என் மலர்tooltip icon

    கணினி

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் அம்சம் புதிய வடிவமைப்பை பெற இருக்கிறது. இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மேம்படுத்தப்பட்ட செட்டிங்ஸ் பகுதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் செட்டிங்ஸ் தோற்றம் மாற்றப்பட்டு பல்வேறு டூல்களுக்கு புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய மாற்றங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.45 செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் செட்டிங்ஸ் மெனு மற்றும் புதிய மாற்றங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய மாற்றங்களில் முதன்மையானதாக பேமென்ட்ஸ் (Payments) ஆப்ஷன் இருக்கிறது. இது இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்களை பட்டியலிடுகிறது.

    அக்கவுண்ட்ஸ் (Accounts) பகுதியை திறக்கும் போது ஒவ்வொரு ஆப்ஷனிற்கும் பிரத்யேக ஐகான் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதன் செக்யூரிட்டி (Security), சேஞ்ச் நம்பர் (Change number), டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (Two-step verification) உள்ளிட்டவற்றுக்கும் புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    எனினும், நோட்டிஃபிகேஷன்ஸ் (Notifications) பகுதியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹெல்ப் (Help) பகுதியின் அனைத்து டூல்களும் பிரத்யேக ஐகான்களும் மாற்றப்பட்டிருக்கிறது.

    இதேபோன்று டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் (Data and storage usage) போன்ற ஆப்ஷன்களில் இனி டேட்டா பயன்பாடு பற்றிய விவரங்களை பார்க்க முடியும். இதற்கு நெட்வொர்க் யூசேஜ் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். புதிய இன்டர்ஃபேஸ் மெசஞ்சர் செயலியின் ஸ்டேபிள் பதிப்பில் காணப்படவில்லை.

    இத்துடன் நெட்வொர்க் யூசேஜ் பக்கத்தில் இனி மெமரி பயன்பாட்டு விவரம் மற்றும் தேதி, நேரத்துடன் காண்பிக்கிறது. பேமென்ட்ஸ் தவிர பீட்டா செயலியின் மற்ற அம்சங்கள் சீராக இயங்குகிறது.
    கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மூலம் வழிகாட்டும் புதிய வசதி தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. #GoogleMaps #ARnavigation



    கூகுள் தனது I/O 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை புகுத்த இருப்பதாக அறிவித்தது.

    கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வழிதெரியாத இடத்திற்கு செல்ல சரியாக வழிகாட்டும். தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படும் நிலையில், சில பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் மேப்ஸ் செயலி முதலில் ஜி.பி.எஸ். மூலம் வழிகளை சேகரித்துக் கொண்டு பின் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ விவரங்களை பயன்படுத்தி பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்.



    கூகுள் மேப்ஸ் செயலி ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் என்றபோதும், பயனர்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்காக எப்போதும் கையை உயர்த்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பயனர் இருக்கும் இடத்தை மேப்ஸ் சரியாக கண்டறிந்து, சீராக இயங்க துவங்கிடும்.

    புதிய அம்சம் அனைவருக்கும் சேர்க்கப்பட்டதும், கூகுள் மேப்ஸ் செயலில் ஸ்டார்ட் ஏ.ஆர். (Start AR) எனும் பட்டன் இடம்பெறும் என தெரிகிறது. பயனர் செல்ல வேண்டிய இடத்தை சீராக காண்பிக்கும் வகையில் புதிய யூசர் இன்டர்ஃபேசை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது.

    தற்சமயம் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சம் அனைவருக்கும் வழங்குவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அறிமுகமான அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேமினை மூன்று நாட்களில் பத்து லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். #ApexLegends



    சர்வதேச கேமிங் சந்தையில் பிரபல நிறுவனங்களான இ.ஏ. மற்றும் ரிஸ்பான் எண்டர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேமினை அறிமுதம் செய்துள்ளன.

    பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வெளியான முதல் 72 மணி நேரத்தில் (மூன்று நாட்கள்) சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கேமினை விளையாட துவங்கியுள்ளனர். 

    தற்சமயம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (PS4) கன்சோல்கள், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கிறது. எனினும், பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.



    வெளியான மூன்று நாட்களில் அதிகளவு வரவேற்பை பெற்றிருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களை மிஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 2018 வரை ஃபோர்ட்நைட் விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை தினமும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை இரண்டு கோடியாக இருக்கிறது.

    அபெக்ஸ் லெஜண்ட்ஸ் முதற்கட்டமாக கேமிங் கன்சோல்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த கேம் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் போன்று ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புதிய செயலி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    சமூக வலைதளத்தை மேலும் வளர்க்கவும், பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஃபேஸ்புக் புதிய செயலியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. லொல் (LOL) என்ற பெயரில் உருவாகி வந்த செயலியில் பயனரை மகிழ்விக்கும் நோக்கில் மீம், ஜிஃப் போன்றவை இடம்பெற்றிருக்கும். 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் லொல் செயலியை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குறைந்தளவு பயனர்களுடன் சோதனை முறையில் துவங்கப்பட்ட லொல் திட்டம் நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை.

    லொல் செயலியை ஃபேஸ்புக் 100 மாணவர்களுடன் இயக்கி வந்தது, பின் செயலியில் ஃபேஸ்புக் ஊழியர்களில் 100 இளைஞர்களை சேர்த்துக் கொண்டது. ஃபேஸ்புக் இனி மெசஞ்சர் கிட்ஸ் செயலியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மெசஞ்சர் கிட்ஸ் செயலி 13 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.



    ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட்ஸ் செயலி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை குழந்தைகள் தங்களது பெற்றோர் அனுமதிக்கும் நண்பர்களுடன் உரையாட முடியும். எனினும், இந்த செயலியை பயன்படுத்துவதால் குழந்தைகளின் உறக்க முறை மற்றும் சுயமரியாதையை குறைக்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    “தளத்தில் வரும் தரவுகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், குழந்தைகளுக்கென பிரத்யேக சமூக வலைதளம் துவங்குவது நல்லதல்ல. சர்வதேச அளவில் குழந்தைகள் ஸ்கிரீனினை பார்க்கும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஃபேஸ்புக் அவர்களை ஸ்கிரீனினை பயன்படுத்த செய்கிறது,” என சமூக வலைதள வல்லுநரான அனூப் மிஸ்ரா தெரிவித்தார்.
    இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. #Facebook



    இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி ஃபேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களை யார் வழங்கி இருக்கின்றனர், அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்துள்ளனர் போன்ற விவரங்களை அனைவரும் பார்க்க முடியும்.

    ஒவ்வொரு விளம்பரத்திலும் விளம்பரதாரர்கள் தங்களை அடையாளப்படுத்த அவர்கள் இயக்கும் ஃபேஸ்புக் பக்கம், அல்லது நிறுவனம் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வழங்க வேண்டும். 

    விளம்பரங்களை வழங்கும் போது மற்ற நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடும் போது விளம்பரதாரர் சார்பில் ஃபேஸ்புக்கிற்கு மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.



    முன்னதாக இதே திட்டங்களை அமல்படுத்த இருப்பதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிவித்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் அரசியல் விளம்பரங்களை தெளிவாக கண்டறிய முடியும். புதிய விதிமுறைகள் ஃபேஸ்புக் சார்பில் தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவை பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் அமலாகும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    அரசியல் விளம்பரங்களை பயனர் க்ளிக் செய்யும் போது ஆட் லைப்ரரி எனும் பக்கம் திறக்கும். இங்கு விளம்பரம் தோன்றும் தேதி மற்றும் அவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற விவரங்களும், இதற்கு விளம்பரதாரர் செலவிட்டிருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும்.
    வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் மற்றும் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்த தொழில்நுட்பம் வழக்கத்தை விட அதிகளவு குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் பல்வேறு அக்கவுண்ட்களை உருவாக்கி தீங்கு விளைவிக்கும் போலி தகவல்களை பரப்புவோரை கண்டறியும். இதுபோன்ற அக்கவுண்ட்களை செயலி முழுக்க வெவ்வேறு தளங்களில் முடக்குவதாக வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

    அந்த வகையில் போலி தகவல்களை பரப்புவதற்கென உருவாக்கப்படும் அக்கவுண்ட்கள் பதிவு செய்யப்படும் போது, குறுந்தகவல் அனுப்பும் போது அல்லது மற்றவர்கள் புகார் எழுப்பும் போது என பல்வேறு தளங்களில் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் செயலியில் சுமார் இருபது லட்சம் அக்கவுண்ட்கள் இவ்வாறு முடக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



    வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கும் மெஷின் லேர்னிங் மென்பொருளால் தற்சமயம் 20% அக்கவுண்ட்களை பதிவு செய்யப்படும் போதே முடக்கமுடிகிறது. அக்கவுண்ட்களை முடக்க பயனரின் ஐ.பி. முகவரி, அவர் வசிக்கும் நாடு, அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர், அக்கவுண்ட் எவ்வளவு பழையதாக இருக்கிறது என பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    ஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கும் விசேஷ மென்பொருள் உள்பட செயலியை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும் பல்வேறு வழிகளை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்கானிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

    போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிக்க பயனர் ஒரு குறுந்தகவலை மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதுதவிர ரேடியோ, தொலைகாட்சி, வலைதளம் உள்ளிட்டவற்றில் போலி செய்திகள் பரப்புவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி ஒருவழியாக வழங்கப்பட்டுள்ளது. #Facebook #Messenger



    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. மெசஞ்சரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது. 

    வாட்ஸ்அப் போன்றே மெசஞ்சர் செயலியிலும் குறுந்தகவல்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் அழிக்க வேண்டிய குறுந்தகவலை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்த பின் அழிக்கப்பட்ட குறுந்தகவல் இருந்த இடத்தில் குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உணர்த்தும் தகவல் இடம்பெறுகிறது. மெசஞ்சரில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க பத்து நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.



    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மெசஞ்சரில் குறுந்தகவல்களை அழித்தபின், இந்த அம்சம் உருவாக்கப்படுவதை ஃபேஸ்புக் உறுதி செய்திருந்தது. குறுந்தகவல்களை பயனர் தங்களுக்கு மட்டும் அழித்துக் கொள்ள குறுந்தகவல்களை தேர்வு செய்து “Remove for You” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ததும் குறுந்தகவல் பயனருக்கு மட்டும் அழிக்கப்பட்டு விடும். ஃபேஸ்புக் இந்த அம்சத்தை முதற்கட்டமாக எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், லி்ண்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய 10 நிமிடங்களில் அழிக்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #iOS



    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் ஆப்பிளின் டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் செயலியை பயோமெட்ரிக் முறையில் லாக் செய்து கொள்ளும்.

    புதிய பயோமெட்ரிக் பாதுகாப்பை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    எனினும், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் மற்றும் அவற்றுக்கான க்விக் ரிப்ளை ஆப்ஷன்களை தொடர்ந்து பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தின் நோட்டிபிகேஷனில் க்விக் ரிப்ளை வசதி வழங்கப்பட்டிருந்தாலும், செயலியை முழுமையாக பயன்படுத்த பயோமெட்ரிக் முறையை கடக்க வேண்டியது அவசியமாகும்.  



    புதிய பாதுகாப்பு வசதி பற்றி ஆப்ஸ்டோரில் எழுதப்பட்டிருப்பதாவது: வாட்ஸ்அப் செயலியை அன்லாக் செய்ய ஃபேஸ் ஐ.டி. அல்லது டச் ஐ.டி. உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இதற்கு செட்டிங்ஸ் - - அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களுக்கு சென்று ஸ்கிரீன் லாக் வசதியை செயல்படுத்த வேண்டும்.

    முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களை 2020 ஆம் ஆண்டிற்குள் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வசதியை கொண்டு மூன்று செயலிகளுக்கு இடையே பயனர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பிழைக்கு அந்நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. விரைவில் பிழையை சரிசெய்வதற்கான அப்டேட் வெளியாகிறது. #Apple #FaceTime



    ஆப்பிள் ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பிழைக்கு ஆப்பிள் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஃபேஸ்டைம் செயலியில் அழைப்பு விடுத்தால், மறுப்பக்கம் அழைப்பை ஏற்காத நிலையிலும் அவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். இதுதவிர அழைப்பை மேற்கொள்வோர் மற்றவர்களது சாதனத்தின் கேமராவையும் இயக்க முடியும் என சிலர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், "க்ரூப் ஃபேஸ்டைம் பாதுகாப்பு கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், இதற்கான மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. வரும் வாரத்தில் இதற்கான அப்டேட் வெளியாகும் என தெரிகிறது. பாதுகாப்பை கோளாறை முதலில் தெரியப்படுத்திய தாம்ப்சன் குடும்பத்தினருக்கு எங்களது நன்றிகள்.

    பாதுகாப்பு கோளாறில் பாதிக்கப்பட்ட எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கவலையுற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சனையை சரிசெய்யும் வரை காத்திருந்தமைக்கு அனைவருக்கும் பாராட்டுக்கள்," என ஆப்பிள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



    க்ரூப் ஃபேஸ்டைம் கோளாறு முதலில் அரிசோனாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கண்டறிந்தான். ஜனவரி 19 ஆம் தேதி தனது நண்பருக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது அவரது நண்பர் அழைப்பை ஏற்கவில்லை எனினும் அவரது உரையாடல்களை கேட்க முடிந்ததாக தெரிவித்தார்.

    பின் சிறுவனின் தாயார் மிஷல் தாம்ப்சன் பாதுகாப்பு கோளாறு பற்றி ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். பின் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வேகமாக பரவியது. ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஓ.எஸ். மோஜேவ் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தில் குறைபாடு ஏற்பட்டது.

    "பிரச்சனை இருப்பதை உறுதி செய்ததும் எங்களது பொறியாளர் குழு க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை செயலிழக்க செய்துவிட்டு உடனடியாக பிழையை சரி செய்யும் பணிகளை துவங்கினர். எங்களது சேவைகளின் பாதுகாப்பு பற்றி எங்களது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்க அதிகளவு முக்கியத்துவம் அளிக்கிறோம்," என ஆப்பிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் டாக்டர் மேரியோ வொர்ல்டு கேம் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. #Nintendo #DrMarioWorld



    நின்டென்டோ மற்றும் லைன் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் சாதனங்களுக்கென புதிய கேமினை உருவாக்க இருக்கின்றன. அந்த வகையில் நின்டென்டோ மற்றும் லைன் நிறுவனங்கள் இணைந்து டாக்டர் மேரியோ என்ற கேமினை உருவாக்குகின்றன.

    புதிய கேமினை இருநிறுவனங்களும் இந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. முதற்கட்டமாக இந்த கேம் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அறிமுகமாக இருக்கின்றது. 

    முன்னதாக பல்வேறு ஆன்லைன் மற்றும் மொபைல் கேம்களை உருவாக்கி அவற்றை இயக்கி வந்த நின்டென்டோ மற்றும் லைன் கார்ப்பரேஷன் புதிய டாக்டர் மேரியோ வொர்ல்டு கேமினை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றன. 



    ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இலவசமாக டவுன்லோடு செய்யக்கூடியதாக டாக்டர் மேரியோ வொர்ல்டு கேம் இருக்கும். முற்றிலும் இலவசமாக வழங்கமுடியாது என்பதால் செயலியில் காசு கொடுத்த வாங்க வேண்டியதாக சில அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. 

    முதற்கட்டமாக ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்றாலும் உலகம் முழுக்க சுமார் 60 நாடுகளில் டாக்டர் மேரியோ கேம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    அசுஸ் நிறுவனம் உலகின் சிறிய லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Asus #Laptop



    தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ் இந்தியாவில் புதிய சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மற்றும் சென்புக் 13 (UX333) என மூன்று புதிய லேப்டாப்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

    ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய சென்புக் லேப்டாப்கள் MIL-STD-810G தரச்சான்று பெற்றிருக்கின்றன. அசுஸ் அறிமுகம் செய்திருக்கும் மூன்று புதிய லேப்டாப்களும் ராயல் புளு மற்றும் ஐசிக்கிள் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.



    அசுஸ் சென்புக் சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மற்றும் சென்புக் 13 (UX333) லேப்டாப்கள் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் சி.பி.யு. மற்றும் NVIDIA GeForce GTX 1050 Max-Q கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவற்றில் 8 அல்லது 16 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.

    மெமரியை பொருத்தவரை 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள் கொண்ட ஃபுல் ஹெச்.டி. நானோ எட்ஜ் டிஸ்ப்ளேக்கள் கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. அல்லது எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்படுகிறது.

    அசுஸ் சென்புக் UX333FA-A4011T மாடல் விலை ரூ.71,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான சென்புக் UX533FD-A9094T மாடல் விலை ரூ.1,39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை போன்று இன்டெல் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Intel #FoldablePhone



    இன்டெல் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சாம்சங், ஹூவாய், எல்.ஜி., சியோமி என பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகின்றன.

    சர்வதேச காப்புரிமை அலுவலகம் மற்றும் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் இன்டெல் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் இன்டெல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பெரிய திரை கொண்ட டேப்லெட் போன்று காட்சியளிக்கிறது. இன்டெல் புதிய சாதனத்தில் மொத்தம் மூன்று டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்றுள்ளன.

    இன்டெல் கார்ப்பரேஷன் சார்பில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை லெட்ஸ்கோடிஜிட்டல் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்டெல் காப்புரிமை விண்ணப்பத்தின் தலைப்பு மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்கள் கொண்ட மின்சாதம் என வைக்கப்பட்டிருக்கிறது. காப்புரிமை விவரங்களின் படி முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனத்தை ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: LetsGoDigital

    இந்த சாதனத்தில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சுற்றிலும் பெசல்கள் இல்லாமல், கேமரா, சென்சார்கள் மற்றும் ரிசீவர்கள் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படுகிறது. ஸ்மார்ட்போனினை இருமுறை திறந்தால், பெரிய டேப்லெட் போன்று பயன்படுத்தலாம். இருமுறை மடிக்கக்கூடிய வகையில் உருவாவதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக தடிமனாக இருக்கும் என தெரிகிறது.

    டேப்லெட் சாதனம் திறக்கப்பட்ட நிலையில் மூன்று டிஸ்ப்ளே பாகங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு கேமராக்கள் என மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்துடன் ஸ்டைலஸ் பென் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதனை மடிக்கக்கூடிய சாதனத்துடன் காந்தம் போன்று இணைத்து கொள்ளலாம்.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து பார்க்கும் போது இந்த மடிக்கக்கூடிய சாதனம் சந்தையில் அறிமுகமாக சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. #Intel #FoldablePhone
    ×