என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஹார்டுவேர் கீபோர்டு கொண்ட பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் இந்த ஆண்டு பிளாக்பெரி பிராண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய போவதாக கடந்த ஆண்டே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் பிரான்க்ளின் புது பிளாக்பெரி மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    மேலும் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஹார்டுவேர் கீபோர்டு மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். பிளாக்பெரியின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்க ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

    முதற்கட்டமாக 5ஜி பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஆசிய சந்தைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி ஆன்வார்டு மொபிலிட்டி இதுவரை உறுதியான விவரங்களை வழங்கவில்லை.

     பிளாக்பெரி ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக்பெரியின் புகழ்பெற்ற பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும். பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆன்வார்டு மொபிலிட்டி 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஆகும். இது தலைசிறந்த பாதுகாப்பு கொண்ட மொபைல் மென்பொருள் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியான பிரான்க்ளின் முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். 
    வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப், சமீபத்தில்  தனது தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்தது. புதிய மாற்றத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழந்ததை தொடர்ந்து தனியுரிமை கொள்கையை அமலாக்குவதை வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. 

    இந்த நிலையில் வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம்,  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக்  ஆகியவை பதிளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது. 

     கோப்புப்படம்

    மனு விசாரணையின் போது, பணத்தை விட தனிப்பட்ட தகவல்களை இந்திய மக்கள் பெரிதாக  கருதுகின்றனர். மக்களின் தனியுரிமையை  பாதுகாக்க நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என கருத்து இருக்கிறது.

    வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், வாட்ஸ்அப் செயலி இந்திய பயனர்களுக்கு மிக குறைந்த அளவு தனியுரிமையை வழங்க முயற்சித்துள்ளது. மேலும் பேஸ்புக்குடன் தகவல்களை பகிராவிட்டால் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என உத்தரவு பிறப்பித்தது என வாதிட்டார். 

    ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிகெட் தொடரை இலவசமாக பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பயனர்களுக்கு இந்தியாவில் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பிப்ரவரி 5 துவங்கி மார்ச் 28 வரை இந்திய அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையில் ஒரே டெஸ்ட் போட்டி மட்டுமே நிறைவுற்று இருக்கிறது. இந்நிலையில், தொடரின் மற்ற போட்டிகளை ஜியோ பயனர்கள் இலவசமாக பார்க்க முடியும்.

    ஜியோ பயனர்கள் தங்களின் ஜியோடிவி செயலி மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம். இந்த சேவைக்கு பயனர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலி கொண்டு நேரலை போட்டிகள் மட்டுமின்றி, ஹைலைட்களையும் பார்க்க முடியும்.

    ஜியோடிவி  செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. இதற்கு சரியான பிளே ஸ்டோர் சென்று செயலியை டவுன்லோட் செய்து போட்டிகளை பார்க்கலாம்.
    சியோமி நிறுவனம் காதர் தினத்தை முன்னிட்டு தனது சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    காதலர் தினத்தை முன்னிட்டு சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்து இருக்கிறது. சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவன சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனை சியோமி இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.

    காதலர் தின சிறப்பு விற்பனையில் அணியக்கூடிய சாதனங்கள், ஆடியோ, ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஐஒடி சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

    சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடல் விலை ரூ. 10,999 இல் இருந்து தற்சமயம் ரூ. 7,999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட்மி பேண்ட் மாடல் விலை ரூ. 1,599 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,399 என குறைக்கப்பட்டு உள்ளது.

     சியோமி

    சியோமி எம்ஐ டிவி 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல் விலை ரூ. 23,999 என்றும், எம்ஐ டிவி 4எக்ஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 27,999 என்றும், எம்ஐ டிவி 4எக்ஸ் 50 இன்ச் மாடல் விலை ரூ. 33,999 என்றும், எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் 32 இன்ச் மாடல் விலை ரூ. 15,499 என குறைக்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஐ டிவி ஸ்டிக் விலை ரூ. 2299 என்றும் எம்ஐ பாக்ஸ் 4கே விலை ரூ. 3299 என்றும் மாற்றப்பட்டு உள்ளது. எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடல் விலை ரூ. 2999, எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2சி மாடல் விலை ரூ. 2199, எம்ஐ டூயல் டிரைவர் இன்-இயர் இயர்போன் விலை ரூ. 699 என மாறி உள்ளது.

    ரெட்மி பவர் பேங்க் விலை ரூ. 1199, எம்ஐ ஸ்மார்ட் வாட்டர் பியூரிபையர் ரூ. 10,999, எம்ஐ ஏர் பியூரிபையர் விலை ரூ. 9999 மற்றும் எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி விலை ரூ. 899 என குறைக்கப்பட்டு இருக்கிறது.
    ஆண்ட்ராய்டு 12 தளத்தின் பீட்டா அப்டேட் வெளியீடு தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கூகுள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல்வேறு புது அம்சங்களை வழங்குவதோடு, இன்டர்பேஸ் அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆண்ட்ராய்டு 12 தளத்தில் புது இன்டர்பேஸ் பற்றிய விவரங்களுடன், இதனை கூகுள் நிறுவனம் இந்த மாதத்திலேயே வெளியிடலாம் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 டெவலப்பர் பிரீவியூ பிப்ரவரி 17 ஆம் தேதியும், ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் வெர்ஷன் செப்டம்பர் 2 ஆம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஆண்ட்ராய்டு 7 முதல் 9 வரையிலான வெர்ஷன்களை ஆகஸ்ட் மாதத்தின் திங்கள் கிழமைகளில் வெளியிட்டது. பின் செப்டம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை தினத்தன்று ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 வெளியானது. அந்த வரிசையில் இந்த ஆண்டு செப்டம்பர் 2-இல் ஆண்ட்ராய்டு 12 வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     கூகுள்

    கூகுள் நிறுவனத்தின் டிசைன் கான்செப்ட் விவரங்களில் ஆண்ட்ராய்டு 12 தளத்தில் புது நோட்டிபிகேஷன் யுஐ இடம்பெற்று இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி குவிக் செட்டிங்ஸ் ஐகான்களின் எண்ணிக்கை ஆறில் இருந்தது நான்கு என குறைக்கப்படுகிறது. மேலும் ஐகான்கள் முன்பை விட பெரிதாக இருக்கிறது. தேதி மற்றும் கடிகாரம் உள்ளிட்டவை டிஸ்ப்ளேவின் முன்புறத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 

    மேலும் வலதுபுறத்தில் புதிதாக பிரைவசி இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இதனை  க்ளிக் செய்தால் எந்தெந்த செயலிகள் ஸ்மார்ட்போனின் மைக்ரோபோன் மற்றும் கேமரா விவரங்களை இயக்குகின்றன என்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இவைதவிர புதிய தளத்தில் மேலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் இன் நோட் 1 மாடலுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் விவரங்களை பார்ப்போம்.


    இந்திய சந்தையில் நீண்ட இடைவெளிக்கு பின் மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் ரி-என்ட்ரி கொடுத்தது. அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
     
    அறிமுக நிகழ்விலேயே புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சமீபத்திய இணைய உரையாடலின் போது மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா இன் நோட் 1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஏப்ரல் மாத வாக்கில் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மைக்ரோமேக்ஸ் போரம்களில் ஆண்ட்ராய்டு 11 early access விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

     ஆண்ட்ராய்டு 11

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ஜனவரி 2021 அப்டேட் வழங்கப்பட்டு, EIS, RAW மோட் போன்ற அம்சங்கள், செல்பி கேமராவில் மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டன. இன் நோட் 1 ஸ்மார்ட்போனை தொடர்ந்து இன் 1பி மாடலுக்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.

    இவைதவிர மைக்ரோமேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய கேள்விக்கும் ராகுல் ஷர்மா பதில் அளித்தார். அதன்படி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இரு சாதனங்களும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
    இந்திய சந்தையில் விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 5ஜி சேவையை வழங்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் துவங்கலாம் என கூறப்படுகிறது.

    5ஜி சோதனை குறித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்-க்கு வந்த 16 கோரிக்கைகள் பற்றி பாராளுமன்ற குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு, இந்தியாவில் ஏன் இன்னும் 5ஜி சேவைக்கான சோதனை துவங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    டெலிகாம் நிறுவனங்களுக்கு இதுவரை 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்படாதது பற்றி பாராளுமன்ற குழு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை வாங்கும் முறை முன்பை விட எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் 5ஜி சோதனைக்கான விண்ணப்பங்களில் கல்வி, ஆரோக்கியம், விவசாயம், பொது பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. நிதி துறையில் 5ஜி பயன்பாட்டுக்கு டிராய் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதுகுறித்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.
    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதரடியாக நீக்கி இருக்கிறது. மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நீக்கப்பட்ட செயலிகள் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை தவறாக கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு அச்சுறுத்தல் செய்தல், மக்களை பயமுறுத்துதல், தவறான வகையில் கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

     கூகுள் பிளே ஸ்டோர்

    தீங்கு விளைவிக்கும் செயலிகள் பற்றிய தகவல்களை மத்திய அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் இவை கூகுள் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் வாய்ப்புகள் இருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 செயலிகளை கூகுள் நீக்கி இருக்கிறது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான செயலிகளை ஆய்வு செய்து, தவறான செயல்களில் ஈடுபட்ட செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது. 

    மேலும் இதே சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
    ஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய ஆய்வில், அது இதையும் செய்யும் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.


    அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினய் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவைரஸ் அறிகுறிகளை ஆப்பிள் வாட்ச் தற்போதைய வழிமுறைகளை விட வேகமாக கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவரின் இதய துடிப்பு வேறுபாடு விவரங்களை கொண்டு கொரோனாவைரஸ் அறிகுறி ஏற்படுமா என்பதை கண்டறிய முடிந்தது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவைரஸ் காலக்கட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் முன் கண்டறியும் வழிமுறை பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

     ஆப்பிள் வாட்ச்

    ஆய்வில் மவுண்ட் சினய் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தனர். ஆய்வின் போது தினமும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதற்கென உருவாக்கப்பட்ட செயலி கொண்டு பதில் அளித்து வந்தனர். 

    இந்த ஆய்வு 2020 ஏப்ரல் மாதம் துவங்கி 2020 செப்டம்பர் வரை நடைபெற்றது. இவைதவிர, ஆய்வில் கலந்து கொண்டவர்களின் ஆரோக்கிய விவரங்கள் ஆப்பிள் வாட்ச் கொண்டு சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி பயனரின் நரம்பியல் முறைகளை கணக்கிட்டதில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் மாடல்களுக்கான டீசரை புதுவித முறையில் வெளியிட்டு உள்ளது.


    ரியல்மி நிறுவனம் நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசருடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான ரீடெயில் பாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் ரியல்மி கேள்வி எழுப்பி உள்ளது.

    மேலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய ஆறு வெவ்வேறு வடிவமைப்பு கொண்ட ரீடெயில் பாக்ஸ் படங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது. ஆறு வடிவமைப்புகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒன்றை தேர்வு செய்ய முடியும். இதற்கு வாக்களிக்க கூகுள் படிவம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி நார்சோ 30

    புதிய ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்புடன் தற்சமயம் சுமார் 30 லட்சம் நார்சோ பயனர்கள் இந்தியாவில் இருப்பதாக ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி நார்சோ 30 அந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த நார்சோ 20 சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    ரீடெயில் பாக்ஸ் மற்றும் பெயர் தவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மே மாதத்தில் ரியல்மி நார்சோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    பின் செப்டம்பரில் நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ மற்றும் நார்சோ 20ஏ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் ரியல்மி நார்சோ 30 சீரிசில் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடலின் உற்பத்தி போதுமான வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட இருப்தாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மினி மாடல்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மினி ஐபோன் மாடல் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஐபோன் 12 சீரிசில் ஐபோன் 12 மினி தவிர மற்ற மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது. விற்பனையில் ஐபோன் 12 மினி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என ஆய்வு நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     ஐபோன் 12 மினி

    இதுகுறித்து ஜெபி மோர்கன் வினியோக பிரிவு ஆய்வளரான வில்லியம் யாங் ஐபோன் 12 மினி உற்பத்தி 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் நிறுத்தப்படலாம் என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், இந்த மாடல் விற்பனை சில காலம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக ஐபோன் 12 மினி உற்பத்தி சுமார் ஒரு கோடி யூனிட்கள் வரை நிறுத்தப்படலாம் என தெரிகிறது. இதே போன்று ஐபோன் 12 உற்பத்தியும் குறைந்து இருப்பதாகவும், ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 11 உற்பத்தி கணிசமாக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வாங்கலாம்.
    அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் இணையதள பக்கத்துக்கு சென்று வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் மூலம் அன்புக்குரியவர்களுக்கு என்ன பிடிக்குமோ? அந்த பரிசு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்கி, அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற தளத்தை அமேசான் ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த ஸ்டோரில் புதிய மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள், சாக்லேட்டுகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், சமையல் உபகரணங்கள், ஆடை அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்க முடியும்.

    மேலும், 18 முதல் 24 வயதுடைய வாடிக்கையாளர்கள் தங்கள் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். பிரைமுக்கு ‘சைன் அப்’ செய்து தங்கள் வயதை சரிபார்த்து உடனடியாக 50 சதவீதம் கேஷ்பேக் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம்.

    கோப்புப்படம்

    வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் பாம்பே சேவிங் கம்பெனியில் இருந்து ஆண் மற்றும் பெண்களுக்கான அற்புதமான பரிசுகளின் வகைகள் 35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதேபோல், காட்பரி டைரி மில்கின் பிரீமியம் சாக்லேட் ரூ.617-க்கும், 15 வகையான புதிய ரோஜாக்களுடன் மலர் பூங்கொத்து ரூ.588-க்கும், அன்புக்குரியவர்களை கவரும் விதமாக சாப்ட் டெடி பியர் ரூ.399-க்கும், சாம்சங் கேலக்சி எம் 02 எஸ். மாடல் செல்போன் ரூ.9 ஆயிரத்து 999-க்கும் என ஏராளமான பரிசு வகைகள் கிடைக்கிறது.

    மேலும், கடிகாரம், ஆபரணங்கள், கைப்பைகள், மணிபர்சுகள், செல்போன்கள், ஸ்பீக்கர்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள், அழகு சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஸ்டோரில் வாங்க முடியும். காதலர் தினத்தில் அன்புக்குரியவர்களுடன் பரிசு பொருட்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அமேசான் ஏற்படுத்தி தந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் அமேசான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×