என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஹெச்.டி.எப்.சி கார்டுகளை பயன்படுத்தி இந்த போன்களை வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ 5ஜி, ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் ரியல்மி 9 ப்ரோ 5ஜி போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்.சி.டி பேனல், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் அமைந்துள்ளது. மேலும் இந்த போனில் octa-core Qualcomm Snapdragon 695 SoC, Adreno 619 GPU பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த போன் ஆண்ட்ராய்டு 12, ரியல்மி யு.ஐ. 3.0 இயங்குதளத்தில் இயங்குகிறது.

    கேமராவை பொறுத்தவரை 3 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் f1.79 அபார்சர் லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் ஆகியவை அமைந்துள்ளன.

    செல்ஃபி மற்றும் வீடியோ சாட்டுகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா முன்பகுதியில் அமைந்துள்ளது.

    மேலும் இந்த போனில் 5.2 ப்ளுடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், பக்கவாட்டில் அமைந்துள்ள கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி போன்கள்

    ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி மாடலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, Super AMOLED டிஸ்பிளே, 20:9 aspect ratio, 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. டிஸ்பிளேவிற்கு 2.5டி கார்னிங் கொரிலா கிளாஸ் 5 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. டிஸ்பிளேயின் டச் சாம்பிளிங் ரேட் 180Hz -ஆக இருக்கிறது.

    இந்த போன் octa-core MediaTek Dimensity 920 SoC, Mali-G68 MC4 GPU-ல் இயங்குகிறது.

    இந்த போனில் 3 பிக்பக்க கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில்  f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சோனி IMX766 சென்சார், f/2.2 அபார்ச்சரில், 8 மெகாபிக்ஸல் சோனி IMX355 சென்சார் கொண்ட அல்ட்ரா-ஒயிட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் தரப்பட்டுள்ளன.

    இந்த போனின் பிரைமரி கேமரா சென்சாரில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் துல்லியமாக ஒளியை உள்வாங்கும் திறன் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள நாய்ஸ் ரெடக்‌ஷன் இன்ஜின் 3.0 புகைப்படங்களில் ஏற்படும் நாய்ஸ்களை குறைக்கூடியது.

    முன்பக்க கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல், f/2.4 அபார்ச்சர் லென்ஸ் கொண்ட சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த போனில் ஆக்ஸெலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் இதில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் மூலம் இதய துடிப்பை அளவிட முடியும். சாதாரணமாக நாம் இருக்கும்போது உள்ள இதய துடிப்பு, உடற்பயிற்சி, ஓய்வு, கவலை, முழு ஆற்றல், தூங்காமல் இருக்கும்போது நம் இதயதுடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் நாம் இதில் அறிய முடியும்.

    இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.26,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.28,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹெச்.டி.எப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் 5-வது தலைமுறை புதிய ஐபேட் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ எம்2, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, மேக் மினி மற்றும் ஐபோன் எஸ்.இ 3 ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    ஐபேட் ஏர் 5

    ஐபோன் எஸ்.இ 3-ல் ஐபோன் 13 சீரிஸில் இடம்பெற்றுள்ள 5nm A15 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோனில் 4.7 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே, 12 மெகா பிக்ஸல் கேமரா சென்சார் ஆகியவையும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.45,000 இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

    இதன்மூலம் இந்த புதிய ஐபோன், ஓன்பிளஸ் 9 ஆர்.டி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்.இ ஆகிய ஆண்ட்ராய்டு போன்களுக்கு கடும் போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி நிறுவனம் ரியல்மி ப்ரோ 5ஜி, ரியல்மி ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

    இந்த போன்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    இந்த போன்களில்  MediaTek Dimensity 920 SoC பிராசஸர், Arm Mali-G68 ஜிபியூ வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி 9 ப்ரோ+ போனில் 50 மெகாபிக்சல் Sony IMX766 பிரைமரி சென்சார் ஓ.ஐ.எஸ் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களால் நகரும் பொருட்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும். 

    மேலும் இந்த இரு போன்களும் சன்ரைஸ் ப்ளூ மற்றும் பெயரிடப்படாத கிரீன் ஆகிய வண்ணங்களில் வர இருப்பதாக கூறப்படுகிறது. ரியல்மி 9 ப்ரோ+ போன் இதய துடிப்பை அளவிடும் சென்சாருடன் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.


    ரியல்மி 9 ப்ரோ சீரிஸ்

    விலையை பொறுத்தவரை ரியல்மி 9 ப்ரோவின் விலை ரூ.18,999-ல் இருந்தும், ரியல்மி 9 ப்ரோ+ விலை ரூ.24,999-ல் இருந்தும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
    இந்தியாவில் ஜியோமி நிறுவனம் பெரும் மதிப்பை பெற்றுள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்றவாறு குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதன் மூலம் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

    இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில், 6.43" அங்குல முழு அளவு எச்டி+ AMOLED திரையுடன், 90Hz ரெப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 180Hz ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பிளிங், 409 ppi திரை அடர்த்தி, 2400*1080 பிக்சல்களை கொண்டுள்ளது. 

    இதில் வழங்கப்பட்டுள்ள 1000nits பீக் பிரைட்னஸ் மூலம் வீடியோக்களை துல்லியமாக காணமுடியும். இந்த விலை மதிப்பில் சிறந்த டிஸ்ப்ளே தரும் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும்.

    ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டாகோர் சிப்செட் உதவியுடன் இயங்குகிறது. இதன்மூலம் அதிவேகமான செயல்பாடு, பல செயலிகளை பயன்படுத்தும்போது குறைந்த மின்செலவு ஆகியவற்றை உறுதி செய்கிறது. 

    இதில் கிராபிக்ஸ் எஞ்சினாக அட்ரினோ 610 செயல்படுகிறது. மேலும் இதில் 4ஜிபி, 6ஜிபி LPDDR4X ரேம் 3 வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.  64ஜிபி, 128ஜிபி என ஸ்டோரேஜ் வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. UFS2.2 மெமெரியுடன் 1TB வரை எஸ்டி கார்டு பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான புதிய MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

    ரெட்மி நோட் 11

    கேமராவை பொறுத்தவரை இந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. f/1.8 அப்பெர்ச்சரில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை இதில் உள்ளன. மேலும் செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 13 மெகாபிக்சல் கேமரா அமோலெட் டிஸ்ப்ளேயின் பஞ்ச் ஹோலில் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்தபோனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் சி 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜர் தரப்பட்டுள்ளது.

    இரட்டை 4ஜி சிம்,  ஜிபிஎஸ், வைஃபை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ப்ளூடூத் 5.1 ஆகிய அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளன. 

    இந்த போன் ஸ்டார்டஸ்ட் வைட், ஹொரிசான் ப்ளூ, ஸ்பேஸ் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 

    இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.13,499ஆகவும், 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரியின் விலை ரூ.14,499 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியின் விலை ரூ.15,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இந்த போனின் குறைகள் என்று பார்த்தால், 5ஜி சேவை வழங்கப்படாதது தான். இந்தியாவில் இந்த நிதியாண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அனைவரும் 5ஜி சேவை தரும் ஸ்மார்ட்போன்களையே எதிர்பார்க்கின்றனர். மேல்கூறிய அம்சங்களில் 5ஜி அம்சம் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் அடங்கும்.
    பிளிப்கார்ட் நிறுவனம் புதிய 'செல்பேக்' (Sell back) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய  ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட் தளத்தில் நல்ல விலைக்கு விற்க முடியும். முக்கியமாக, பிளிப்கார்ட் தளத்தில் இருந்து வாங்காத போன்களைக் கூட செல்பேக் திட்டத்தின் கீழ் நல்ல விலைக்கு விற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் விற்கப்பட்ட பழைய போனின் மதிப்புக்கு நிகரான கேஷ் பேக் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் அடங்கும். 

    இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன்களை விற்பதற்கு புதிய ஆப்ஷன் பிளிப்கார்ட் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஸ்போனை விற்க விரும்பும் வாடிக்கையாளரிடம் 3 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பின் பிளிப்கார்ட் பணியாளர்கள் 48 மணி நேரத்தில் நேரில் வந்து போனை பெற்றுக்கொள்வர். 

    பின் வாடிக்கையாளரின் போன் பரிசோதனை செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதன்பிறகு மின்னனு கூப்பனின் கேஷ்பேக் தொகை வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.

    பிளிப்கார்ட் செல்பேக் திட்டம்

    சமீபத்தில் பழைய மின்னணு பொருட்களை வாங்கி விற்கும் யாந்த்ரா தளத்தை பிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியது. இதை தொடர்ந்து இந்த செல்பேக் திட்டத்தை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

    பழைய மொபைல்களுக்கு வாடிக்கையாளர் எதிர்பார்ப்பதை விட நல்ல விலை கிடைக்கும் என்றும், இதில் கிடைக்கும் கேஷ் கூப்பனைக் கொண்டு பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஐ.டி.சி வெளியிட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12.5 கோடி பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இருப்பதாகவும், அவற்றில் 2 கோடி மொபைல்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

    இதனால் நாட்டில் அதிகரிக்கும் மின்னணுக் கழிவுகளை குறைப்பதற்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் செல்பேக் திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. 

    இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதுதவிர ரெட்மி நோட் 11 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். 

    போக்கோ எம்4 ப்ரோ 5ஜி  ஆண்ட்ராய்டு 11-னை அடிப்படையாக கொண்ட MIUI 12.5-ல் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ டாட் டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளேயில் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், DCI-P3 வைட் கலர் காமுட் அடங்கியுள்ளது.

    இத்துடன் இந்த போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 எஸ்.ஓ.சி மற்றும் 8 ஜி.பி LPDDR4X ரேம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    கேமராவை பொறுத்தவரை f/1.8 லென்சுடன் 50 எம்.பி பிரைமரி சென்சார் கொண்ட டூயல் கேமரா, 8 எம்.பி அல்ட்ரா ஒய்ட் கேமரா, f/2.45 லென்ஸ் கொண்ட 16 எம்.பி செல்ஃபி கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.

    போக்கோ எம்4 ப்ரோ

    போக்கோ எம்4 ப்ரோ 5ஜியில் 128 ஜிபி யூ.எப்.எஸ் 2.2 ஸ்டோரேஜுடன் 1 டி.பி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் தரப்பட்டுள்ளது. இந்த போனில் 5ஜி, 4ஜி LTE, Wi-fi, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐ.ஆர், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், பக்கவாட்டில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் ஆகியவையும் அடங்கியுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் வசதியையும், 5000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

    விலையை பொறுத்தவரை 4 ஜி.பி+64 ஜி.பி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999-ஆகவும், 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-ஆகவும், 8 ஜி.பி+128 ஜி.பி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ, பவர் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்த போன் பிப்ரவரி 22-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அசுஸ் செல்போன் நிறுவனம் இரண்டு மாடல்களை வருகிற 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    இந்தியாவில் கடந்த சில நாட்களாக செல்போன் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இரண்டு ரோக் மாடல் போன்களை வருகிற 15-ந்தேதி ரிலீஸ் செய்கிறது.

    அசுஸ் ரோக் போன் 5S, 5S புரோ ஆகிய மாடல்களை வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. இரண்டு போன்களும் 6.78 இன்ஞ் நீளம் கொண்ட, ஃபுல் ஹெச்.டி.பிளஸ், அமோல்டு ஹெச்.டி.ஆர்., 144 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே (சாம்சங்ஸ் E4 போன்று) கொண்டதாகும்.

    18 ஜி.பி. வரை ரேம் கொண்ட நிலையில், 512 ஜி.பி. வரை ஸ்டோரேஜ் வசதி கொண்டது. பிராசஸ்சர் Snapdragon 888 Plus SoC கொண்டது.

    இதில் 5S புரோ ரோக் விசன் கலருடன், பிமோல்டு டிஸ்பிளே கொண்டது. 16 ஜி.பி. ரேம் கொண்ட 256 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டதாகவும், 18 ஜி.பி. ரேம் கொண்ட ரேம், 512 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஓ.எஸ். ரோக் யூ.ஐ. உடன்  ஆண்ட்ராய்டு 11 கொண்டது. இரண்டு சிம் (நானோ) வசதி கொண்டது. 64 எம்.பி. ரியர் கேமரா, 13 எம்.பி. அல்டாரா வைடு கேமரா, அதுமட்டுல்லாமல் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் கேமரா கொண்டுள்ளது. 64 எம்.பி. ரியல் கேமராவில் 8K வீடியோ எடுக்கலாம்.

     6000 mAh/5800 mAh வசதியுடன், 65வாட்ஸ் ஹைபர்சார்ஜ் வேக சார்ஜ் வசதி கொண்டது. முன்பக்கம் 24 எம்.பி. கேமரா வசதி கொண்டது.
    அதிக வரிவிதிப்பு காரணமாக 2021-2022-ம் நிதியாண்டில் 3-ம் காலாண்டில் ஏர்டெல் நிகர லாபத்தில் 2.8 சதவீதம் சரிந்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் தொலைபேசி துறையில் 5ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குத்துறை ஆணையம் 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி செல்போன் கட்டணம் மேலும் உயருகிறது.

    இது குறித்து ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியதாவது:-

    செல்போன் துறையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஆண்டு செல்போன் கட்டணம் மேலும் உயரும். 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

    ஒரு சந்தாதாரருக்கு தற்போது ரூ.163 என்று இருக்கும் கட்டணம் ரூ.200 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

    தற்போது நாட்டில் 3 முதல் 4 சதவீத ஸ்மார்ட்போன்கள் மட்டுமே 5ஜி தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது. இது வருகிற மார்ச் மாதத்திற்குள் 10 முதல் 12 சதவீதமாக உயரும். 2023-2024-ம் ஆண்டுகளில் பெரும்பாலானோர் 5ஜி சேவையை பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள்.

    அதிக வரிவிதிப்பு காரணமாக 2021-2022-ம் நிதியாண்டில் 3-ம் காலாண்டில் ஏர்டெல் நிகர லாபத்தில் 2.8 சதவீதம் சரிந்துள்ளது. டீசல் விலை அதிகரித்து வருவதாலும் திறன் மேம்பாடு காரணமாகவும் செலவுகள் அதிகரித்து வருகிறது.

    எரிசக்தி செலவினங்களை குறைத்தல், செல்போன் டவர் வாடகைகளை மறுபரிசீலனை செய்தல் மூலம் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ரெட்மியின் நோட் 11 செல்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த நிலையில், அதன் விலை 13,499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    ரெட்மி செல்போன் நிறுவனம் தற்போது ரெட்மி நோட் சீரிஸ் செல்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போனில் விலை 13,499 ரூபாயக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    6.43 இன்ஞ் டிஸ்பிளேயுடன், முழு ஹெச்டி பிளஸ் அமோலெட் (Full HD+ AMOLED screen) ஸ்கிரீன் கொண்டது.  இந்த பட்ஜெட் விலையில் 90Hz refresh rate, DCI-P3 color gamut வசதி உள்ளது.

    13 எம்.பி. செல்பி கேமரா வசதி கொண்டுள்ளது. 6 ஜி.பி. ரேம் உடன் 2 ஜி.பி. பூஸ்டர் ஆப்சனும் கொண்டுள்ளது. Snapdragon 680 SoC பிராசசர் கொண்டது.

    பின்பக்கம் 50 எம்.பி. மெயின் கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு, 2 எம்.பி. டெப்த் மற்றும் 2எம்.பி. மேக்ரோ என நான்கு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

    MIUI 13 உடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும்  5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்டுள்ளத. ஒரு மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும் வகையில் 33வாட் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 170 கிராம் எடைகொண்டது. வெளியில் செல்லும்போது எளிதாக எடுத்துச் செல்லலாம்.
    இந்தியாவில் மூன்று ஆப்பிள் ஐபோன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் விலை விவரம் வெளியாகியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்தும். அந்த வகையில் டெஸ்டிங்கிற்காக இந்தியாவுக்கு மூன்று போன்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    A2595, A2783, A2784 ஆகிய போன்களை டெஸ்டிங் நோக்கத்திற்கான அனுப்பியுள்ளது. தற்போது அதன் விலை வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த செல்போன்களுக்கு 300 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பண மதிப்பில் இன்றைய மதிப்பிற்கு 22,410 ரூபாயும். ஆனால், இதனுடன் இறக்குமதி வரி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

    இதனால் மேலும், 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதனுடன் ஜி.எஸ்.டி. வரி சேரும்போது 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்று போன்களுடன் இரண்டு புதிய ஐபேடு-களையும் இறக்குமதி செய்துள்ளது. A2588, A2589 ஆகிய இரண்டு ஐபேடுகளும் 500 டாலர் முதல் 700 டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    4.7 இன்ச் டிஸ்பிளே, டச் ஐடி சென்சார் கொண்ட SE வடிவமைப்பில் SE 3 இருப்பதாக வெளியாக வதந்திகள் அடிப்படையில் நம்பப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மாரட்போனினை இந்த மாதத்திலேயே இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் டிசைன் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். 

     மோட்டோரோலா ஸ்மாரட்போன்

    இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 மாடலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை  மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார், 60 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மாடலில்  5000எம்.ஏ.ஹெச்.  பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    ரியல்மி நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ரியல்மி ஈடுபட்டு வருகிறது. 

    புது ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு நடைபெறும் என அறிவித்துள்ள போதும், ஸ்மார்ட்போன்கள் பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. ரியல்மி 9 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    ரியல்மி 9  சீரிசில் முதற்கட்டமாக இரண்டு மாடல்கள் மட்டும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஆகும். இதுகுறித்து சந்தை வல்லுனர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் ரியல்மி மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

     ரியல்மி ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதுவரை வெளியான தகவல்களின் படி ரியல்மி 9 ப்ரோ மாடலில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி, புகைப்படங்களை எடுக்க- 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா என மூன்று லென்ஸ்களும், முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் 920 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ×