என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம்.
- ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் கருத்து மோதல்.
ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. இவர் ஒபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி கொண்டே வருகிறது. இவரை ஒபன்ஏஐ நிறுவனம் எதற்காக திடீரென பணிநீக்கம் செய்தது என்ற காரணம் தொர்ந்து மர்மமாகவே உள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டதும் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கருத்து தெரிவித்து இருந்தார். இவர் மட்டுமின்றி டெக் உலகின் முன்னணி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் சாம் ஆல்ட்மேன் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், "மேம்பட்ட, அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் ரிஸ்க் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக குழு இத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணத்தை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருந்தார். எனினும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். மேலும் நிறுவனத்தில் தனது பங்குகள் அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சேவைகளை அவசர அவசரமாக தயார் செய்து வெளியிட்டன.
- தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிப்பு.
தொழில்நுட்ப உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒபன்ஏஐ. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சேவை டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுபட துவங்கின. முன்னணி டெக் பிராண்டுகள் ஏற்கனவே உருவாக்கி வந்த சேவைகளை அவசர அவசரமாகவும் தயார் செய்து வெளியிட்டன.
இந்த நிலையில், தொழில்நுட்ப உலகையே அதிரச் செய்யும் அறிவிப்பு ஒன்றை ஒபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதோடு ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

"ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் தெளிவற்ற நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அதன் தலைமை செயல் அதிகாரி குறித்து இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பதும், திடீரென பதவியில் இருந்து விடுவிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒபன்ஏஐ நிர்வாக குழு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தை ஆல்ட்மேன் செய்திருக்க வேண்டும், அல்லது ஆல்ட்மேன் மற்றும் நிர்வாக குழு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
- அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
- சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் நம்பிக்கை.
ஆப்பிள் நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (ஆர்.சி.எஸ்.) ரக மெசேஜிங் வசதியை வழங்க இருக்கிறது. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதன்படி அடுத்த ஆண்டு முதல் ஐபோன்களில் ஆர்.சி.எஸ். வசதி வழங்கப்படும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஆர்.சி.எஸ். வழிமுறை வழக்கமான எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.-களுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐபோன்களில் ஆர்.சி.எஸ். ஐமெசேஜ் உடன் வழங்கப்பட இருக்கிறது. இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஆர்.சி.எஸ். மெசேஜிங்கை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள ஐமெசேஜ் சேவையை நீக்காமல், கூடுதலாக ஆர்.சி.எஸ். சேவையை வழங்க இருக்கிறது. ஐபோன் பயனர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஐமெசேஜ் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆர்.சி.எஸ். அறிமுகம் செய்யப்பட்டாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
- விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
- போக்குவரத்து காவல் துறையினர் சலானை அனுப்பி வருகின்றனர்.
வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை மீறி செல்லும் போது அபராதம் செலுத்த வேண்டும். இதே போன்ற விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் செலுத்துவதற்கான சலானை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், பயனர்கள் சலான் செலுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில், கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புதிய வசதியை கொண்டுவந்து இருக்கிறது.

இதற்காக கூகுள் மேப்ஸ் சேவையில் எந்தெந்த பகுதிகளில் வேகக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களை உலகளவில் வழங்கிவருகிறது. அதன்படி உள்ளூர் சாலை ஒன்றில் செல்லும் போது வேகக்கட்டுபாடுகளுக்கு ஏற்ப சலான் பெறுவதை தவிர்க்க செய்யும் கூகுள் மேப்ஸ் அம்சத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
- ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை லான்ச் செய்யுங்கள்
- அக்கவுண்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- பிறகு செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனில் உள்ள நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்
- நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷனில் உள்ள டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனில் உள்ள ஸ்பீடோமீட்டர் (Speedometer) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ததும் கூகுள் மேப்ஸ் கொண்டு நேவிகேட் செய்யும் போது ஜி.பி.எஸ். வேகம் காண்பிக்கப்படும். இந்த அம்சம் வேகம் அதிகரிக்கும் போது நிறம் மாறி எச்சரிக்கை விடுக்கும்.

ஸ்பீடோமீட்டர் எப்படி வேலை செய்யும் என்பது பற்றி கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. தொழில்நுட்பம், ஸ்டிரீட் வியூ படங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு படங்களை பயன்படுத்தி கூகுள் மேப்ஸ் வேகக்கட்டுப்பாடு பற்றிய எச்சரிக்கையை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க நூற்றுக்கும் அதிகமான அடையாள குறியீடுகளில் சோதனை செய்யப்பட்டது.
இவ்வாறு கூகுள் மேப்ஸ்-இல் உள்ள ஏ.ஐ. மாடல் ஒரு எச்சரிக்கை குறியீடை கண்டறிந்தால். உடனே ஜி.பி.எஸ். விவரங்களை கொண்டு அதில் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதற்கு ஏற்ப வேகக்கட்டுப்பாடு விதிகளை அப்டேட் செய்து கொள்ளும். இதோடு போக்குவரத்து முறைகளை கொண்டு வேகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும்.
- கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
- விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் பேக்கப் செய்வது குறித்து கூகுள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் தங்களின் ஃபைல் சைஸ் அளவை குறைக்கவோ அல்லது கூடுதல் ஸ்டோரேஜை வாங்கிக் கொள்ளலாம் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. தற்போது வரை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 15 ஜி.பி. வரையிலான தரவுகளை இலவசமாக வைத்துக் கொள்ள முடியும்.
பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் ஸ்டோரேஜை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கூகுள் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் இந்த வழிமுறையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
"ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்கப்களை செயல்படுத்த விரும்பினால், தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்களுடன் 15 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இது கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற மொபைல் தளங்களில் பகிரப்படுவதை விட மும்மடங்கு அதிகம் ஆகும்."
"பயனரின் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்-இல் ஸ்டோரேஜ் இருக்கும் வரை ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பேக்கப்கள் தொடர்ந்து வேலை செய்யும். ஸ்டோரேஜ் அளவை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பேக்கப் சேவையை பெற ஸ்டோரேஜை அதிகப்படுத்த வேண்டும்," என்று கூகுள் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய மாற்றத்தின் படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு அடுத்தாண்டு துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் அமலுக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
- புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்வதாக தகவல்.
- இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஐபோன்களின் பேட்டரி பேக்கப் அதிகரிக்க சாம்சங் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் OLED பேனல்களை சாம்சங் நிறுவனமும் உற்பத்தி செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
அதன்படி OLED உற்பத்தியில் சாம்சங் மேற்கொள்ள இருக்கும் அதிரடி மாற்றம் காரணமாக ஐபோன்களின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வகை பொருட்கள் குறைந்த அளவு மின்திறனை எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வில் உருவாக்கப்படும் புதிய வகை பாகங்கள், ஏற்கனவே உள்ள OLED பாகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
2026 ஆண்டு வாக்கில் சாம்சங்கின் புதிய வகை தொழில்நுட்பம் தயார் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஐபோன் என்ற பெருமையை ஐபோன் 18 பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
- பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்க முடியும்.
வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் தான் "சாட் லாக்" (Chat Lock) என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனரின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் கூடுதல் அம்சத்தினை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து இருக்கிறது.
"சீக்ரெட் கோட்" (Secret Code) என்று அழைக்கப்படும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு பயனர்கள் லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.20 வெர்ஷனை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் லாக்டு சாட்களில் புதிதாக செட்டிங்ஸ் ஆப்ஷனை பார்க்க முடியும். இந்த பகுதியில் லாக்டு சாட்களை இயக்க அனுமதிக்கும் என்ட்ரி பாயின்ட்-ஐ மறைத்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. சீக்ரெட் கோட் செட்டப் செய்து முடித்ததும், லாக்டு சாட்-இல் என்ட்ரி பாயின்ட் சாட் லிஸ்ட்-இல் இடம்பெற்று இருக்காது.
மாறாக பயனர்கள் சாட் டேப்-இல் உள்ள சர்ச் பாரில் சீக்ரெட் கோடை பதிவிட்டு, லாக்டு சாட்-ஐ இயக்க முடியும். ஒருவளை சீக்ரெட் கோட்-ஐ பயனர்கள் மறந்து போகும் பட்சத்தில், சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.
Photo Courtesy: WABetaInfo
- ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
- தமிழகத்தின் 21 மாவட்டங்களில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிராட்பேண்ட்-போன்ற இணைய சேவையை ஜியோ 5ஜி கனெக்டிவிட்டி மூலம் வழங்குவதே ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆகும். முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர் ஃபைபர் சேவை தற்போது நாடு முழுக்க 115 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஜியோ ஏர் ஃபைபர் சேவை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆம்பூர், மதுரை, கரூர், நாமக்கல், நெய்வேலி, பொள்ளாச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர், கும்பகோணம், திருச்சி, திருப்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை ஜியோ ஏர் ஃபபைர் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 599 என துவங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் 30Mbps வரையிலான இணைய வேகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்பட 11 ஒ.டி.டி. சேவைக்கான சந்தா, 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ. 899, ரூ. 1199, ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 விலைகளில் வழங்கப்படுகின்றன. ரூ. 3999 சலுகை 30 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1Gbps வேகம் கொண்ட இணைய சேவை, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைக்கான சந்தா மற்றும் 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.
- கூகுள் அக்கவுண்ட் மற்றும் அதன் தரவுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும்.
- இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம்.
ஜிமெயில் சேவையை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களின், அக்கவுண்ட்-ஐ இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையாக, டிசம்பர் 2023 மாதத்தில் லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட்கள் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை, டிசம்பர் மாதத்தில் இருந்து அழிக்கும் வகையில், நடைமுறை மாற்றங்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட், அதன் தரவுகள் கூகுள் வொர்க்ஸ்பேஸ்-இன் கீழ் உள்ள ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர் உள்ளிட்டவைகளும், கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணை தலைவர் ரூத் ரிச்செலி தெரிவித்துள்ளார்.

"எங்களது மதிப்பீடுகளின் படி, தொடர்ந்து பயன்படுத்தும் அக்கவுண்ட்களுடன் ஒப்பிடும் போது பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவு என தெரியவந்துள்ளது. இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதன்பிறகு, இதனை எந்த விதமான தீய செயல்களுக்கும் எளிதில் பயன்படுத்த முடியும்," என்று இது தொடர்பான வலைதள பதிவில் ரூத் ரிச்செலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் கீழ் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ இரண்டு ஆண்டுகள் வரை திறக்காமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்கள் மட்டுமே பாதிக்கப்படும். இதன் காரணமாக நிர்வாகங்களான பள்ளி மற்றும் வியாபாரங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கூகுள் அக்கவுண்ட்-ஐ பாதுகாப்பது எப்படி?
கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அதனை சைன்-இன் செய்ய வேண்டும். சமீபத்தில் ஏதேனும் கூகுள் சேவையை பயன்படுத்துவதற்கு கூகுள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தி இருந்தாலும், அக்கவுண்ட் ஆக்டிவ் நிலையில் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும்.
- ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே உள்ளது.
- ஐபோன் 14 ஏ15 பயோனிக் சிப்செட், 5-கோர் ஜி.பி.யு. கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 மாடலின் அம்சங்கள், ஐபோன் 13-க்கு இணையாகவே இருந்ததால் அதிக கவனம் பெறவில்லை. பலரும் இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் இருப்பதால், வாங்க வேண்டுமா என்ற நிலையில் இருந்தனர். தற்போது ஐபோன் 14 மாடலுக்கு அச்த்தலான தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் அங்கமாக ஐபோன் 14 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 43 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன் 14 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இது ஆப்பிள் வலைதள விலையை விட ரூ. 11 ஆயிரத்து 901 வரை குறைவு ஆகும். இதுதவிர எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 42 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து சலுகைகளையும் முழுமையாக பெறும் போது ஐபோன் 14-ஐ ரூ. 14 ஆயிரத்து 499-க்கு விலையில் வாங்கிட முடியும்.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், 5-கோர் ஜி.பி.யு., ஃபேஸ் ஐ.டி. 12MP டூயல் பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 மாடலிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஜி.டி.ஏ. 6 வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது.
- ராக்ஸ்டார்-இன் 25-வது ஆண்டு விழா கொண்டாட்டம் அடுத்த மாதம் நடைபெறகிறது.
ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஜி.டி.ஏ. 6 (GTA 6) கேமின் டிரைலர் டிசம்பர் மாத துவக்கத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த கேம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில், ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம் ஹௌசர், ராக்ஸ்டார்-இன் 25-வது ஆண்டு விழா கொண்டாட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும் இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

கோப்புப் படம்
2013-ம் ஆண்டு ஜி.டி.ஏ. 5 வெளியிடப்பட்டது. இதுவரை ஜி.டி.ஏ. 5 கேம் 190 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில் 5 மில்லியன் யூனிட்கள் 2023 ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனையாகி இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைக்கு ஏற்ப தொடர்ச்சியான அப்டேட்கள் வழங்கியதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் ஜி.டி.ஏ. கேமின் ஆன்லைன் பிரிவுக்கு இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது.
"டிசம்பர் மாத துவக்கத்தில், நாங்கள் அடுத்த கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ கேமிற்கான முதல் டிரைலரை வெளியிட இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற அனுபவத்தை பல ஆண்டுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்று சாம் ஹௌசர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜி.டி.ஏ. 6 வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது. மேலும் இந்த கேம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கேமிங் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், இந்த கேமிற்கான டிரைலர் வெளியீட்டு தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ் சலுகைகளில் மட்டும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீபாவளியை கொண்டாடும் வகையில், பயனர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 251 ரிசார்ஜ் வவுச்சரில் பி.எஸ்.என்.எல். கூடுதல் டேட்டா வழங்குகிறது. இதுதவிர மற்ற ரிசார்ஜ் சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்குகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 251, ரூ. 299 மற்றும் ரூ. 398 போன்ற ரிசார்ஜ் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது.

பி.எஸ்.என்.எல். ரூ. 251 ரிசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள 70 ஜி.பி. டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வேலிடிட்டி முடிந்த பிறகு, கூடுதல் டேட்டா காலாவதியாகிவிடும். ரூ. 299 ரிசார்ஜ் செய்வோருக்கும் 3 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இதனை பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி மூலம் அன்லாக் செய்துகொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 299 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதேபோன்று பி.எஸ்.என்.எல். ரூ. 398 வவுச்சரிலும் கூடுதலாக 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், வேலிடிட்டி முடியும் வரை 120 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.






