என் மலர்
கணினி
தொழில்நுட்ப துறையில் புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்வதில் பெயர்பெற்ற ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறந்துள்ளது. #Zebronics
தகவல் தொழில்நுட்பத் துறையில் தனது தயாரிப்புகளான தொழில்நுட்ப்ப சாதனங்கள், ஒலி அமைப்பு, மொபைல் மற்றும் கண்காணிப்பு சாதனங்களை தயாரித்து விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் இந்தியா தனது முதல் சில்லறை விற்பனையகத்தை சென்னையில் உள்ள ஃபோரம் மாலில் திறந்தது.
சில்லறை விற்பனை அணுகுமுறை மூலம் பயனர்களுக்கு அவரவர் விரும்பும் பொருட்களை தொட்டு பார்த்து பொருட்களின் தன்மையை அறிந்துகொண்டு வாங்கச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த பிராண்டின் திருப்தியை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பை தருகிறது. ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப சந்தையில் இதுவரை சுமார் 80 விருதுகளை தன்வசம் கொண்டுள்ளது.

தமது புதிய சில்லறை விற்பனையக தொடக்க விழாவில் பேசிய ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் , ராஜேஷ் தோஷி கூறுகையில் - " சென்னையே அனைத்தின் தொடக்கமாகும், இந்த நிறுவனம் தொடக்கம் முதல் ஏறத்தாழ இருபது வருட அனுபவத்திற்கு பிறகு, எங்களின் சொந்த ஊரான சென்னையில் உள்ள "ஃபோரம் மாலில்" எங்களுடைய முதல் சில்லறை விற்பனையகத்தை துவக்கி வைப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன், புதிய விற்பனையகத்தில் மொபைல் உபகரணங்கள் தொட்டு பார்த்து பயனடையும் வாய்ப்பினை பயனர்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
இந்த முயற்சி பிராண்டின் நம்பகத்தன்மையை மட்டும் வலுப்படுத்துவது இல்லாமல் மறக்கமுடியா ஒரு அனுபவத்தை தருகிறது. மேலும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எங்களது நீண்ட கால எங்கள் பிராண்டின் தூண்களாக உள்ள எங்கள் வியாபார கூட்டாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
இதுபோன்ற அதிக சில்லறை விற்பனையகங்களை "ஜெப்ரோனிக்ஸ் டிஜிட்டல் ஹப்" என்ற பெயரில் பிரான்சைஸ் திட்டத்தில் அதிக கடைகளை திறந்து எங்கள் பிராண்டின் விழிப்புணர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு திரு. தோஷி கூறினார்.
வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் வழங்கப்பட்ட பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #Apps
வாட்ஸ்அப் வெப் பதிப்பில் 0.3.2041 அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் சில புதிய வசதிகளையும், பாதுகாப்பு குறைபாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கதாக பி.ஐ.பி. மோட் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்டிரீமபிள் போன்ற சேவைகளுக்கு பி.ஐ.பி. (பிக்சர் இன் பிக்சர்) மோட் வசதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வாட்ஸ்அப் வெப் 0.3.1846 பதிப்பில் பி.ஐ.பி. மோட் வசதி வழங்கப்பட்டது.
இந்த அம்சத்தினை சோதனை செய்ய வீடியோ லின்க் ஒன்றை நீங்கள் அனுப்ப வேண்டும். அல்லது உங்களுக்கு எவரேனும் அனுப்பியிருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீடியோ லின்க் உடன் வீடியோ பிரீவியூ வாட்ஸ்அப் சாட் திரையில் தோன்றும். இதனை க்ளிக் செய்யும் போது வீடியோ சாட் ஸ்கிரீனுள் ஓடத்துவங்கும்.

இதனுடன் பி.ஐ.பி. திரையை மூடாமல் சாட் ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒருவேளை பி.ஐ.பி. மோட் உங்களுக்கு இயங்காத பட்சத்தில் நீங்கள் வாட்ஸ்அப் வெப் பழைய பதிப்பை பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த உங்களது பிரவுசரின் கேச்சிக்களை அழித்து விட்டு பின் பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் உங்களது வாட்ஸ்அப் வெப் அப்டேட் ஆகியிருக்கும். இந்த நிலையில் பி.ஐ.பி. மோட் சீராக இயங்கும். #WhatsApp #Apps
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் சாதனங்களுக்கு ப்ளூடூத் சான்றளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Smartwatch
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிட்னஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிட் சாதனம் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் அன்பேக்டு விழாவில் அந்நிறுவனம் கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக கேலக்ஸி பட்ஸ் சாதனமும் அறிமுகமாகலாம்.
கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள் ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் SM-R170 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஐகான் எக்ஸ் (2018) மாடலில் ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டிருந்தது.

இதுதவிர புதிய இயர்போனில் 4 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலை போன்றே புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போனிலும் புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி ஃபிட் சாதனத்தின் அம்சங்கள் சாம்மொபைல் வலைதளம் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஃபிட் சாதனம் SM-R370 மற்றும் SM-R375 மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இருசாதனங்களிலும் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. மேலும் இவை கேலக்ஸி ஃபிட் என்ற பெயர் கொண்டிருக்கிறது.
புதிய சாதனத்தில் இசிம் வசதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சாம்சங் நிறுவனம் ஐந்து கேலக்ஸி எஸ்10 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் 5ஜி வேரியன்ட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அடங்கும். இவற்றுடன் கேலக்ஸி ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறி்முகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் 2 சாதனத்தின் வெளியீடு பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #Apple #AirPods2
ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சிரி கண்ட்ரோல், புதிய வடிவமைப்பு உள்ளிட்டவை இடம்பெறலாம் என கூறப்படுகிறுது.
அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் 2 சாதனத்தை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏர்பாட்ஸ் 2 முற்றிலும் புதிய வடிவமைப்பு, உடல் ஆரோக்கியம் சார்ந்த வசதிகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய 2019 ஏர்பாட்ஸ் சாதனம் ஏர்பாட்ஸ் 2 என அழைக்கப்படலாம் என்றும் இதில் பயோமெட்ரிக் விவரங்களை பரிமாற்றம் செய்வவற்கான சென்சார்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் உடல்நலன் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், எதுபோன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. குறிப்பாக புதிய ஏர்பாட்ஸ் 2 புதுவித வடிவமைப்பு அம்சங்களுடன் 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குல் அறிமுகமாகும் என டிஜிடைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலம் ஆப்பிள் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில், சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் சாதனங்களுக்கு தொடர்பு வரவேற்பு கிடைக்கும்.

புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் வழங்கும் அம்சங்கள் பற்றி ஆப்பிள் சார்பில் பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகளில் உடல்நலம் சார்ந்த அம்சங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் பயனரின் இதய துடிப்பு, உடல் அசைவுகள், உடலில் எரிக்கப்பட்ட கலோரி விவரங்களை பரிமாற்றம் செய்ய வெல்னஸ் (wellness sensors) சென்சார்கள் வழங்கப்படுவதாக காப்புரிமையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர, புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் மொபைல் கேமிங் செய்வதற்கான விசேஷ அம்சங்களும், வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்று ஏர்பாட்ஸ் கேஸ் இயங்கும் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் இதய துடிப்பு டிராக் செய்யும் அம்சம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய பதிப்பின் இன்டர்ஃபேஸ் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Twitter #socialmedia
ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளவோ அல்லது முந்தைய வடிவமைப்பிலேயே தொடரலாம். புதிய இன்டர்ஃபேசை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ‘opt-in’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். புதிய வடிவமைப்பில் இரண்டு அல்லது மூன்றடுக்குகளை கொண்டிருக்கிறது.
இத்துடன் எமோஜி பட்"ன், க்விக் கீபோர்டு ஷார்ட்கட்கள், மேம்படுத்தப்பட்ட டிரெண்ட்கள், அட்வான்ஸ்டு சர்ச் மற்றும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்டர்ஃபேஸ் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பழைய இன்டர்ஃபேசிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
A new https://t.co/fHiPXozBdO is coming.
— Twitter (@Twitter) January 22, 2019
Some of you got an opt-in to try it now. Check out the emoji button, quick keyboard shortcuts, upgraded trends, advanced search, and more. Let us know your thoughts! pic.twitter.com/G8gWvdHnzB
ட்விட்டரில் டார்க் மோட் சீராக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி, விரைவில் மேம்படுத்தப்பட்ட டார்க் மோட் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சில வாடிக்கையாளர்கள் டார்க் மோட் கருப்பு நிறத்திற்கு பதிலாக டார்க் புளு நிறத்தில் தோன்றுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
சமீபத்தில் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் அவரவர் விரும்பும் டைம்லைனை தேர்வு செய்து கொள்ளும் வசதியை சேர்த்தது. ட்விட்டர் இந்த வசசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக இந்த வசதி ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், விரைவில் வலைதளத்தில் வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேடு செய்ய முடியும். #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஐந்து பேருக்கு மட்டும் ஃபார்வேடு செய்யக் கூடியதாக கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் குறுந்தகவல்களை ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே அனுப்பவோ அல்லது ஃபார்வேடு செய்யவோ முடியும். இந்த கட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் அமலாகி இருந்த நிலையில், தற்சமயம் உலகம் முழுக்க நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உலகம் முழுக்க வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக குறுந்தகவல்களை அனுப்பவோ அல்லது ஃபார்வேடு செய்யவோ முடியாது. இந்த கட்டுப்பாடை அமல்படுத்துவது பற்றி ஆறு மாதங்களாக பயனர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேடு செய்யப்படும் குறுந்தகவல்களை சுட்டிக்காட்டும் வகையில் ஃபார்வேடு லேபல் குறுந்தகவல்களில் இடம்பெற்றது. இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேடு செய்யப்படும் குறுந்தகவல்களில் அவை ஃபார்வேடு செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும்.
இவ்வாறு செய்வதால் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல் அனுப்புவோர் டைப் செய்ததா அல்லது மற்றவர் அனுப்பியதை ஃபார்வேடு செய்திருக்கிறாரா என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்று முதல் வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்களில் பயனர்களால் ஒரே சமயத்தில் அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே குறுந்தகவல்களை ஃபார்வேடு செய்ய முடியும். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவற்றை செயல்படுத்துவது பற்றிய பணிகள் நடைபெறும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை துவங்கியது. ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஒரு ஜி.பி. டேட்டா ரூ.1.1 விலையில் வழங்கப்படுகிறது. #bsnl #Broadband
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியதும், டெலிகாம் சேவை கட்டணம் முழுமையாக மாறிப்போனது. ஜியோவின் மலிவு விலை டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைக்க ஆரம்பித்தன.
டெலிகாம் சேவையை தொடர்ந்து பிராட்பேண்ட் சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், போட்டிக்கு தயாராகும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேணேட் சேவைகளை துவங்தியுள்ளது.
பாரத் ஃபைபர் என அழைக்கப்படும் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100 எம்பி. வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கானதாகும். இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 வாடகை செலுத்த வேண்டும்.

பிராட்பேண்ட் சலுகைகளை பொருத்த வரை பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் ரூ.777 விலையில் துவங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் 500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் விலை உயர்ந்த சலுகை ரூ.16,999 விலையில் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் 3500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 10Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்று வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முன் புதிய ஐபேட் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPad #Apple
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபேட் மினி 4 மாடலின் மேம்படுத்தப்பட்ட டேப்லெட் சாதனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐபேட் மினி 4 செப்டம்பர் 2015 இல் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி டேப்லெட் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இவற்றில் ஐபேட் மினி 5 மற்றும் என்ட்ரி-லெவல் ஐபேட் உள்ளிட்டவை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
புதிய ஐபேட் மாடல்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐபேட் மினி 5 மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா செட்டப் மற்றும் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் 2019 கோடை காலத்தில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டேப்லெட்டில் முந்தைய ஐபேட் மினி மாடலை விட மேம்பட்ட பிராசஸர் மற்றும் சற்றே குறைந்த விலையிலான டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம்.
முன்னதாக 2015 செப்டம்பரில் ஆப்பிள் வெளியிட்ட ஐபேட் மினி் மாடலில் 7.9 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாம் தலைமுறை ஏ8 சிப்செட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான தகவல்களில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் மேம்பட்ட மாடல் 10 இன்ச் அளவில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய ஐபேட் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், வரும் மாதங்களில் ஐபேட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபேட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பீட்டா செயலியில் க்ரூப் கால் செய்வதற்கான ஷார்ட்கட் வழங்கப்பட்டுள்ளது. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது.
பயனுள்ள அம்சம் என்றாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி, பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தற்சமயம் சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை க்ளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம். பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.
2.19.9 Android update is available now.https://t.co/TzvR1dJz9y
— WABetaInfo (@WABetaInfo) January 15, 2019
It fixes the GIF bug and the group call button is now enabled (it was not available in versions downloaded from the official website). https://t.co/R910Ws8RbZ
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் ஏற்கனவே க்ரூப் வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் லாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலர் தங்களது வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.
சில பயனர்கள் 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் விவரங்களை அப்போதே விற்பனை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #socialmedia
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் பயனர் விவரங்களை விற்பனை செய்ய சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு, பின் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் ஊழியர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு பயனர் விவரங்கள் அடங்கிய கிராஃப் ஏ.பி.ஐ. இயக்க 2,50,000 டாலர்கள் கட்டணமாக நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கின் கிராஃப் ஏ.பி.ஐ. பயனரின் முக்கிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும்.
பின் 2014 ஏப்ரல் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கிராஃப் ஏ.பி.ஐ. இயங்கும் முறையை மாற்றியமைத்தது. ஜூன் 2015 இல் ஃபேஸ்புக் ஏற்கனவே வழங்கி வந்த சில விவரங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்ததாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர் விவரங்களை இயக்க விளம்பர நிறுவனங்களுக்கு அதிகளவு கட்டணம் நிர்ணயம் செய்வது பற்றி ஃபேஸ்புக் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஃபேஸ்புக் தரப்பில் கிராஃப் ஏ.பி.ஐ. வெர்ஷன் 1 இயக்குவதற்கான அனுமதி பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயனர் விவரங்களை சேகரிக்க அவர்களது லொகேஷன், அவர்களின் குறுந்தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை டிராக் செய்து ஃபேஸ்புக் அவற்றை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கியதாக கார்டியன் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய அப்டேட் மூலம் நேவிகேஷன் மற்றும் கார் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #AppleMaps
இந்தியாவில் ஆப்பிள் மேப்ஸ் செயலியில் நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயணங்களில் நடக்கும் போதோ அல்லது கார்களில் பயணிக்கும் போது வழி சொல்கிறது.
புதிதாக நேவிகேஷன் வசதி தவிர உபெர் மற்றும் ஒலா போன்றவற்றில் இருந்து கார் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்குகிறது. இதனை இயக்க மேப்ஸ் செயலயின் ரைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். எனினும், பொது போக்குவரத்து சார்ந்த விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
அதிகளவு விவரங்களை சேகரித்து சரியான தகவல்களை வழங்கினாலும், கூகுள் மேப்ஸ் சேவையுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மேப்ஸ் சற்று பின்தங்கியிருக்கிறது. ஏற்கனவே தாமதமாகி இருந்த போதும் மாற்றம் செய்ய ஆப்பிள் முன்வந்திருப்பதே ஆப்பிள் ப்ரியர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை தெரிவிப்பதோடு, குறிப்பிட்ட முகவரியில் பணி நடைபெறும் நேரம், சரியான முகவரி, தொடர்பு விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்களை வழங்குகிறது.
இவை தவிர ஆப்பிள் மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் முப்பறிமான காட்சி போன்ற வசதிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.
கம்ப்யூட்டர் சாதனங்களில் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்களை இயக்கும் வசதியுடன் அறிமுகமான வி.எல்.சி. மென்பொருள் இதுவரை 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. #VLC
பிரபல வீடியோ பிளேயர் மென்பொருள்களில் ஒன்றான வி.எல்.சி. 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஆண்ட்ராய்டு செயலியில் ஏர்பிளே வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி கொண்டு பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஆப்பிள் டி.வி.யில் ஸ்டிரீம் செய்து பார்த்து ரசிக்க முடியும்.
வி.எல்.சி. ஆண்ட்ராய்டு செயலிக்கான அப்டேட் ஒரு மாதத்தில் வெளியாகும். இந்த அப்டேட் வெளியானதும் ஆப்பிளின் ஏர்பிளே ப்ரோடோகால் சூட் வசதியுடன் வயர்லெஸ் ஸ்டிரீமிங் செய்ய முடியும்.
வி.எல்.சி. மீடியா பிளேயர் சேவையை தொண்டு நிறுவனமான வீடியோலேன் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2019 விழாவில் வீடியோலேன் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஒன்றிணைத்து வெவ்வேறு தளங்களில் இருந்து வி.எல்.சி. டவுன்லோடுகள் கண்காணிக்கப்பட்டது.
In front of an audience at #CES2019 we reached the 3 billion downloads of #VLC in live. What an amazing journey! See you in a billion :-) pic.twitter.com/sncDsiQ1J3
— Ludovic Fauvet (@etixxx) January 10, 2019
சி.இ.எஸ். 2019 துவக்க நிகழ்வின் போது, வி.எல்.சி. பிளேயர் 300 கோடி டவுன்லோடுகளை கடக்க சில லட்சங்கள் பின்தங்கியிருந்தது. பின் 300 கோடி டவுன்லோடுகளை நேற்று (ஜனவரி 10) கடந்தது. மைல்கல் டவுன்லோடுகளை கடந்ததும், வி.எல்.சி. டெவலப்பரான லுடோவிக் ஃபாவெட் டவுன்லோடு கவுண்ட்டர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
ஆண்ட்ராய்டு வி.எல்.சி. செயலிக்கான ஏர்பிளே வசதி வி.எல்.சி. 4 பதிப்பில் வழங்கப்படும் என மூத்த டெவலப்பர்களில் ஒருவரான ஜீன் பாப்டிஸ்ட் கெம்ப் தெரிவித்தார். ஏர்பிளே வசதி எல்.ஜி.யின் OLED டி.வி., சாம்சங் டி.வி. உள்ளிட்டவற்றிலும் வழங்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு இதர ஸ்மார்ட் டி.வி. நிறுவனங்களும் ஆப்பிளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.






