என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ரெட்மி நோட் 11 ப்ரோ
இந்தியாவில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் ப்ரோ+ 5ஜி போன்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
கடந்த வாரம் இந்த போன்கள் குறித்த டீசர் வெளியான நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ+ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசர் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது இந்த இருபோன்களும் மார்ச் 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த போன்களில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 108 மெகாபிக்ஸல் மெயின் கேமரா ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே கூறிய அம்சங்கள் ரெட்மி நோட் 11 ப்ரோ குளோபல் மாடலில் இடம்பெற்றிருந்தன. இதனால் அந்த போனில் உள்ள அம்சங்கள் சிறிய வேறுபாடுகளுடன் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி நோட் 11 ப்ரோ, நோட் 11 ப்ரோ+ 5ஜி-ல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






