட்ட மீடியா ஃபைல்களை தேர்வு செய்து முயற்சிக்கலாம். 30-க்கும் மேற்பட்ட ஃபைல்களை தேர்வு செய்ய முடியும் பட்சத்தில் உங்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை இந்த அம்சம் வழங்கப்படவில்லை எனில், உங்களால் 30-க்கும் அதிக ஃபைல்களை தேர்வு செய்ய இயலாது. அந்த வகையில், கிடைக்காதவர்கள் இந்த வசதியை பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

தற்போது 100 மீடியா ஃபைல்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு இருப்பதை கொண்டு, ஒரே புகைப்படம் அல்லது வீடியோவை பலமுறை தேர்வு செய்ய முடியாது. தற்போது டெஸ்டிங்கில் இருப்பதால், இந்த அம்சம் விரைவில் அனுவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வெளியிடப்படலாம். எனினும், சரியான வெளியீட்டு காலம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
பீட்டா டெஸ்டிங் ஒருபுறம் இருக்க, வாட்ஸ்அப் தனது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பகுதியில் சில புதிய அம்சங்களை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சங்களை கொண்டு வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு புதிய வழிகளில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
பிரைவேட் ஆடியன்ஸ்:
பெயருக்கு ஏற்றார்போல் இந்த அம்சம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை யார் பார்க்க வேண்டும் என்பதை குறிக்கும். இது முழுக்க முழுக்க புதிய அம்சம் இல்லை என்ற போதிலும், இது பிரத்யேக அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும். சமீபத்தில் தேர்வு செய்தபடி யார்யாருக்கு ஸ்டேட்டஸ் காண்பிக்கப்பட வேண்டும் என்ற காண்டாக்ட்களின் பட்டியல் சேமிக்கப்பட்டு, அடுத்த அப்டேட்டிற்கு தானாக பயன்படுத்தப்படும்.
வாய்ஸ் ஸ்டேட்டஸ்:
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சமாக 30 நொடிகளுக்கு வாய்ஸ் நோட்களை தங்களின் ஸ்டேட்டஸ்-ஆக வைத்துக் கொள்ளலாம். மிகமுக்கிய தனிப்பட்ட வகையில் அப்டேட்களை தெரிவிக்கும் மற்றொரு வழிமுறை இது என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ்:
இந்த அம்சம் கொண்டு ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஸ்வைப் அப் செய்து அதிகபட்சம் எட்டு எமோஜிக்களை பயன்படுத்தி தங்களின் கருத்தை தெரிவிக்க முடியும். இது இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே செயல்படுகிறது.
ஸ்டேட்டஸ் ப்ரோஃபைல் ரிங்ஸ்:
சாட் லிஸ்ட், க்ரூப் பட்டியல் மற்றும் காண்டாக்ட்களில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பார்க்கும் வழிமுறையை இது எளிமையாக்கி விடும். குறிப்பிட்ட காண்டாக்ட் ஸ்டேட்டஸ் வைத்திருப்பின், அந்த பயனரின் ப்ரோஃபைல் படத்தை சுற்றி ரிங் ஒன்று காணப்படும். இதை கொண்டு அவர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
லின்க் பிரீவியூஸ்:
ஸ்டேட்டஸ்களில் ஒருவழியாக லின்க் பிரீவியூ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் எப்போது லின்க்-களை ஸ்டேட்டஸ் ஆக வைத்தாலும், அந்த லின்க்-இன் பிரீவியூ காண்பிக்கப்படும். இதை கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் குறிப்பிட்ட லின்க்-ஐ திறந்து பார்க்காமலேயே அந்த லின்க்-இல் எதுபோன்ற தரவு உள்ளது என்பதை சற்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைத்து விடும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.
Photo Courtesy: WABetaInfo
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- முன்னதாக வெளியான தகவல்களில் இந்த தொழில்நுட்பம் ஐபோன் 14 சீரிசில் வழங்கப்படும் என கூறப்பட்டது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் நீண்ட காலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஆப்பிள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களில் இந்த தொழில்நுட்பத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது.
முழுமையான ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஐபோன்களில் வழங்குவதற்கான பணிகளை ஆப்பிள் இதுவரை நிறைவு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் ஸ்மார்ட்போனினை வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஆக மாற்றி விடும். இதை கொண்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட இதர சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.

அதாவது உங்களின் மொபைல் போன் கொண்டு ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அல்லது வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சிறிய மின்சாதனங்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கும் என கூறப்பட்டது.
எனினும், இந்த தொழில்நுட்பத்தை வழங்க ஆப்பிள் தவறிவிட்டதாக தெரிகிறது. இந்த முறை ஆப்பிள் பொறியாளர்கள், வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்கி முடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கான மென்பொருள் ஆப்டிமைசேஷன்கள் உருவாக்கப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் பைலேடரல் வயர்லெஸ் சார்ஜிங் என்றும் அழைக்கப்படுகிறது.
ஐபோன் 12 சீரிசில் இருந்தே ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வழங்குவதற்கான உபகரணங்களை பயன்படுத்த துவங்கிவிட்டது. எனினும், இந்த அம்சம் பல்வேறு காரணங்களால் செயலிழக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்கியதும், ஐபோன்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம். புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இதை கொண்டு ஐபோன் மூலம் ஏர்பாட்ஸ்-ஐ சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- புதிய நத்திங் போன் (2) 12 ஜிபி ரேம், விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
நத்திங் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் போன் (2) மாடல் அறிமுகமாவதை சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இது நத்திங் போன் (1) மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய நத்திங் ஸ்மார்ட்போன் சிறப்பான மென்பொருள் அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், புதிய நத்திங் போன் (2) பற்றிய விவரங்களை மைஸ்மார்ட்பிரைஸ் வெளியிட்டு உள்ளது. அதில் புதிய நத்திங் போன் (2) மாடல் நம்பர், வெளியீட்டு விவரம் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய நத்திங் போன் (2) A065 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய நத்திங் போன் (2) மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாத வாக்கில் புது நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக நத்திங் போன் (1) மாடல் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு அறிமுகமாகும் நத்திங் ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர அனுபவம் வழங்கும் என தெரிகிறது. நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய நத்திங் போன்(2) மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
நத்திங் போன் (2) மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், அடாப்டிவ் டிஸ்ப்ளே அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இது ஸ்கிரீன் ரிப்ரெஷ் ரேட்-ஐ ஆன் ஸ்கிரீன் தரவுகளுக்கு ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. வரும் மாதங்களில் புதிய நத்திங் போன் (2) பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
- இந்திய சந்தையில் புதிய ஹோம்பாட் விற்பனை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய 2nd Gen ஹோம்பாட் விற்பனை துவங்கி இருக்கிறது. புதிய இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் விலை ரூ. 32 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் ஹோம்பாட் 2nd Gen விற்பனை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த மாடல் மிட்நைட் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலை ரூ. 5 ஆயிரத்து 742 எனும் மாத தவணை முறையில் வாங்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய ஹோம்பாட் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஆறு மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது.

இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலில் புதிய S7 சிப், பில்ட்-இன் டெம்பரேச்சர் மற்றும் ஹூமிடிட்டி சென்சார் உள்ளது. இந்த சென்சார் ஹோம்பாட் மினி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஹோம்பாட் மாடல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மெஷ் ஃபேப்ரிக் கொண்டிருக்கிறது. இத்துடன் வொவன் பவர் கேபிள், பேக்லிட் டச் சர்ஃபேஸ் உள்ளது.
ஹோம்பாட் 2nd Gen அம்சங்கள்:
4-இன்ச் கஸ்டம் என்ஜினியரிங் செய்யப்பட்ட ஹை-எக்ஸ்கர்ஷன் வூஃபர்
20mm டைஃப்ராம் பில்ட்-இன் பேஸ்-EQ மைக்
லோ-ஃபிரீக்வன்சி கலிபரேஷன் மைக்ரோபோன்
நான்கு மைக்ரோபோன் டிசைன்
மேம்பட்ட கம்ப்யுடேஷனல் ஆடியோ
ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ்
S7 சிப்செட்
ரூம் சென்சிங் தொழில்நுட்பம்
பிரிசைஸ் டைரக்ஷனல் கண்ட்ரோல்
அல்ட்ரா வைடு பேண்ட் தொழில்நுட்பம்
அதிகபட்சம் ஆறு குரல்களை கண்டறிந்து கொள்ளும் வசதி
பில்ட்-இன் தட்ப-வெப்ப சென்சார்
வைபை, ப்ளூடூத் 5.0, திரெட்
- ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய பிரீபெயிட் சலுகைகள் ஜியோ வலைதளம், மைஜியோ செயலிகளில் கிடைக்கிறது.
- புதிய சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.
இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த போதிலும், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ச்சியாக தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. இம்முறை ரிலையன்ஸ் ஜியோ இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 349 மற்றும் ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு சலுகைகளின் பலன்கள் அதிகளவு வேறுபடுகின்றன.
எனினும், இவற்றில் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றன. பலன்களை பொருத்தவரை அதிகபட்சம் 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்றன. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இரு சலுகைகளின் பலன்கள்:
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த பலன்களுடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
புதிய ஜியோ ரூ. 899 சலுகையிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ. 899 சலுகையில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 225 ஜிபி டேட்டா பெறலாம். இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையை போன்றே இதிலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும்.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன.
- சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புது ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 சீரிசில்- கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில் கேலக்ஸி S23 சீரிஸ் இந்திய விலை விவரங்களை சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 74 ஆயிரத்து 999, ரூ. 94 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இவை சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி S22 சீரிஸ் விலையை விட அதிகம் ஆகும். அமெரிக்காவில் புது சாம்சங் ஃபிளாக்ஷிப் போன்களின் விலை இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 445 என துவங்குகிறது.
விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி S23 (8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி) ரூ. 74 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி S23 (8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) ரூ. 79 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி S23 பிளஸ் (8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) ரூ. 94 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி S23 பிளஸ் (8ஜிபி ரேம், 512ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (12ஜிபி ரேம், 1டிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999

அறிமுக சலுகை விவரங்கள்:
புதிய சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. கேலக்ஸி S23 (256ஜிபி) மெமரி மாடலை 128 ஜிபி விலையில் வாங்கிட முடியும்.
2.கேலக்ஸி வாட்ச் 4 ப்ளூடூத் மாடலை கேலக்ஸி S23 பிளஸ் உடன் வாங்கும் போது ரூ. 2 ஆயிரத்து 999 செலுத்தினால் போதும்.
3.ரூ. 47 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 4ஜி, கேலக்ஸி பட்ஸ் 2 உள்ளிட்டவைகளை கேலக்ஸி S23 அல்ட்ரா உடன் வாங்கும் போது ரூ. 4 ஆயிரத்து 999 செலுத்தினால் போதும்.
4. வங்கி சார்ந்த கேஷ்பேக் அல்லது அப்கிரேடு பலன்கள் ரூ. 8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
5. சாம்சங் ஷாப் ஆப் மூலம் செய்யும் முதல் பர்சேஸ்-க்கு ரூ. 2 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி
6. இன்று (பிப்ரவரி 2) நேரலையின் போது முன்பதிவு செய்தவர்களுக்கு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 25 வாட் டிராவல் அடாப்டர் பரிசாக வழங்கப்படும்.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் முன்பதிவு பிப்ரவரி 2 நேரலையில் துவங்கி பிப்ரவரி 3 ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெறும். கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களை சாம்சங் வலைதளம் மட்டுமின்றி அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் வாங்கிடலாம்.
நிற ஆப்ஷன்கள்:
சாம்சங் கேலக்ஸி S23 மாடல் ஃபேண்டம் பிளாக், கிரீன், லாவண்டர் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S23 பிளஸ் மாடல் ஃபேண்டம் பிளாக் மற்றும் கிரீம் கிரீன் நிறங்களிலும், கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஃபேண்டம் பிளாக், கிரீம் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஆன்லைனில் பிரத்யேகமாக - ரெட், கிராஃபைட், லைம் மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் சாம்சங் வலைதளத்தில் கிடைக்கிறது.
- இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் டிவி பாகங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.
- எல்இடி டிவிக்களின் 60 முதல் 70 சதவீத உற்பத்தி செலவை ஒபன் செல் பேனல்கள் எடுத்துக் கொள்கின்றன.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.
ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. எல்இடி டிவிக்களை உற்பத்தி செய்வதற்கான 60 முதல் 70 சதவீத கட்டணத்தை ஒபன் செல் பேனல்களே எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற பேனல்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.

"தொலைகாட்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டிவி பேனல்களின் ஒபன் செல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 2.5 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்," என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இந்த அறிவிப்பு உள்நாட்டு சேவை மதிப்பை கூட்டுவதோடு, சந்தை வளர்ச்சிக்கு உதவும் என நுகர்வோர் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் எரிக் பிரகான்சா தெரிவித்தார்.
பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கான உரிமம் வைத்திருக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக், இந்திய சந்தையில், சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து டிவிக்களின் விலை ஐந்து சதவீதம் வரை குறையும் என தெரிவித்து இருக்கிறது. மத்திய அரசின் சுங்க வரி குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பல்வேறு டிவி உற்பத்தியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிவிக்களின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்படலாம் என SPPL தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அன்வீத் சிங் மர்வா தெரிவித்தார்.
- வி நிறுவனத்தின் புது பிரீபெயிட் சலுகை ரூ. 99 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் வி நிறுவனம் 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிதாக எண்ட்ரி லெவல் ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. புது வி சலுகை விலை ரூ. 99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரை இலவச, அன்லிமிடெட் அதிவேக டேட்டா வழங்கி வருகிறது. எனினும், இந்த பலன்கள் வி ரூ. 249 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுக்கு ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.
இந்த விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் பலன்களை பயனர்களுக்கு வழங்கிய ஒரே அதிவேக டேட்டா நெட்வொர்க் ஆக வி இருக்கிறது. சமீபத்தில் வி நிறுவனம் அறிவித்த சலுகையில் அதிகபட்சம் 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

வி ரூ. 99 சலுகையில் 200MB டேட்டா, அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
புது சலுகை கொண்டு பயனர்கள் குறைந்த செலவில் கனெக்டிவிட்டி பெற முடியும். இந்த சலுகை வி வலைதலம் மற்றும் செயலியில் வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு சலுகையில் கிடைப்பதாக தகவல் வைரல்.
- இந்திய சந்தையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் 2019 வாக்கில் ரூ. 24 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் இந்திய சந்தையில் ரூ. 999 விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த தகவல்களின் படி ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 18 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் ஏர்பாட்ஸ் ப்ரோவுக்கு இவ்வளவு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என தேடினோம்.
அதன்படி வைரல் தகவல்களில் உள்ளதை போன்று ப்ளிப்கார்ட் தளத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை தேடினோம். அதில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 18 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இதிலேயே வைரல் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்த சலுகை தவறானது என உறுதியாகி விட்டது.

ப்ளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை வழங்கப்படுகிறது. இது கோடக் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். வைரல் தகவல்களில் ரூ. 999 விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ கிடைப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ப்ளிப்கார்ட் வழங்கும் எக்சேன்ஜ் சலுகை குறிப்பிடப்படவில்லை.
ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குவோர் தங்களின் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அந்த வகையில், தள்ளுபடி சலுகை சேர்க்கும் பட்சத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோவை ரூ. 999 விலையில் வாங்கிட முடியும். மேலும் எக்சேன்ஜ் சலுகையை முழுமையாக பெற சீராக இயங்கும் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்ய வேண்டும்.
அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மாடலை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 17 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். ஒருவேளை பயனர்கள் தங்களினை ஐபோன் 12-ஐ எக்சேன்ஜ் செய்து ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்கினாலும், ரூ. 1000 செலுத்த வேண்டும். எக்சேன்ஜ் சலுகை இன்றி ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குவோர் வங்கி சலுகையின் படி குறைந்த பட்சம் ரூ. 17 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்க முடியும்.
இந்திய சந்தையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் 2019 வாக்கில் ரூ. 24 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும் என ஆப்பிள் அறிவித்து இருந்தது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஆப்பிள் H1 சிப் உள்ளது. மேலும் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புது ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது ஒப்போ என்கோ ஏர் 3 மாடலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற டிசைன் மற்றும் சிறிய ஸ்டெம் உள்ளது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகமகாகும் என அறிவித்த கையோடு மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி புது ரெனோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் என்கோ ஏர் 3 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புது ஒப்போ என்கோ ஏர் 3 ஒப்போ கடந்த ஆண்டு அறிமுகம் செய்த என்கோ ஏர் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர ஒப்போ நிறுவனம் தனது புது ட்ரூ வயர்லெஸ் இயர்போனின் முக்கிய அம்சங்களை டீசர்களாக வெளியிட்டு உள்ளது.
அதன்படி ஒப்போ என்கோ ஏர் 3 மாடலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற டிசைன், சிறிய ஸ்டெம் கொண்டிருக்கிறது. இத்துடன் பெபில் வடிவ சார்ஜிங் கேஸ், டிரான்ஸ்பேரண்ட் மூடி உள்ளது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களில் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. என்கோ ஏர் 3 மாடலில் ஹைபை 5 DSP பிராசஸர் வழங்கப்படுகிறது.
இது முந்தைய மாடலை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 47ms அல்ட்ரா-லோ லேடன்சி, DNN நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 31 மணி நேர பேட்டரி லைஃப், ஒவ்வொரு இயர்பட்-ம் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
இவைதவிர புது என்கோ ஏர் 3 பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒப்போ ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz வளைந்த டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட், 108MP போர்டிரெயிட் கேமரா, 4800 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.






