என் மலர்
தொழில்நுட்பம்
அசுஸ் நிறுவனத்தின் இரு புதிய சென்போன் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
அசுஸ் நிறுவனம் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் முறையே 5.9 இன்ச் 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே, 6.67 இன்ச் FHD பிளஸ் 90Hz சாம்சங் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5ஜி SA/NSA, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த சென் யுஐ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்போன் 8 ப்ளிப் மாடலில் ப்ளிப் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சென்போன் 8 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ளிப் மாடல்களில் முறையே 5000எம்ஏஹெச் மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 30 வாட் குவிக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
சென்போன் 8 மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் ஹாரிசான் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,095 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்போன் 8 ப்ளிப் மாடல் கேலக்டிக் பிளாக் மற்றும் கிளேசியல் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 ஆகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த மோசடி நோக்கம் கொண்ட பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான தளம் என அவ்வப்போது தெரிவித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த சுமார் 150 கோடி டாலர்கள் மதிப்பிலான மோசடி பண பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஆப்பிள் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

இவ்வாறு செய்ததில் ஆப்பிள் வாடிக்கையாளர்களின் பணம், தகவல்கள் மற்றும் நேரம் காப்பாற்றப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான புது செயலிகள் சரியான தகவல்களை வழங்காததால் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேலும் பத்து லட்சத்திற்கும் அதிக அப்டேட்கள் நிராகரிக்கவோ அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. செயலிகளை ஆய்வு செய்யும் குழு சுமார் 48 ஆயிரம் செயலிகளில் தவறான அம்சங்களை கொண்டிருந்ததால், நீக்கப்பட்டுள்ளன. இத்துடன் பயனரின் பிரைவசி விதிகளை மீறியதாக 2.15 லட்சம் செயலிகள் நீக்கப்பட்டன.
சோனி நிறுவனம் தனது பிஎஸ்5 கன்சோல்களுக்கான முன்பதிவு மீண்டும் நடைபெற இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் பிஎஸ்5 கன்சோல்கள் மீண்டும் விற்பனைக்கு வருவது சற்றே சவாலான விஷயம் தான் என சோனி நிறுவன அதிகாரி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பிஎஸ்5 முன்பதிவு மீண்டும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சோனி தனது பிஎஸ்5 கன்சோல்களுக்கான முன்பதிவை மே 17 ஆம் தேதி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறையும் மிக குறைந்த யூனிட்களே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த விற்பனை ஊரடங்கு அமலில் இல்லாத பகுதிகளில் மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் மாடலை சோனி அறிமுகம் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் மாடலும் மே 17 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விற்பனை சோனியின் சொந்த வலைதளத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர், பிரத்யேக வடிவமைப்பு கொண்ட புது போக்கோ ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்கோ நிறுவனம் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
போக்கோ குளோபல் நிறுவன தலைவர் சியாபோ கியூ, விளம்பர பிரிவு தலைவர் அங்குஸ் என் ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் போக்கோவின் 5ஜி ஸ்மார்ட்போன் ரி-பிராண்டு செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது.

போக்கோ எம்3 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662-ஐ விட வேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ எம்3 ப்ரோ மாடலில் பிரத்யேக வடிவமைப்பு, அதிக ரேம், அதிவேக ஸ்டோரேஜ் மாட்யூல் மற்றும் மூன்று நிறங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் விலை போக்கோ எக்ஸ்3 என்எப்சி மாடலை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கூடுதலாக 5ஜி பேண்ட் வழங்குவது பற்றி அந்நிறுவன ஊழியர் பதில் அளித்துள்ளார்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போது இந்த மாடல்களில் 5ஜி SA/NSA பேண்ட்கள், N41 மற்றும் N78 வசதி இருப்பதாக ஒன்பிளஸ் அறிவித்தது.

அதன்பின் வெளியான தகவல்களில் ஒடிஏ அப்டேட் மூலம் இரு மாடல்களுக்கும் கூடுதலாக 5ஜி பேண்ட்களின் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த தகவல்களில் உண்மையில்லை என ஒன்பிளஸ் ஊழியர் தெரிவித்து இருக்கிறார்.
எதிர்காலத்தில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களுக்கு கூடுதலாக 5ஜி பேண்ட்களுக்கான வசதி அப்டேட் மூலம் வழங்கப்படாது என அவர் தெரிவித்து இருக்கிறார்.
நத்திங் நிறுவனத்தின் முதல் சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கார்ல் பெய் துவங்கி இருக்கும் நத்திங் நிறுவனம் தனது முதல் சாதனத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இயர் 1 எனும் பெயரில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை நத்திங் தனது முதல் சாதனமாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் வடிவமைப்பு விவரங்கள் இதுவரை ரகசியமான ஒன்றாகவே இருக்கிறது.

நீண்ட பயணத்தின் முதல் படியாக இயர் 1 அறிமுகமாகிறது என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். தலைசிறந்த வடிவமைப்பு, நம்பகத்தன்மையை உருவாக்கும் பல்வேறு சாதனங்கள் மற்றும் சேவைகளின் துவக்கம் தான் இது என அவர் மேலும் தெரிவித்தார்.
இயர்போன்கள் சந்தையில் கிடைக்கும் மாபெரும் வளர்ச்சி கொண்டு நிறுவனம் பல்வேறு புது சாதனங்கள் பிரிவில் களமிறங்க முடியும் என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார்.
அசுஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி சர்வதேச அறிமுக நிகழ்வின் போதே புது ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய அசுஸ் திட்டமிட்டு இருந்தது.

எனினும், சென்போன் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டை மாற்றுவதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வினியோகம் செய்ய அரசாங்கங்கள் அனுமதி அளித்துள்ளன. முன்னதாக ரியல்மி நிறுவனமும் மே 4 ஆம் தேதி புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்2 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய லாவா இசட்2 மேக்ஸ் மாடலில் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

லாவா இசட்2 மேக்ஸ் அம்சங்கள்
- 7.0 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8GHz குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர்
- 2 ஜிபி LPDDR3 ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.85
- 2 எம்பி டெப்த் சென்சார், LED பிளாஷ்
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
லாவா இசட்2 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்டிரோக்டு புளூ மற்றும் ஸ்டிரோக்டு சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7799 ஆகும். இது முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30ஏ மற்றும் நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது நார்சோ 30 ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.
புதிய நார்சோ 30 ஸ்மார்ட்போன் மே 18 ஆம் தேதி மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி95 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் மற்றும் எப்சிசி போன்ற தளங்களில் இடம்பெற்று இருந்தது.
அதன்படி RMX2156 மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், பன்ச் ஹோல் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

ரியல்மி நார்சோ 30 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
- 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் பாஸ்ட் சார்ஜிங்
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதனை அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
நாட்டில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அமேசான், கூகுள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் துவங்கி, அவற்றை இலவசமாக இந்தியா கொண்டு வருவது என பலவிதங்களில் உதவிகளை செய்து வருகின்றன.
வழக்கமாக அமேசான் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் தனது வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகை, தள்ளுபடி, வங்கி சார்ந்த கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படும்.
மத்திய அரசின் கொரோனாவைரஸ் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்போருக்கு பிரத்யேக செக்யூரிட்டி கோட் அனுப்பப்படுகிறது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முறையை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள இந்த முறை பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில், CoWIN தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு நான்கு இலக்க பாதுகாப்பு குறியீடு அனுப்பப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தீயவர்கள் சதி செய்து பணம் பறிக்கும் முயற்சியை தடுக்க முடியும். தடுப்பூசி மையங்களில் இந்த நான்கு இலக்க குறியீட்டை தெரிவித்ததும், தடுப்பூசி சான்று உருவாக்கப்படும்.

குறியீட்டு முறையை கொண்டு தடுப்பூசி சான்று உருவாக்குவதில் ஏற்படும் தவறுகளை குறைக்க முடியும். தனிப்பட்ட முறையில் தடுப்பூசி திட்டம் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்வோரிடம் இருந்து மக்களை காப்பாற்றவும் புதிய குறியீட்டு முறை பயன்தரும்.
பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்யும் போது, அவர்களுக்கான தடுப்பூசி மையம் உறுதி செய்யப்பட்டதும், நான்கு இலக்க குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தினத்தன்று இந்த குறியீட்டை தடுப்பூசி மையத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
பின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதும், CoWIN தளம் சென்று தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் புது பிரைவசி பாலிசியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது.
புது பிரைவசி பாலிசி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை வாட்ஸ்அப் எதிர்கொண்டது. பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பயனர்கள் மே 15 ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வாட்ஸ்அப் காலக்கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், பிரைவசி பாலிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
மே 15 ஆம் தேதிக்கு பின்பும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யாதவர்கள் அக்கவுண்ட் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். எனினும், புது அப்டேட் செய்யக் கோரி பயனர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவோம் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

பெரும்பாலான பயனர்கள் புது மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். முன்பு புது மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அக்கவுண்ட்களை அழிப்பதாக கூறிய நிலையில், தற்போது வாட்ஸ்அப் தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என இதுவரை அறிவிக்கவில்லை.
புது அப்டேட் செய்வோரின் தகவல்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது என வாட்ஸ்அப் அதன் பயனர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதுதவிர புது அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரியில் இருந்து மே 15 ஆக அதிகப்படுத்தியது.






