search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசுஸ் சென்போன் 8
    X
    அசுஸ் சென்போன் 8

    புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை மாற்றியமைத்த அசுஸ்

    அசுஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


    அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி சர்வதேச அறிமுக நிகழ்வின் போதே புது ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய அசுஸ் திட்டமிட்டு இருந்தது.

     அசுஸ் சென்போன் 8

    எனினும், சென்போன் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டை மாற்றுவதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வினியோகம் செய்ய அரசாங்கங்கள் அனுமதி அளித்துள்ளன. முன்னதாக ரியல்மி நிறுவனமும் மே 4 ஆம் தேதி புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
    Next Story
    ×