என் மலர்tooltip icon

    கணினி

    வி நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரவு நேரத்தில் இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரவு நேர அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இதனை நள்ளிரவு 12 மணி துவங்கி காலை 6 மணி வரை பயன்படுத்தலாம். இந்த சலுகை வி ரூ. 249 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுக்கு மட்டும் பொருந்தும்.

    மேலும் இரவு நேர அதிவேக டேட்டா சலுகை பிப்ரவரி 16 ஆம் தேதி அல்லது அதன் பின் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும். இணையதளம் மற்றும் ஒடிடி பயன்பாடு இரவு நேரங்களில் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக வி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஒடிடி தளங்கள், வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் வழங்கும் தரவுகளை டவுன்லோட் செய்தல், இதர இணையதள பிரவுசிங் மற்றும் டவுன்லோட் உள்ளிட்டவைகளை இரவு நேர அதிவேக டேட்டா கொண்டு மேற்கொள்ளலாம் என்றும் வி தெரிவித்து உள்ளது.

     வி

    வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வி நிறுவன சேவையை பயன்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை வி நெட்வொர்க் பயன்படுத்த செய்யும் நோக்கத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வார இறுதியில் டேட்டா ரோல் ஒவர் சலுகையை வி நிறுவனம் அறிவித்து இருந்தது.

    இளம் வயதினர் இரவு நேரங்களில் அதிக டேட்டா பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சலுகை அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என வி நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வி நிறுவனம் ரூ. 351 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இந்த சலுகையில் 100 ஜிபி டேட்டா எவ்வித கட்டுபாடு மற்றும் வேலிடிட்டிக்கான கால அளவின்றி வழங்கியது.
    சைபர்பண்க் 2077 மற்றும் தி விட்ச்சர் 3 கேம்களின் பயனர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனை செய்யப்பட்டன.


    சர்வதேச கேமிங் சந்தையில் அதிக பிரபலமான சைபர்பண்க் 2077 மற்றும் தி விட்ச்சர் 3 போன்ற கேம்களை உருவாக்கிய பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் டேட்டாக்கள் திருடப்பட்டு டார்க் வெப் எனும் இணையதளத்தில் ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    கேம் உருவாக்கிய நிறுவனத்தின் ரெட் என்ஜின், சைபர்பண்க் 2077, தி விட்ச்சர் 3 மற்றும் இதர கேம்களின் டேட்டாவை ஹேக்கர்கள் திருடி விற்று இருக்கின்றனர். முன்னதாக பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் பிரபல கேம்களின் சோர்ஸ் கோட் விவரங்கள் தங்களிடம் இருப்பதாக ஹேக்கர்கள் அனுப்பிய தகவலை அந்நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருந்தது.

    ஹேக்கர்களுக்கு பணம் கொடுக்கவோ, சமரசம் செய்யவோ முயற்சிக்க மாட்டோம் என பிராஜ்க்ட் ரெட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டார்க் வெப் தளத்தில் விவரங்களை ஹேக்கர்கள் ஏலம் நடத்தி விற்று இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார்.

    இதுகுறித்து வெளியான தகவல்களில், பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் டேட்டா, டார்க் வெப் தளத்தில் பத்து லட்சம் டாலர்கள் எனும் துவக்க விலையில் ஏலம் விடப்பட்டது. இறுதியில் 70 லட்சம் டாலர்களுக்கு ஏலம் முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    பேஸ்புக் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்வாட்ச் செல்லுலார் இணைப்பு வசதி கொண்டிருக்கும். அந்த வகையில் இது ஸ்மார்ட்போன் இல்லாமலும் இயங்கும். இத்துடன் புதிய வாட்ச் பேஸ்புக் மெசன்ஜர் மற்றும் பல்வேறு முன்னணி பிட்னஸ் தளங்களுடன் இணைந்து செயல்படும் வசதி கொண்டிருக்கலாம்.

     ஆப்பிள் வாட்ச்

    பேஸ்புக்கின் அணியக்கூடிய சாதனம் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய பேஸ்புக் ஹார்டுவேர் சாதனங்களை போன்றே இதுவும் கூகுள் தளத்தை கொண்டிருக்கும். எனினும், பேஸ்புக் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்களுக்கென சொந்தமாக ஒஎஸ் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    புதிய அணியக்கூடிய சாதனத்தின் விலையை 200 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய சாதனம் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் பிரீமியம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய டேப்லெட் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் ஆப்பிள் ஐபேட் ஏர் 2020 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக இந்த மாடல் லெனோவோ டேப் எம்10 ஹெச்டி ஜென் 2 மாடலுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை லெனோவோ டேப் பி11 ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், ஹெச்டிஆர் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆப்ஷனல் கீபோர்டு கவர் ஒன்றும் வழங்கப்படுகிறது.

     லெனோவோ டேப் பி11 ப்ரோ

    லெனோவோ டேப் பி11 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 11.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே
    - டால்பி விஷன், ஹெச்டிஆர் 
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
    - இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார் 
    - ஆப்ஷனல் கீபோர்டு கவர்
    - யுனிபாடி மெட்டல் டிசைன்

    இந்தியாவில் புதிய லெனோவோ டேப் பி11 ப்ரோ மாடல் விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்லேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.
    போட் நிறுவனத்தின் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    போட் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வயர்லெஸ் இயர்போன் மேம்பட்ட நெக்பேண்ட் ரக வயர்லெஸ் இயர்போன் ஆகும்.

    புதிய வயர்லெஸ் இயர்போன் ஐபிஎக்ஸ்7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, குவால்காம் ஆப்ட்-எக்ஸ் ப்ளூடூத் கோடெக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூதத் 5 கனெக்டிவிட்டி, ஹை-ரெசஸ் ஆடியோ டிரான்ஸ்மிஷன், குவால்காம் சிவிசி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     போட் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ்

    மேலும் புதிய இயர்போன்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட், பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இயர்போன்கள் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரிகள் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    இத்துடன் போட் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் இயர்போன்களில் 10 எம்எம் டைனமிக் டிரைவர்கள், எஸ்பிசி மற்றும் ஏஏசி ப்ளூடூத் கோடெக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவைதவிர கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் இயர்போன் ரூ. 1499 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது போட் ஆன்லைன் ஸ்டோர் மற்றும், அமேசான், ப்ளிப்கார்ட் என முன்னணி ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
    அசத்தல் வசதியுடன் உருவாக்கி வரும் புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய இயர்பட்ஸ் மாடலை ரியல்மி நிறுவனம் பாப் இசை கலைஞர்களான தி செயின்ஸ்மோக்கர்ஸ் உடன் இணைந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி இயர்பட்ஸ் மாடலுக்கு இலை கலைஞர்கள் இடம்பெற்று இருக்கும் விளம்பர படம் வெளியாகி உள்ளது. மேலும் இதில் உள்ள வாசகம்-“Noise off, Realme on” இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறது.

    இந்த தகவல்களை கொண்டு பார்க்கும் போது, புதிய இயர்பட்ஸ் ரியல்மி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 
    நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கலர்பிட் ப்ரோ 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த வாட்ச் நாய்ஸ்பிட் செயலியுடன் இணைந்து உடல்நலன் சார்ந்த விவரங்களை டிராக் செய்கிறது.

    புதிய கலர்பிட் ப்ரோ 3 மாடலில் 1.55 இன்ச் டச் ஹெச்டி ட்ரூவியூ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வழங்கப்படுகிறது. மேலும் இது ப்ளூடூத் 5.0 மற்றும் 5 ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 24x7 இதய துடிப்பு டிராக்கிங், எஸ்பிஒ2 மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், பிரீத் மோட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இது ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் பின் வெளியான இயங்குதளங்களை கொண்ட சாதனங்களுடன் இணைந்து செயல்படும். மேலும் இதில் 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் உடலில் எத்தனை கலோரிக்கள் எரிக்கப்பட்டன, எத்தனை தூரம் கடக்கப்பட்டது, ஸ்லீப் மாணிட்டர் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளது.

     நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3

    அழைப்புகள், டெக்ஸ்ட், ஆப், சமூக வலைதள நோட்டிபிகேஷன் உள்ளிட்டவைகளக்கு வைப்ரேஷன் அலெர்ட்களை வழங்குகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் 210 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இது பத்து நாட்களுக்கான பேக்கப் மற்றும் 30 நாட்களுக்கான ஸ்டான்ட்பை வழங்குகிறது.

    நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 மாடல் ஜெட் பிளாக், ஜெட் புளூ, ஸ்மோக் கிரே, ஸ்மோக் கிரீன், ரோஸ் பின்க் மற்றும் ரோஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது அமேசான் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரூ. 3,999 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    நோக்கியா பவர் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ்7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5 வசதிகளை கொண்டுள்ளது.

    இத்துடன் 600 எம்ஏஹெச் போர்டபில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இது இயர்பட்களை கூடுதலாக 6 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் மொத்தத்தில் 35 மணி நேர பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

     நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்

    நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் சிறப்பம்சங்கள்

    - 6எம்எம் கிராபின் டிரைவர்களுடன் உயர் ரக ஆடியோ 
    - ப்ளூடூத் 5 வசதி
    - வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் டச் கண்ட்ரோல் 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 50 எம்ஏஹெச் பேட்டரி - ஒரு இயர்பட்
    - 600 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சார்ஜிஙஅ கேஸ்
    - யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்

    நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் ஸ்னோ மற்றும் சார்கோல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது. 

    இந்தியாவில் அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய மந்திரிகள் கவனத்தை ஈர்க்கும் கூ ஆப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகி இருக்கும் புதிய சேவை கூ ஆப். இதனை பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய மந்திரிகளின் புதிய தகவல் பரிமாற்ற தளமாக மாறி வருகிறது.

    மத்திய அரசு கடந்த வாரம் அனுப்பிய அறிக்கைக்கு ட்விட்டர் பதில் அளிக்காததால், மத்திய அரசின் உடனடி மாற்று சேவையாக கூ ஆப் மாறி இருக்கிறது. முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விவசாயிகள் இனப்படுகொலையை குறிக்கும் வகையில் #farmers genocide என்ற ஹேஷ்டேக் பயன்படுத்திய 257 ட்விட்களை நீக்க ட்விட்டர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

    பிப்ரவரி 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு ஆணையங்களால் கண்டறியப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு ட்விட்டர் அக்கவுண்ட்களை நீக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. எனினும், ட்விட்டர் இதற்கு எந்த பதிலும் வழங்கவில்லை. மாறாக ட்விட்டர் இந்தியா பொது கொள்கை பிரிவு தலைவர் மஹிமா கௌல் தனது பதவியை விட்டு விலகினார்.

    கூ ஆப்

    இதனிடையே இந்தியாவில் உருவான கூ ஆப் சேவையை பல்வேறு மத்திய மந்திரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்த துவங்கி இருக்கின்றன. கூ ஆப் ட்விட்டர் போன்றே செயல்படும் சமூக வலைதள செயலியாகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஆகஸ்டு 2020 மாதத்தில் இந்த செயலி பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் போட்டியில் வெற்றி பெற்றது.

    இதுவரை கூ ஆப் பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியர்கள் கூ ஆப் பயன்படுத்த ஊக்குவித்தார். இந்த செயலியை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங் பிதாவ்கா இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். இருவர் கூட்டணியில் taxiforsure மற்றும் redbus போன்ற ஸ்டார்ட்-அப்களை துவங்கி இருக்கின்றனர். 

    தற்சமயம் கூ ஆப் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பங்களா, ஒரியா மற்றும் அசாமிஸ் போன்ற மொழிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.  

    இந்திய பயனர்கள் பற்றி அமேசான் அலெக்சா சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் சுவாரஸ்ய தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    இந்திய சந்தையில் அமேசான் அலெக்சா சேவை மூன்றாவது ஆண்டை கடந்துள்ளது. இதையொட்டி அந்நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி இந்தியாவில் 2020 ஆண்டு அலெக்சா பயன்பாடு 67 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் 2020 ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 ஆயிரம் முறை அலெக்சாவுக்கு இந்தியர்கள் I Love You என கூறி இருக்கின்றனர். 

    இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும் போது 1200 சதவீதம் அதிகம் என அமேசான் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுக்க அலெக்சா சேவையை பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர் மெட்ரோ அல்லாத நகரங்களில் எக்கோ சாதனங்களை வாங்கி உள்ளனர்.

     அமேசான் எக்கோ

    வீட்டில் உள்ள எக்கோ சாதனம் அல்லது 100-க்கும் அதிக அலெக்சா பில்ட்-இன் சாதனங்கள் அல்லது ஸ்மார்ட்போன் என பல விதங்களில் நாடு முழுக்க அலெக்சா பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது என அலெக்சா சேவைக்கான இந்திய தலைவர் புனீஷ் குமார் தெரிவித்து இருக்கிறார்.

    85-க்கும் அதிக அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் 2020 ஆண்டில் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வாங்கி இருக்கின்றனர். மூன்றாவது ஆண்டை முன்னிட்டு அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட் சேவையின் கட்டணத்தை மேலும் குறைத்து, அதிக வாடிக்கையாளர்களை பெற திட்டமிடுவதாக அமேசான் தெரிவித்து உள்ளது.

    அதன்படி பிப்ரவரி 15 நள்ளிரவு 12 மணி துவங்கி சரியாக 24 மணி நேரத்திற்கு எக்கோ சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
    ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

    சர்வதேச அளவில் 2021, ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியாக டெலிகிராம் இருக்கிறது. இந்த செயலி வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து உள்ளது. இதுபற்றிய விவரங்கள் சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.

    இதில் அதிக டவுன்லோட்களை பெற்ற நாடாக இந்தியா இருக்கிறது. தற்சமயம் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் வாட்ஸ்அப் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் டெலிகிராம் மட்டும் 24 சதவீதம் ஆகும்.

     டெலிகிராம்

    ஜனவரி மாதத்தில் மட்டும் டெலிகிராம் செயலி சுமார் 6.3 கோடிக்கும் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக டெலிகிராம் செயலியை அதிகம் டவுன்லோட் செய்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா இருக்கிறது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் 10 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்து மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது டெலிகிராம் செயலியின் பிரபலத்தன்மை 3.8 மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் முறையே 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன. 

    இந்த பட்டியலில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள் 4 மற்றும் 5வது இடங்களை பிடித்து இருக்கின்றன. சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் டவுன்லோட்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  
    கேமிங் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜிடிஏ 6 டிரெயிலர் மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சர்வதேச கேமிங் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேமாக ஜிடிஏ 6 இருக்கிறது. ஜிடிஏ 6 சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாத நிலையிலும் கேம் தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    ஜிடிஏ 6 டிரெயலர் எனும் தலைப்பில் பல்வேறு டிரெயிலர்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை எதுவும் கேமினை உருவாக்கும் ராக்ஸ்டார் நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை. தற்சமயம் கிடைக்கும் டிரெயிலர்கள் பெரும்பாலும் கிராண்ட் தெப்ட் ஆட்டோ பிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டவை ஆகும். 

     ஜிடிஏ 5

    ஜிடிஏ சீரிசின் புதிய கேமில் வரும் வாகனங்களில் கணிசமான அப்கிரேடுகள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கேம் கார் தொடர்பான கதையம்சம் அதிகம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் டிரெயிலர்கள் பெரும்பாலும் கான்செப்ட் வீடியோக்கள் ஆகும். பைக், ரேசிங் கார், டிரக், ஹெலிகாப்டர், ஏர்பிளேன் மற்றும் பல்வேறு இதர ஆட்டோமொபைல் வாகனங்கள் இந்த கேமில் இடம்பெற்று இருக்கின்றன. தற்போதைய தகவல்களின் படி ஜிடிஏ 6 அக்டோபர் 2023 வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
    ×