என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- 5ஜி வெளியீடு மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகைகளின் விலை ரூ. 489 மற்றும் ரூ. 509 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 50 ஜிபி மற்றும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
புதிய ரூ. 489 ஏர்டெல் சலுகைகள் 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ. 509 சலுகையில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 60 ஜிபி அதிவேக டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இரு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டை கடந்ததும், எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1, 1MB டேட்டாவுக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுதவிர இரு சலுகைகளிலும் ஏர்டெல் தேங்ஸ் பலன்களான மூன்று மாதங்களுக்கு அப்போலோ 24|7 சர்கிள் சந்தா, ஃபாஸ்டேகிற்கு ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன் மற்றும் வின்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட புது ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது.
- கடந்த மாதம் தான் ரியல்மி தனது 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்தது.
ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி சீன வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை குறிப்பிடப்படவில்லை.
எனினும், ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெறும் என ரியலமி உறுதிப்படுத்தி இருக்கிறது. அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்பதை தவிர புது ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் டீசரில் இடம்பெறவில்லை.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த GT நியோ 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சீனாவில் "4" ஆம் எண் ராசியில்லாத ஒன்றாக பார்க்கப்படுவதால், ரியல்மி நிறுவனம் GT நியோ 4 பெயருக்கு மாற்றாக ரியல்மி GT நியோ 5 பெயரில் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார். அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 மாடலில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இண்டகிரேட் செய்யப்பட்ட கைரேகை சென்சார், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், அதிகபட்சம் 256 UFS 3.1 மெமரி வழங்கப்படுகிறது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என இருவித ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
- போக்கோ நிறுவனத்தின் புதிய X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அம்பலமாகி இருக்கிறது.
- போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வந்தது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான போக்கோ, தனது போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனை பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அடங்கிய விளம்பர படம் பதான் திரைப்படத்தின் இடைவெளி சமயத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போக்கோ X5 ப்ரோ போஸ்டரும் டுவிட்டரில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. போக்கோ X5 ப்ரோ வெளியீட்டு தேதி பற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக போக்கோ X5 ப்ரோ டீசரை இந்திய கிரிகெட் அணி வீரரும், போக்கோ விளம்பர தூதருமான ஹர்த்திக் பாண்டியா வெளியிட்டு இருந்தார்.

டுவிட்டரில் வெளியாகி இருக்கும் விளம்பர போஸ்டரில் ஹர்த்திக் பாண்டியா ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படம், அவரின் அருகில் ஸ்மார்ட்போன் அறிமுக தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
போக்கோ X5 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120Hz ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், HDR10+ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
போக்கோ X5 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அட்ரினோ GPU, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத், GPS, 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகிறது.
- விலை உயர்வு தவிர நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை பிரீபெயிட் சலுகைகளின் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஒன்பது டெலிகாம் வட்டாரங்களில் விலை உயர்வை அமலுக்கு கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஹரியானா மற்றும் ஒடிசாவில் குறைந்த விலையில் கிடைத்த பிரீபெயிட் சலுகை விலையை 57 சதவீதம் அதிகரித்தது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் குறைந்த பட்ச பிரீபெயிட் சலுகை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்டெல் ரூ. 99 சலுகை விலை தற்போது ரூ. 155 ஆக அதிகரித்துள்ளது.

ஏர்டெல் ரூ. 99 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி, 200MB டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற பலன்களை வழங்கியது. தற்போது புதிய குறைந்த விலை பிரீபெயிட் சலுகையான ரூ. 155 வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இவை எந்தெந்த பகுதிகள் என்ற விவரம் தற்போது மர்மமாகவே உள்ளது.
"சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எங்களின் குறிக்கோளை அடையும் வகையில், நாங்கள் மீட்டர்டு சலுகையை நிறுத்திவிட்டு, ரூ. 155 விலையில் எண்ட்ரி லெவல் சலுகையை அறிவித்து இருக்கிறோம். இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் உள்ளன. இது பயனர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும்," என ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- ஜியோ தவிர ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க தனது 5ஜி சேவைகளை தொடர்ச்சியாக பல நகரங்களில் வெளியிட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுக்க 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.
"17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம். 2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

"டிசம்பர் 2023 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி ஆர்கிடெக்ச்சரில் வேலை செய்யும். இது 5ஜி ஸ்பெக்ட்ரமை 700MHz, 3500MHz, 26GHz பேண்ட்களில் வழங்குகிறது. ஜியோ 5ஜி சேவைகள் 4ஜி நெட்வொர்க் சாராமல் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.
- சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் கன்சோல்கள் உலகம் முழுக்க பிரபலமாக உள்ளன.
- சோனி கடைசியாக அறிமுகம் செய்த பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது.
சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 மாடலை உருவாக்கும் பணிகளில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பிளே ஸ்டேஷன் 5 தற்போது புது வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது மாடல் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகம் செய்ய சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எனினும், இதுவரை சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ வெளியீடு பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை.

2020 இறுதியில் சோனி பிளே ஸ்டேஷன் 5 அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ப்ரோ வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கன்சோல் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ தான் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.
டாப் எண்ட் மாடல் என்பதால் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ மாடலில் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதன்படி புது கன்சோலில் AMD நிறுவனத்தின் புதிய APU சிப்செட், டிசைனில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இதன் தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தில் மிக முக்கிய மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் புது பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ மாடலில் வாட்டர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய பிளே ஸ்டேஷன் 5 மாடல்களில் கூலிங் ஃபெயிலிங் மற்றும் லிக்விட் மெட்டல் லீக் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், இதன் மேம்பட்ட வெர்ஷனில் வாட்டர் கூல்டு முறைக்கு மாற சோனி முடிவு செய்திருக்கலாம்.
- ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக இருக்கிறது.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. மத்திய அரசின் "மேக்-இன்-இந்தியா" திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரூ. 8 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இது குறித்த அரசு தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் முன்னணி மொபைல் போன் ஏற்றுமதியாளராக சாம்சங்கை முந்தி இருக்கிறது.

ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் ஆலைகளை தமிழ் நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயக்கி வருகின்றன. இவற்றுக்கு மத்திய அரசின் ஸ்மார்ட்போன் ப்ரோடக்ஷன்-லின்க்டு-இன்செண்டிவ் (PLI) திட்டத்தின் கீழ் உள்ளன. இந்த திட்டம் ஏப்ரல் 2020 வாக்கில் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் PLI திட்டமானது இந்தியாவை ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதன உதிரிபாகங்களின் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பங்கேற்க உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி , ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்க வேண்டும்.
மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தவிர, மேலும் சிறு இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து ஐபோன்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. 2022-23 நிதியாண்டில் இந்தியா 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டில் இருந்த 5.8 பில்லியன் டாலர்களை விட அதிகம் ஆகும்.
- ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14-க்கு தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 14 மாடல் இந்திய சந்தையில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 தற்போது ரூ. 73 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஐபோன் 14 விலை ரூ. 69 ஆயிரத்து 999 என மாறி விடும். இது ஐபோன் 14 மாடலின் பேஸ் வேரியண்ட் (128ஜிபி) விலை ஆகும். இதுதவிர ஐபோன் 14 மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மேலும் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஐபோன் 14 அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள கிராஷ் டிடெக்ஷன் விபத்துக்களை அறிந்து கொண்டு தானாக அவசர உதவி எண்களை அழைத்துவிடும். புது ஐபோன் வாங்க நினைப்போர் இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் மிட்நைட், பர்ப்பில், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட் மற்றும் புளூ போன்ற நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இரண்டு புது சலுகைகளும் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 899 மற்றும் ரூ. 349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரு புதிய ஜியோ சலுகைகளும் மைஜியோ செயலி, ஜியோ வலைதளம் மற்றும் இதர மூன்றாம் தரப்பு வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜியோ சலுகைகளில் அதிகபட்சம் 90 நாட்களுக்கான வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகை தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் வேலிடிட்டி காலம் முழுக்க 75 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர அறிமுக சலுகையாக 5ஜி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 899 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்,தினமும் 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
இந்த சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 349 சலுகை போன்றே ரூ. 899 சலுகையிலும் ஜியோ அறிமுக சலுகை பொருந்தும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுக்க 100 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
- புது கேலக்ஸி ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டுக்கு முன் புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி ஏராளமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் கேலக்ஸி S23 சீரிஸ் ஆஸ்திரேலிய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.
தற்போது அமெரிக்க விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. வெரிசான் தரவுகளில் இருந்து புதிய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ்-க்கு பழைய விலையையே நிர்ணயம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் இதே நிலையை பின்பற்ற சாம்சங் முடிவு செய்திருக்கும் என தெரிகிறது.

விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி S23 பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 64 ஆயிரத்து 950 என துவங்கும் என கூறப்படுகிறது. இதன் 256 ஜிபி விலை விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கேலக்ஸி S23 பிளஸ் 8 ஜிபி ரேம் விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரத்து 134 என துவங்கும் என தெரிகிறது. கேலக்ஸி S23 பிளஸ் மாடலின் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
வழக்கமாக சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல்களின் விலையை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 3 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S22 சீரிஸ் துவக்க விலை ரூ. 72 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், விலையை மாற்ற வேண்டாம் என சாம்சங் முடிவு செய்யும் பட்சத்தில் கேலக்ஸி S23 துவக்க விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்படும்.
அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட AMOLED இன்ஃபினிட்டி O ஃபிளாட் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதன் முன்புறம் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் முறையே 3900 எம்ஏஹெச் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2000 எம்ஏஹெச் பேட்டரி பூஸ்ட் வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த சலுகைகள் மட்டுமின்றி வங்கி சார்ந்த கேஷ்பேக் பலன்களும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ஏராளமான சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் ஆப்பிள் சாதனங்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் சலுகைகள்:
ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கொண்டு மேக்புக் ஏர் M2 சிப் மற்றும் மேக்புக் ப்ரோ 13 இன்ச் மாடல்களை வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி.
தேர்வு செய்யப்பட்ட ஐபோன் மாடல்களுக்கு அப்கிரேடு செய்யு்ம போது ரூ. 12 ஆயிரம் வரை உடனடி சேமிப்பு வழங்கப்படுகிறது. இதில் ரூ. 7 ஆயிரம் உடனடி சேமிப்பு, எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 5 ஆயிரம் கூடுதல் சேமிப்புகள் தேர்வு செய்யப்பட்ட ஐபோன் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சாதனங்களை வாங்கும் போகு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கிடைக்கும் உடனடி சேமிப்புகள்
ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் வாங்கும் போது ரூ. 7 ஆயிரம்
ஐபேட் 10th Gen ரூ. 3 ஆயிரம்
ஐபேட் ஏர் ரூ. 4 ஆயிரம்
ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் ரூ. 5 ஆயிரம்
மேக்புக் ஏர் M2 சிப் ரூ. 10 ஆயிரம்
மேக்புக் ப்ரோ 13 இன்ச் ரூ. 10 ஆயிரம்
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ரூ. 5 ஆயிரம்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ரூ. 4 ஆயிரம்
ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen ரூ. 2 ஆயிரம்
ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
- பணி நீக்கம் செய்த போதிலும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து புது ஊழியர்களை பணியில் அமர்த்தி, மற்ற துறைகளில் முதலீடு செய்ய இருக்கிறது.
மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறார். பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பொருளாதார சூழல் காரணமாக கடின முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சத்ய நாதெல்லா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஊழியர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுமார் 99 ஆயிரம் பேர் அமெரிக்கா தவிர்த்த நாடுகளில் வசிப்போர் ஆவர். மைக்ரோசாப்ட் மட்டுமின்றி டுவிட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பது, நுகர்வோர் செலவு செய்வதை குறைந்து இருப்பது போன்ற காரணங்களால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சத்ய நாதெல்லா நிறுவன ரீதியில் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். செலவீனங்களை மறு கட்டமைப்பு செய்து, வருவாயை முறைப்படுத்த பணி நீக்கம் அத்தியாவசியமான ஒன்று ஆகும்.
பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் புதிதாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும், தொடர்ந்து புது முதலீடுகள் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு தகவல் தெரிவிக்கும் பணி துவங்கிவிட்ட போதிலும், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தான் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும்.






