என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இந்த விஷயத்தில் எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க முடியும்.
    • ஐபோன்கள் தனக்கு டெலிவரி செய்யப்பட்டதும், அவர் அதிர்ந்து போனார்.

    ஆன்லைன் குறைந்த விலை கொண்ட பொருளை ஆர்டர் செய்து, மாறாக விலை உயர்ந்த பொருள் டெலிவரி செய்யப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறதா? ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுதலாக ஆர்டர் மாறி டெலிவரி செய்யப்படுவதும், மாற்றப்படுவதும் சாதாரண விஷயமாகி விட்டது. அந்த வகையில், வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்காக நான்கு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    நான்கு ஐபோன்களை ஆர்டர் செய்தவருக்கு 60 ஐபோன்கள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. டிக்டாக்கில் லெஜன்ட்ஸ்_கியோ என்ற பயனர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-ஐ ஆன்லைனில் ஆர்டர் செயதார். இதில் ஒரு யூனிட் (1 டி.பி.) தனக்கும், மற்ற மூன்று (256 ஜி.பி.) யூனிட்கள் ஊழியர்களுக்காக ஆர்டர் செய்யப்பட்டது.

    ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள் தனக்கு டெலிவரி செய்யப்பட்டதும், அவர் அதிர்ந்து போனார். இவர் மொத்தம் 3600 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 763 விலையில் புதிய ஐபோன்களை ஆர்டர் செய்தார். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இவருக்கு டெலிவரி செய்த ஐபோன்களின் மதிப்பு 96 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 லட்சத்து 93 ஆயிரத்து 680 ஆகும்.

    ஆப்பிள் நிறுவனம் எப்படி இத்தகைய தவறை செய்திருக்க முடியும் என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழந்துள்ளனர். ஆப்பிளிடம் நேரடியாக சாதனங்களை ஆர்டர் செய்பவர்கள் மிகக் குறைந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க முடியும் என்பது மர்மமாகவே உள்ளது.

    • இந்த அம்சம் குறித்த விவரங்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.6 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சம் ஆகும். இதை கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப்-இல் பகிரப்படும் வீடியோக்களை டபுள்டேப் செய்து ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு என முன்னோக்கியும், பின்னோக்கியும் செல்லலாம். இதன் மூலம் நீண்ட வீடியோக்களை எளிதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

    இந்த அம்சம் குறித்த விவரங்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பயனர்கள் வீடியோக்களை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் பயனர்கள் வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில், எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.6 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு வீடியோக்களை ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு செய்ய முடியும். இது குறித்த ஸ்கிரீன்ஷாட்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.

    • ஆப்பிள் M3 சீரிஸ் சிப்செட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 24 இன்ச் ஐமேக் மாடலில் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ மாடல்களை M3 சிப்செட் மூலம் அப்டேட் செய்த கையோடு 24 இன்ச் ஐமேக் மாடலை முற்றிலும் புதிய M3 சிப் உடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2021 மாடலில் M1 சிப் வழங்கப்பட்ட நிலையில், ஐமேக் மாடலுக்கு மிகப் பெரிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. M3 சிப்செட் கொண்ட புதிய ஐமேக் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட இருமடங்கு வேகமானது ஆகும்.

    புதிய மாடலிலும் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே, அதிவேக வைபை 6E வயர்லெஸ் கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 24 ஜி.பி. யுனிஃபைடு மெமரி, அடுத்த தலைமுறை GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஹார்டுவேர் அக்செல்லரேடெட் மெஷ் ஷேடிங் மற்றும் ரே டிரேசிங் போன்ற வசதிகளை வழங்குகிறது.

     

    ஆப்பிள் ஐமேக் 24 இன்ச் 2023 அம்சங்கள்:

    24 இன்ச் 4480x2520 பிக்சல் 4.5K ரெட்டினா XDR டிஸ்ப்ளே

    ஆப்பிள் M3 சிப்

    8 ஜி.பி. யுனிஃபைடு மெமரி

    256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    மேக் ஒ.எஸ். சொனோமா

    பேக்லிட் மேஜிக் கீபோர்டு

    மேஜிக் கீபோர்டு மற்றும் டச் ஐ.டி.

    வை-பை 6E

    ப்ளூடூத் 5.3

    1080 பிக்சல் ஃபேஸ் டைம் ஹெச்.டி. கேமரா

    ஸ்பேஷியல் ஆடியோ

    டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 3

    யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1 ஜென் 2

    இந்திய சந்தையில் 24 இன்ச் ஐமேக் M3 (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. யுனிஃபைடு மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பல்வேறு சாதனங்களில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    • ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    சியோமி நிறுவனம் தனது பத்து ஆண்டுகள் பழைய எம்.ஐ.யு.ஐ.-க்கு மாற்றாக ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஒ.எஸ்.-ஐ சியோமி நிறுவனம் "ஹியுமன்-சென்ட்ரிக்" ஒ.எஸ். என்று குறிப்பிட்டு உள்ளது. புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி நிறுவன ஸ்மார்ட்போன், கார் மற்றும் வீட்டுசாதன பொருட்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த 13 ஆண்டுகளில் சியோமி நிறுவனம் உலகளவில் 1.175 பில்லியன் பயனர்களை கடந்து, கிட்டத்தட்ட 200 பிரிவுகளில் சாதனங்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. எனினும், பல்வேறு சாதனங்களுக்கான ஒ.எஸ்.-களில் ஏராளமான பிரச்சினைகள் மற்றும் செயலாக்க இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் 2017-ம் ஆண்டு சியோமி நிறுவனம் தனது சாதனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த சிஸ்டம் ஒன்றில் உள்ளடக்க திட்டமிட்டு ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ உருவாக்கி இருக்கிறது.

    சியோமி 14 சீரிஸ், சியோமி வாட்ச் S3, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. உள்ளிட்டவைகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இது முற்றிலும் புதிய யூசர் இன்டர்ஃபேஸ் அனுபவத்தை வழங்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. நான்கு மிகமுக்கிய இலக்குகளை குறிவைத்து ஹைப்பர் ஒ.எஸ். உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி லோ-லெவல் ரி-ஃபேக்டரிங், கிராஸ்-எண்ட் இன்டெலிஜண்ட் கனெக்டிவிட்டி, ப்ரோ-ஆக்டிவ் இன்டெலிஜன்ஸ் மற்றும் என்ட்-டு-என்ட் செக்யுரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரதானமாக கவனம் செலுத்துகிறது.

    ஸ்மார்ட்போன்களில் ஹைப்பர் ஒ.எஸ். ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 முதல் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் சாதனங்களுக்கான ஹைப்பர் ஒ.எஸ். சியோமி வெலா ஓபன்-சோர்ஸ் சிஸ்டத்தின் மீது உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹைப்பர் ஒ.எஸ்.-இல் உள்ள ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    டி.இ.இ. ஹார்டுவேர் மற்றும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் மூலம் ஹைப்பர் ஒ.எஸ். பயனரின் தகவல்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

    வெளியீடு எப்போ தெரியுமா?

    சியோமியின் புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி 14, சியோமி 14 ப்ரோ, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. மற்றும் சியோமி வாட்ச் S3 போன்ற சாதனங்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ஓவர்-தி-ஏர் முறையில் ஹைப்பர் ஒ.எஸ். அப்டேட் டிசம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரெட்மி K60 அல்ட்ரா, சியோமி பேட் 6 மேக்ஸ் 14 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 65 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 75 இன்ச், சியோமி சவுண்ட் ஸ்பீக்கர், சியோமி ஸ்மார்ட் கேமரா 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது.

    சீன சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். வெளியீட்டுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. சர்வதேச சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரீமியம் பிளஸ், பேசிக் ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் வாங்கிக் கொள்ள முடியும்.
    • மூன்று விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    எக்ஸ் வலைதளத்தில் பிரீமியம் பிளஸ் மற்றும் பேசிக் என இரண்டு புதிய சந்தா முறைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் பிரீமியம் பிளஸ் சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பின் மூலம் எக்ஸ் தளத்தில் பயனர்கள் தற்போது மூன்று விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய எக்ஸ் பேசிக் சந்தாவின் விலை மாதம் ரூ. 243 (வலைதள பதிப்பு) என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்தாவில் விளம்பரங்கள் இடம்பெற்று இருக்கும்.

    இத்துடன் பதிவுகளை எடிட் செய்வது, மாற்றிக் கொள்வது, எஸ்.எம்.எஸ்., கஸ்டமமைசேஷன் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் கிரியேட்டர் அம்சங்கள் மற்றும் டிக் மார்க் உள்ளிட்டவை வழங்கப்படாது. ஏற்கனவே உள்ள பிரீமியம் சந்தா விலை மாதம் ரூ. 650 (வலைதள பதிப்பு) ஆகும். இதில் அனைத்து விதமான பிரீமியம் மற்றும் கிரியேட்டர் அம்சங்கள், குறைந்த விளம்பரங்கள் வழங்கப்படும்.

    விளம்பரங்கள் தேவையில்லை எனில், மாதம் ரூ. 1300 (வலைதள பதிப்பு) செலுத்தி பிரீமியம் பிளஸ் சந்தாவை பெற்றுக் கொள்ளலாம். புதுவித சந்தா முறைகளில் பிரீமியம் பிளஸ் மற்றும் பேசிக் ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.

    • பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பல்வேறு பொருட்களுக்கும் அதிக சலுகைகள் வழங்கிய "பிக் பில்லியன் டேஸ்" சிறப்பு விற்பனை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், "பிக் தசரா சேல்" என்ற பெயரில் மற்றொரு சிறப்பு விற்பனையை ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. இதிலும் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. தற்போது ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், தற்போதைய விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 901 வரை குறைவு ஆகும்.

     

    தள்ளுபடி மட்டுமின்றி கோடக் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சாதனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 31 ஆயிரத்து 150 வரை தள்ளுபடி பெற முடியும். ஐபோன் 14 மாடலின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 66 ஆயிரத்து 999 மற்றும் 86 ஆயிரத்து 999 விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இவற்றின் முந்தைய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 99 ஆயிரத்து 900 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஐபோன் 14 மாடல் பிராடக்ட் ரெட், புளூ, மிட்நைட், பர்பில் மற்றும் ஸ்டார்லைட் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது.
    • விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

    டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். மேலும் இதே தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.

    அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் PLI திட்டம் மூலம் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு நம்பத்தகுந்த மற்றும் மிகமுக்கிய தளமாக உருவெடுத்து இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகளில், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது."

    "விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துகள். இதுவரை வழங்கிய பங்களிப்புகள் அனைத்திற்கு விஸ்ட்ரன் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தியாவில் இருந்து இந்திய நிறுவனங்களை வைத்து சர்வதேச விநியோகத்தை விரிவுப்படுத்த இருக்கும் ஆப்பிள் சரியான முடிவை எடுத்து இருக்கிறது."

    "இந்தியாவை சக்திவாய்ந்த மின்னணு தளமாக உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவுவதற்கும், இந்தியாவில் தங்களது சாதனங்களை நம்பிக்கையாக உற்பத்தி செய்ய முன்வரும் சர்வதேச மின்னணு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையான ஆதரவை வழங்கும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எக்ஸ் வலைதளத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சம் பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
    • எக்ஸ் வலைதளத்தை எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்ற எலான் மஸ்க் விருப்பம்.

    எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவலை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. வீடியோ கால் அம்சம் பற்றிய தகவலை லிண்டா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்நிறுவன வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் ஆப்ஷனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் யார் யார் தனக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பதை தேர்வு செய்வதற்கான வசதியும் பயனருக்கு வழங்கப்படுகிறது. இதில் அட்ரஸ் புக்கில் இருப்பவர்கள், யார்யார் ஃபாளோ செய்கிறார்கள் மற்றும் அனைவரும் என மூன்று நிலைகளில் ஒரு ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

    ஆடியோ, வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

    அழைப்புகளுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய எக்ஸ் செயலியின் செட்டிங்ஸ் -- பிரைவசி & சேஃப்டி -- டைரக்ட் மெசேஜஸ் -- எனேபில் ஆடியோ & வீடியோ காலிங் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு டைரக்ட் மெசேஜ் ஆப்ஷனில் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஐகான் தெரியும். அதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ளலாம்.

    • கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
    • பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேட வேண்டும்.

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ம் கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகை அல்லது விசேஷ நாட்களை கொண்டாடும் வகையில், கூகுள் தனது வலைதளத்தில் டூடுல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த டூடுல்கள் கார்டூன் படங்களாகவும், அனிமேஷன் வீடியோக்களாகவும் இடம்பெற்று இருக்கும்.

    அந்த வகையில் தீபாவளியை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேடினால், தீபாவளி என்ற வார்த்தையின் அருகில் நட்சத்திரங்களால் சூழப்பட்ட விளக்கு காணப்படுகிறது. பயனர்கள் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இனி க்ளிக் செய்த விளக்கு மிளிர்ந்து, அந்த வலைப்பக்கம் முழுக்க இன்னும் அதிக விளக்குகள் தோன்றும். இதோடு வலைப்பக்கம் இருளில் இருப்பது போன்று காட்சியளிக்கும், இதைத் தொடர்ந்து பயனர்கள் மவுஸ் பாயின்டரை அசைத்தால், விளக்கும் அசையும். அதன்படி பயனர்கள் வலைப்பக்கத்தில் உள்ள விளக்குகள் அனைத்தையும் பற்ற வைக்கலாம்.

    இவ்வாறு செய்ததும், வலைப்பக்கம் முழுக்க மெல்ல வெளிச்சமுற்று சாதாரண வலைப்பக்கமாக மீண்டும் மாறிவிடும். இதே எஃபெக்ட் கணினி மட்டுமின்றி கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களிலும் இயங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது.
    • இந்த சலுகையில் அன்லிமிடெட் காலிங், 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோ தொடர்ச்சியாக வருடாந்திர ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து வருகிறது. இவற்றுடன் ஒ.டி.டி. சந்தாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் வழங்கப்படுகிறது.

    ஜியோவின் புதிய ரூ. 3,227 பிரீபெயிட் சலுகையில் அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் காலிங் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை மை ஜியோ செயலி அல்லது ஜியோ வலைதளத்தில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.

     

    சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையின் முன்னணி இணைய சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. சந்தையில் ஜியோ நிறுவனம் மட்டும் 52 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    ஜியோ சேவையை 442 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களும், 9.4 மில்லியன் வயர்டு பிராட்பேண்ட் பயனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    • ஸ்டாண்டர்டு பெயரில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது.
    • சந்தாவில் மட்டும் விளம்பரங்கள் இன்றி எக்ஸ் தளத்தை பயன்படுத்தலாம்.

    எக்ஸ் வலைதளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வரவிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்து இருக்கும் நிலையில், இவை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    இரண்டு புதிய சந்தா முறைகளில் ஒன்று குறைந்த விலையிலும், மற்றொன்று அதிக விலையிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. இவற்றின் குறைந்த விலை திட்டத்தில் விளம்பரங்கள் எதுவும் குறைக்கப்படாது என்றும், விலை உயர்ந்த சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி, எக்ஸ் தளத்தில் சந்தா முறைகளை பேசிக், ஸ்டாண்டர்டு மற்றும் பிளஸ் என மூன்று நிலைகளில் பிரிப்பது பற்றி எக்ஸ் தலைமை செயல் அதிகாரி லிண்டா ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்படி தற்போது எலான் மஸ்க் தெரிவித்து இருக்கும் இரண்டு சந்தா முறைகள் பேசிக் மற்றும் பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    தற்போது பயன்பாட்டில் இருக்கும் சந்தா முறை ஸ்டாண்டர்டு பெயரில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய சந்தா முறைகளின் படி பிளஸ் சந்தாவில் மட்டும் விளம்பரங்கள் இன்றி எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    • பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்தலாம்.
    • தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.

    வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும் என்று மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் வழங்கப்படும் போது, பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை பயன்படுத்துவதற்கு தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட அக்கவுண்ட் ஸ்விட்சிங் அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை நிர்வகிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.

     

    தற்போதைய அறிவிப்பின் படி டூயல் சிம் கொண்ட போன்களில் பயனர்கள் இந்த அம்சத்தினை பயன்படுத்த முடியும். இரண்டாவது அக்கவுண்டை பயன்படுத்துவதற்காக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை வாட்ஸ்அப் மற்றொரு சாதனம் அல்லது மாற்று சிம் கார்டில் அனுப்புகிறது.

    இதனை பயன்படுத்தி அக்கவுண்ட்-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு, செயலி இரண்டு அக்கவுண்ட்களிலும் இயங்கும். முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரே மொபைலில் இரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி?

    வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ஆட் அக்கவுண்ட் (Add Account) ஆப்ஷனை தொடர்ந்து பிரைவசி மற்றும் நோட்டிஃபிகேஷன் செட்டிங்களை இரண்டு அக்கவுண்ட்களுக்கும் தனித்தனியே செட்டப் செய்து கொள்ள வேண்டும்.

    ×