என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சாம்சங் நிறுவனம் தனது பிளாக்ஷிப் மற்றும் மிட் ரேன்ஜ் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக அறிவித்தது.

     
    சாம்சங் நிறுவனம் 2017 ஆண்டு தனது கேலக்ஸி எஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. முற்றிலும் புது டிசைன், மெல்லிய பெசல்கள், உயர் ரக அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்8 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. சந்தையில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், சாம்சங் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான மென்பொருள் அப்டேட்டை நிறுத்தி இருக்கிறது.

     கேலக்ஸி எஸ்8

    சாம்சங் தனது பிளாக்ஷிப் மற்றும் மிட்-ரேன்ஜ் மாடல்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே மென்பொருள் அப்டேட் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மூன்று ஒஎஸ் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக சாம்சங் அறிவித்தது. 

    எனினும், கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கு இரண்டு ஒஎஸ் அப்டேட் மட்டுமே கிடைத்தது. அறிமுகமாகும் போதே கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மாடல்கள் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருந்தது. இது 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, வளைந்த எட்ஜ்களை கொண்டிருந்தது.
    மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிவாரண நிதி வழங்க சாம்சங் முடிவு செய்துள்ளது.

    தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்தியா கொரோனா தொற்றை எதிர்கொள்ள 50 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்க சாம்ங் முடிவு செய்துள்ளது.

     சாம்சங்

    இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்த பின் இதுபற்றிய முடிவுகள் எட்டப்பட்டதாக சாம்சங் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. அறிவிக்கப்பட்ட தொகையில் 30 லட்சம் டாலர்கள் மத்திய அரசு, உத்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.

    மீதமுள்ள 20 லட்சம் டாலர்களை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகளாக வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது.  இத்துடன் சாம்சங் நிறுவனம் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளது.
    பப்ஜி மொபைல் இந்தியா வேறு பெயரில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    பப்ஜி மொபைல் இந்தியா கேம் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் அதிகாரப்பூர்வ பக்கம், யூடியூப் சேனல் மற்றும் இந்தியா வலைதளம் உள்ளிட்டவைகளில் இந்த பெயர் இடம்பெற்று இருக்கிறது. 

     பேட்டில்கிரவுண்ட் மொபைல்

    இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்டது முதல் இந்த கேம் மீண்டும் வெளியாகாதா என இதன் ப்ரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில், தற்போது இந்த கேம் ரி-லான்ச் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    அதிகாரப்பூர்வ பக்கம் தவிர பப்ஜி மொபைல் இந்திய பதிப்புக்கான டிரெயிலர் வீடியோவும் வெளியிடப்பட்டது. எனினும், வெளியான சில நிமிடங்களில் இந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது.
    ஆப்பிள் நிறுவனம் புது வயர்லெஸ் இயர்போன், ஆப்பிள் மியூசிக் சந்தா பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது. இதுபற்றி பல்வேறு விவரங்கள், ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ரென்டருடன் இதன் வெளியீட்டு விவரமும் இடம்பெற்று இருக்கிறது.

     ஏர்பாட்ஸ்

    புது ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள் மியூசிக் சந்தா முறையும் புதிதாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் ஹை பெடிலிட்டி ஆடியோ அனுபவத்தை வழங்கும் ஆப்பிள் மியூசிக் சந்தா முறையும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    இந்த சந்தாவுக்கான கட்டணம் 9.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 750 ஆக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சேவை சமீபத்தில் அறிமுகமான ஸ்பாடிபைக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. 

    ஜூன் மாதத்தில் ஆப்பிள் தனது சர்வதசே டெவலப்பர்கள் நிகழ்வை விர்ச்சுவல் முறையில் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கேம்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.


    சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாதாரர்களுக்கு சில வீடியோ கேம்களை ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில் மே 4 முதல் மே 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வழங்கப்பட இருக்கும் இலவச கேம்கள் எவை என்பதை சோனி அறிவித்துள்ளது.

     பிளேஸ்டேஷன் பிளஸ்

    அந்த வகையில் Battlefield V, Stranded Deep மற்றும் Wreckfest போன்ற கேம்கள் மே மாதத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றில் Battlefield V மற்றும் Stranded Deep ஆகிய கேம்கள் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்5 கேம் கன்சோல்களுக்கு வழங்கப்படுகிறது.

    மற்றொரு கேமான Wreckfest பிஎஸ்5 கன்சோலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாவை மாதம் ரூ. 499, மூன்று மாதங்களுக்கு ரூ. 1,199 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ. 2,999 கட்டணத்தில் வழங்கி வருகிறது.
    ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் புதிய எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது.


    ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சியோமி, விவோ, ஐகூ போன்ற பிராண்டுகள் இந்த பிரிவில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

     ரியல்மி ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை காரணம் காட்டி ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஒத்திவைக்க ரியல்மி முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ரியல்மி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. இதோடு மே 4 ஆம் தேத நடைபெற இருந்த ரியல்மி ஆண்டுவிழா நிகழ்வும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    கொரோனாவைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக இருக்கிறது. இந்த சூழலில் குடும்பமாக இணைந்து மக்களுக்கு உதவ வேண்டும் என ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி வெளியீடு பற்றி ரியல்மி வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.

    இந்தியாவில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி முகாம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

    தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு அவசியமான ஒன்றாகும். முன்பதிவு செய்ய அரசு அங்கீகரித்த அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பட்டியலில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில், 18 முதல் 44 வயதுடையவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. முன்பதிவு CoWIN, ஆரோக்கிய சேது மற்றும் UMANG செயலிகளில் நடைபெறுகிறது. முன்பதிவை அடுத்து தகுதி பெற்றவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. 

    கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?

    இந்தியாவில் 18 முதல் 44 வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய மொபைல் நம்பர் அவசியம் ஆகும். மேலும் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், பென்சன் பாஸ்புக், என்பிஆர் ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும்.

     வலைதள ஸ்கிரீன்ஷாட்

    கொரோனா தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் முன்பதிவு செய்வது எப்படி?

    - முதலில் CoWIN வலைதளம் சென்று Register/ Sign in Yourself ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
    - பின் மொபைல் நம்பரை பதிவிட்டு Get OTP பட்டனை க்ளிக் செய்யவும். மொபைல் எண்ணிற்கு OTP வரும்
    - மொபைலுக்கு வந்த OTP-யை பதிவிட்டு Verify ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
    - பெயர், பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவிட்டு Register பட்டனை க்ளிக் செய்யவும்
    - அடுத்து கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்பவரின் பெயருக்கு அடுத்து காணப்படும் Schedule ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
    - இனி உங்களின் அஞ்சல் குறியீட்டை பதிவிட்டு Search ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அஞ்சல் குறியீட்டு பகுதியில் செயல்படும் தடுப்பூசி மையங்கள் பட்டியல் காண்பிக்கப்படும்
    - ஒவ்வொருத்தரின் மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப தடுப்பூசி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்
    - தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மையம், தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை வழங்கி Confirm பட்டனை க்ளிக் செய்யவும்

    ஒருமுறை முன்பதிவு செய்யும் போது அதிகபட்சம் நான்கு குடும்ப உறுப்பினர்களை சேர்க்க முடியும். எனினும், அனைவரின் வயதும் 18 முதல் 44 ஆக இருப்பது அவசியம் ஆகும். 

     வலைதள ஸ்கிரீன்ஷாட்

    ஆரோக்கிய சேது செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?

    - ஆரோக்கிய சேது செயலியை திறக்கவும்
    - செயலியின் ஹோம் ஸ்கிரீனில் CoWIN டேபை க்ளிக் செய்யவும்
    - அடுத்து Vaccination Registration ஆப்ஷனை க்ளிக் செய்து, மொபைல் நம்பரை பதிவிட்டு OTP பெறவும்
    - இனி OTP-யை பதிவிட்டு Verify ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
    - முந்தைய ஆப்ஷனை தொடர்ந்து முன்பதிவு செய்வதற்கான வலைப்பக்கம் திறக்கும்
    - இனி CoWIN தளத்தில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றி முன்பதிவை மேற்கொள்ளலாம்

    இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஒன்று ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் மற்றொன்று ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசென்கா உருவாக்கிய கோவிஷீல்டு ஆகும். 
    சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் 5 மற்றும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.


    சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் 14.9 சதவீதம் வருடாந்திர லாபம் ஈட்டியுள்ளது. மார்ச் 31, 2021 வரையிலான காலாண்டில் மட்டும் சோனி 26.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    இந்த நிறுவனத்தின் சமீபத்திய பிளேஸ்டேஷன் 5 உலகம் முழுக்க சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் சுமார் 45 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 33 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

     சோனி பிளேஸ்டேஷன் 5

    ஒட்டுமொத்த வியாபாரத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் சேவைகள் பிரிவில் மட்டும் சோனி கணிசமான லாபம் ஈட்டியுள்ளது. இதன் மின்னணு பொருட்கள் பிரிவு 3 சதவீத சரிவடைந்துள்ளது. டிஜிட்டல் கேமரா, ஒளிபரப்பு, தொழில்முறை ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்கள் விற்பனையும் சரிவடைந்து இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு பணிகளுக்கு உதவுவதாக அறிவித்து இருக்கிறார்.


    ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவைரஸ் பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளில் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

    `இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ள அனைவருடன் ஆப்பிள் துணை நிற்கிறது. களத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான உதவிகளுக்கு ஆப்பிள் நன்கொடை வழங்கும்,' என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

     டிம் குக்

    கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுக்க மிகத்தீவிரம் அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தனர்.
    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உற்பத்தி செய்யும் என்றும் இது முதன்முதலில் சியோமி ஸ்மார்ட்போனில் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை 108 எம்பி கேமராவுடன் சியோமி அறிமுகம் செய்து இருக்கிறது. சமீபத்தில் அறிமுகமான எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலிலும் இந்த சென்சார் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     சியோமி ஸ்மார்ட்போன்

    புதிய 200 எம்பி கேமரா சென்சார் சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 108 எம்பி கேமரா சென்சார்கள் தற்போது பிரீமியம் மட்டுமின்றி பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. 

    சாம்சங்கின் 200 எம்பி சென்சார் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது 0.34 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கும் என்றும் இது 1/1.37 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகபட்சம் 16K வீடியோ ரெக்கார்டிங், 16-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    ஐபோன் 13 மினி மாடல் முந்தைய மாடலை விட ஓரளவு வித்தியாச தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் 2021 ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி 4கே, ஐமேக் மற்றும் ஏர்டேக்ஸ் உள்ளிட்ட சாதனங்களை ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் அறிமுகம் செய்தது. தற்போது ஆப்பிள் அடுத்தக்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

    செப்டம்பரில் நடைபெற இருக்கும் நிகழ்வில் ஐபோன் 13 மினி மாடல்களின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி மினி மாடல் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 மினி படங்கள் சீனாவின் வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது. 

     ஐபோன் 12

    தற்போதைய தகவல்களின்படி ஐபோன் 13 மினி சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் 13 மினி முந்தைய மாடலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. ஐபோன் 13 மினி புளூ நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் மேலும் சில நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 13 மினி மாடலுடன் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நாட்ச், ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் அறிமுகம் செய்து பின் சாம்சங், சியோமி நிறுவனங்கள் வழியில் நோக்கியாவும் அதேபோன்று செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம்  செய்யப்பட்டு, அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக ஆப்பிள், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்குதை நிறுத்தின. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்து வந்தன. 

     நோக்கியா எக்ஸ்20

    நோக்கியா எக்ஸ்20 மாடலுக்கான வலைப்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் வால் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் பெட்டி 100 சதவீதம் உரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்-பாக்சில் வழங்கப்படும் சாதனங்கள் பட்டியலில் வால் சார்ஜர் இடம்பெறவில்லை. ஹெச்எம்டி குளோபல் இந்த ஸ்மார்ட்போனை ஏப்ரல் 8 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. 
    ×