என் மலர்tooltip icon

    கணினி

    பிஎஸ்என்எல் ரூ. 199 விலை போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகையை ரூ. 199 விலையில் அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் முன்னதாக இந்த சலுகையில் 300 நிமிடங்கள் ஆப்-நெட் அழைப்புகள் வழங்கப்பட்டு இருந்தது.

    புதிய மாற்றம் இந்த சலுகை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அழைப்புகளை வழங்குகிறது. இதில் பிஎஸ்என்எல் மட்டுமின்றி இதர நிறுவன எண்களுக்கும் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தவிர இந்த சலுகையில் 25 ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது.

    கோப்புப்படம்

    இத்துடன் அதிகபட்சம் 75 ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 199 புதிய பலன்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி அமலானது. இதுபற்றிய தகவல் பிஎஸ்என்எல் சென்னை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.

    பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை மாற்றம் சென்னை மட்டுமின்று நாடு முழுக்க அமலாகி இருக்கிறது. இந்த சலுகையில் மாதத்திற்கு 25 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.
    சோனி நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் டிசம்பர் 31, 2020 வரை காலாண்டிற்கான விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி சோனி நிறுவனம் 35,920 கோடி ஜப்பானிய யென்களை லாபமாக ஈட்டியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிஎஸ் 5 விற்பனை 45 லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது.

    இந்த ஆண்டிற்கான விற்பனை இலக்கு 76 லட்சம் யூனிட்கள் என்றும், இதனை எட்ட சோனி முயற்சித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. பிஎஸ் 5 யூனிட்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை அதிக யூனிட்களை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சோனி தெரிவித்து உள்ளது.

    டிசம்பர் இறுதி வரை மார்வெல் நிறுவனத்தின் ஸ்பைடர் மேன் - மைல்ஸ் மொரால்ஸ் கேம் சுமார் 41 லட்சம் யூனிட்கள் விற்பனையானகி இருக்கிறது. டிசம்பர் வரைலியான காலக்கட்டத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் பிரிவு விற்பனை 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது.  

    இதே காலக்கட்டத்தில் தான் சோனி தனது புதிய கேமிங் கன்சோல் பிஎஸ் 5 விற்பனையை துவங்கியது. இதன் நிகர லாபம் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 129 விலையில் புதிய சினிமா பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 129 விலையில் புதிதாக சினிமா பிளஸ் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சேவையில் சோனிலிவ் மற்றும் வூட் செலக்ட் போன்ற ஒடிடி தளங்களை இயக்குவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. 

    புதிய சேவைக்கான மாத கட்டணம் ரூ. 199 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக மாதம் ரூ. 129 விலையில் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் சேவையில் மொத்தம் 300-க்கும் அதிக டிவி சேனல்கள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் அதிக திரைப்படங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. 

     பிஎஸ்என்எல் சினிமா பிளஸ்

    சினிமா பிளஸ் சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம்  யப் டிவியுடன் இணைந்து உள்ளது. இந்த சேவையில் சோனிலிவ் ஸ்பெஷல், வூட் செலக்ட், யப் டிவி பிரீமியம் மற்றும் ஜீ5 பிரீமியம் போன்ற தளங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சேவை யப் டிவி ஸ்கோப் மூலம் வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் சேவையில் இணைய தரவுகளை கணினி, மொபைல் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களில் பார்த்து ரசிக்க முடியும். இத்துடன் ஒவ்வொரு பயனருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.
    பாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 18 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பாசில் நிறுவனம் இந்தியாவில் வியர் ஒஎஸ் கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பாசில் ஜென் 5இ எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.19 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் இன்டர்சேன்ஜ் செய்யக்கூடிய வாட்ச் பேண்ட்கள், குவிக் சார்ஜிங் வசதி, பல்வேறு ஆக்டிவிட்டி சென்சார்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஜென் 5இ மாடல் - 42எம்எம் மற்றும் 44எம்எம் என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது.

     பாசில் ஜென் 5இ

    இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100, 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. மேலும் 22எம்எம் இன்டர்சேன்ஜ் செய்யக்கூடிய ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாட்ச் 3ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    பாசில் ஜென் 5இ மாடல் பிளாக் சிலிகான், பிரவுன் லெதர், பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டூ-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ரோஸ் கோல்டு-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்/மெஷ் மற்றும் பிளஷ் சிலிகான் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 18,495 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டிற்கு வர இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    இந்திய சந்தையில் விரைவில் 5ஜி சேவை வழங்கப்பட இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவில்லை. மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசு 5ஜி ஸ்பெக்ட்ரமை விற்பனை செய்யப்போவது இல்லை. 

    எனினும், சில டெலிகாம் நிறுவனங்கள் தற்சமயம் உள்ள பேண்ட்களிலேயே 5ஜி சேவையை வழங்க முடியும் என தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 28 ஆம் தேதி ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தியது. 

    இந்திய சந்தையில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பம் விரைவில் வெளியாகும் என்ற போதும், பெரும்பாலானோர் இதனை பயன்படுத்த சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    கடந்த மாதம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2021 இரண்டாவது அரையாண்டில் இந்தியாவில் 5ஜி புரட்சி துவங்கும் என அறிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெறலாம் என்ற போதும், இதன் பயன்பாடு துவங்க சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆண்டில் தான் இந்தியாவில் உள்ள 6 சதவீதம் பேர் 5ஜி பயன்படுத்து துவங்குவர் என்றும் 2040 ஆண்டில் இது 93 சதவீதமாக உயரும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

    5ஜி வெளியீட்டிற்கு பாதுகாப்பு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதுதவிர இந்தியாவில் 5ஜி உள்கட்டமைப்புகளில் ஹூவாய் மற்றும் இசட்டிஇ போன்ற நிறுவனங்களின் பங்களிப்பும் 5ஜி தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
    இந்தியாவில் சில மொபைல் போன் பாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு நீக்கப்பட்டு இருக்கிறது.


    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொழில்நுட்பம் மற்றும் மின்சாதன கேட்ஜெட்கள் பிரிவில் பெரிய அறிவிப்பாக மொபைல் சார்ஜர் மற்றும் சில மொபைல் போன் பாகங்களுக்கான சுங்க வரி உயர்வு இருக்கிறது.

    மொபைல் போன்களுக்கு தேவைப்படும் சில பாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு தற்சமயம் சுங்க வரி 2.5 சதவீதமாக மாற்றப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

     நிர்மலா சீதாராமன்

    “ஸ்மார்ட்போன்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சார்ஜர் மற்றும் மொபைல் போன் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. தற்சமயம் உலகிற்கு நாம் மொபைல் மற்றும் சார்ஜர்களை ஏற்றுமதி செய்கிறோம்.” 

    “உள்நாட்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்து இருக்கிறது. தற்சமயம் மொபைல் மற்றும் சார்ஜர்களை ஏற்றுமதி செய்கிறோம். உள்நாட்டு மதிப்பு கூட்டல் காரணமாக சில பாகங்களுக்கான வரிவிலக்கை ரத்து செய்து 2.5 சதவீதம் வரி வசூலிக்கப்பட இருக்கிறது.”என அவர் தெரிவித்தார்.

    வரி மாற்றம் காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை தற்சமயம் இருப்பதை விட மேலும் அதிகமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சிக்னல் குறுந்தகவல் செயலியில் அதிக பயனர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
     

    சிக்னல் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் தொடர்ந்து புது அம்சங்களை வழங்கி வருகிறது. புதிய பிரைவசி பாலிசி விவகாரம் காரணமாக சிக்னல் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிக்னல் இவ்வாறு செய்கிறது.

    புதிய அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாட் வால்பேப்பர், அனிமேடெட் ஸ்டிக்கர், ப்ரோபைல் பகுதியில் அபவுட் எனும் உட்பிரிவு உள்ளிட்டவை சிக்னல் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றன.

     டெலிகிராம்

    முதற்கட்டமாக சிக்னல் பீட்டா பதிப்பில் 24 அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் பயனர்களுக்கு அழைப்பின் போது குறைந்த டேட்டா பயன்படுத்த கோரும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

    சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை ஐஒஎஸ் தளத்தில் இம்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் இதுவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படவில்லை.
    வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை வழங்கி வருகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வெப் அல்லது டெஸ்க்டாப் தளத்தை பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.

    வாட்ஸ்அப் பிரைமரி சாதனம் மற்றும் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்கும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் உரையாடல்களை துவங்கும் முன் கைரேகை அல்லது பேஸ் அன்லாக் போன்ற சோதனையை கொண்டு மற்றவர்கள் வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்குவதை தவிர்க்க உதவுகிறது.

     வாட்ஸ்அப்

    ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய பாதுகாப்பு அம்சத்தை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் More options ⇾ Link a Device ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின் வாட்ஸ்அப் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை இயக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிவிக்கும். 

    ஐபோன்களில் Link a Device ⇾ OK ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். பின் பயனர்கள் திரையில் தெரியும் கியூஆர் கோட் கொண்டு வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பயன்படுத்த துவங்கலாம்.
    இந்திய சந்தையில் மூன்றாம் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான மூன்றாவது காலாண்டில் மட்டும் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்று இருக்கிறது.

    ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ உள்நாட்டில் வாய்ஸ் கால் சேவையை இலவசமாக வழங்க துவங்கியது. விதிகளில் தளர்வு மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்வு உள்ளிட்டவை புது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    டெலிகாம் சந்தையில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. 2020 ஆண்டு மட்டும் ஜியோ நிறுவனத்தில் சுமார் 4 கோடி பேர் இணைந்துள்ளனர். 

    இது டெலிகாம் துறையில் இதுவரை இல்லாத அளவு அதிகம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவின் ARPU ரூ. 151 ஆக அதிகரித்து இருக்கிறது. ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.08 கோடியாக இருக்கிறது. ஜியோவின் டேட்டா பயன்பாடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 28.4 சதவீதம் அதிகம் ஆகும்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் எஸ்7 லைட் மூன்று வேரியண்ட்களில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்7 லைட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை SM-T730, SM-T735 மற்றும் SM-T736B / SM-T736N எனும் மாடல் நம்பர்களில் முறையே வைபை, எல்டிஇ மற்றும் 5ஜி வேரியண்ட் என கூறப்படுகிறது. 

    இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் மற்றொரு கேலக்ஸி டேப் எஸ்7 லைட் / டேப் எஸ்8இ வேரியண்ட்டை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இது பிளஸ் அல்லது எக்ஸ்எல் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் லைட் வேரியண்ட்டை விட பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய கேலக்ஸி டேப் மாடல் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றே தெரிகிறது. இதற்கிடையில் புதிய டேப் பற்றிய கூடுதல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய சலுகைகளை விண்க் பிரீமியம் சந்தாவுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 78 மற்றும் ரூ. 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து உள்ளது. இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவுடம் வழங்கப்படுகின்றது. 

    ரூ. 78 சலுகையுடன் ஒரு மாதத்திற்கான விண்க் பரீமியம் சந்தாவும் ரூ. 248 சலுகையில் ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்கள் விண்க் பிரீமியம் சந்தாவை ஏர்டெல் தேங்ஸ் செயலி அல்லது டிஜிட்டல் ஸ்டோரில் நேரடியாகவும் வாங்க முடியும்.

     கோப்புப்படம்

    டேட்டா ஆட்-ஆன் சலுகை என்பதால் ஏர்டெல் ரூ. 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறை பெறும் வரை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரூ. 248 சலுகையில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முந்தைய சலுகையை போன்றே இதிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
    வி நிறுவனத்தின் டேட்டா ரோல்ஓவர் சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது டேட்டா ரோல்ஓவர் சலுகையை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சலுகை கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டு ஜனவரி 17 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது.

    டேட்டா ரோல்ஓவர் சலுகை நீட்டிக்கப்பட்டு இருப்பதை வி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்டேட் செய்து இருக்கிறது. முன்பு வழங்கப்பட்ட சலுகைகளுக்கான டேட்டா ரோல்ஓவர் வசதி தற்சமயம் நீட்டிப்பட்டு இருக்கிறது. வி வலைதளத்தின் படி இந்த சலுகை அக்டோபர் 19, 2020 துவங்கி ஏப்ரல் 17, 2021 வரை வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    ரோல்ஓவர் வசதி வி ரூ. 249, ரூ. 299, ரூ. 399, ரூ. 449, ரூ. 595, ரூ. 599, ரூ. 699, ரூ. 795 மற்றும் ரூ. 2595 சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் அனைத்து சலுகைகளும் வி வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளில் இருமடங்கு டேட்டா, 5ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ஒரு வருடத்திற்கான ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது.  

    டேட்டா ரோல்ஓவர் வசதி வாரஇறுதி நாட்களில் பயன்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்களில் மாற்றம், திரும்ப பெறுவது போன்றவை டிராய் விதிமுறைகளுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளப்படலாம் என வி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ×