என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
    • ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    நார்டு 3 மாடல் அதிகாரப்பூர்வ படங்கள், விலை, 80 வாட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     

    டீசரில், புதிய ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், போஸ்டரில், தி லேப் (The Lab) வாசகம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் கம்யுனிட்டி ஃபோரமில் வெளியான தகவல்களின் படி நார்டு 3 மாடல் இந்தியா, ஐரோப்பா மற்றும் APAC பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    முன்னதாக தி லேப் வாசகம், ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T சாதனங்களின் வெளியீட்டுகளுக்கு பயன்படுத்தியது. ஒன்பிளஸ் கம்யுனிட்டிக்குள் தி லேப் வாசகம் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2770x1240 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    • ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர் உள்ளது.
    • சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டின் போதே ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.

    எனினும், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலுக்கான சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. டீசரில் ஜூன் 10-ம் தேதி அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஜூலை 10-இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டீசர் தவிர புதிய இயர்பட்ஸ் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர், 6mm இரண்டாவது டிரைவர்கள் உள்ளன. இந்த இயர்பட்ஸ் 50db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோவுக்காக புதிய இயர்பட்ஸ் மூன்று பில்ட்-இன் மைக்ரோபோன்களை கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் LDAC கோடெக் கொண்டிருக்கிறது. இவை ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதன் இயர்பட்களில் 60 எம்ஏஹெச் செல் பேட்டரியும், கேசில் 460 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் உடல்நல டிராக்கிங் வசதிகளை கொண்டுள்ளது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட வசதி கொண்டிருக்கிறது.

    ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் பிரீமியம் ப்ளூடூத் காலிங் வாட்ச் கொண்டிருக்கிறது. டேகர் லூக்ஸ் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டயல், லெதர், மெட்டாலிக் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல், இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட், இதய துடிப்பு மானிட்டர் செய்யும் வசதி, SpO2 டிராக்கிங், ஸ்லீப் மானிட்டரிங் மற்றும் மகளிர் உடல் ஆரோக்கயத்தை டிராக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

     

    புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் சப்போர்ட் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

    ஃபயர் போல்ட் அல்டிமேட் அம்சங்கள்:

    1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

    வாட்ச் ஃபேஸ்கள்

    ப்லூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட்

    சின்க் கான்டாக்ட்

    இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    புஷ் பட்டன் மற்றும் சுழலும் கிரவுன்

    123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட்

    ஸ்லீப், SpO2 மற்றும் இதய துடிப்பு டிராக்கிங்

    மகளிர் உடல் நல டிராக்கிங்

    IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்

    குடிநீர் மற்றும் செடன்டரி ரிமைன்டர்

    ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்

    வானிலை அப்டேட், இன்பில்ட் கேம்ஸ்

    மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல்

    270 எம்ஏஹெச் பேட்டரி

     

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இன் லெதர் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் மெட்டாலிக் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக், சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஃபயர்போல்ட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் இன்று துவங்குகிறது. லெதர் ஸ்டிராப் மாடல் விலை ரூ. 1799 என்றும் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 1999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய மானிட்டர் வித்தியாசமான செட்டப் கொண்டிருக்கிறது.
    • புதிய டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய அல்ட்ரா-டால் டூயல்அப் மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் மாணிட்டர்களை போன்றே அகலமாக இல்லாமல், உயரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எல்ஜி மானிட்டர் 28MQ750 என்று அழைக்கப்படுகிறது. இதன் அம்சங்கள் அதன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி டூயல்அப் 28MQ780 மானிட்டர் வழக்கமன 27 இன்ச் டிஸ்ப்ளே இல்லை. மாறாக இதில் உயரமான ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளது. இதன் ஸ்கிரீன் அளவு 27.6 இன்ச் அளவில் உள்ளது. இதில் எல்ஜி நானோ IPS பேனல், மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மானிட்டர் 2560x2880 பிக்சல், அகலமான வைடு கலர் கமுட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், HDR10 சப்போர்ட் கொண்டுள்ளது.

     

    இந்த மானிட்டரின் பிரத்யேக வடிவமைப்பு மூலம், இரண்டு 21.5 இன்ச் QHD ரெசல்யூஷன் கொண்ட மானிட்டர்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைக்கப்பட்டதை போன்று காட்சியளிக்கிறது. மேலும் டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மானிட்டரை எளிமையாக தூக்குவதும், வசதிக்கு ஏற்ப சுழற்றிக் கொள்ளவும் முடியும்.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய மானிட்டர் யுஎஸ்பி டைப் சி இன்டர்ஃபேஸ், 90 வாட் எக்ஸ்டெர்னல் பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு HDMI மற்றும் ஒரு DP இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-பில்ட் டூயல் 7 வாட் ஹை பவர் ஸ்பீக்கர்கள் உள்ளன.

    புதிய டூயல் அப் மானிட்டர் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையிலும் கிடைக்கும் எல்ஜி டிஸ்ப்ளே விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 096 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • விவோ நிறுவனத்தின் X100 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • விவோ X100 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. பிரபல டிப்ஸ்டரான ஃபோக்கஸ் டிஜிட்டல் விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டரை வெளியிட்டு உள்ளார். ஸ்மார்ட்போன் டிசைன் பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த ரென்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ரென்டர்களின் படி விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யுல் இடதுபுறமாக பொருத்தப்பட்டு உள்ளது. கேமரா மாட்யுலை சுற்றி செவ்வக வடிவம் கொண்ட மேட்ரிக்ஸ் பகுதி காணப்படுகிறது. தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன் விவோ X80 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், விவோ X80 சீரிசை தொடர்ந்து விவோ X90 சீரிசை தவிர்த்து நேரடியாக விவோ X100 சீரிசை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

     

    மற்றொரு டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் லோயர் எண்ட் வேரியண்ட்கள் விவோ X100 ப்ரோ மற்றும் விவோ X100 எனும் பெயர்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 சிப்செட், X100 ப்ரோ பிளஸ் மாடலில் அதிநவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ X100 மாடலில் 50MP பிரைமரி கேமரா சென்சார், 32MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

    • இந்த ப்ளூடூத் மவுஸ் கிராஃபைட், ரோஸ் மற்றும் ஆஃப் வைட் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இதன் பேட்டரி பேக்கப்-ஐ மேம்படுத்தும் நோக்கில் ஆட்டோ ஸ்லீப் வசதி உள்ளது.

    லாகிடெக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M240 ப்ளூடூத் மவுஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லாகிடெக் M240 சைலன்ட் ப்ளூடூத் மவுஸ் லாகிடெக் இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் குறைந்த விலை ப்ளூடூத் மவுஸ் ஆகும். இது பேர்-அன்ட்-பிளே வயர்லெஸ் மவுஸ் ஆகும். இது பயன்படுத்த சீரான அனுபவத்தை வழங்குகிறது.

    லாகிடெக் M240 ப்ளூடூத் மவுஸ் அதிவேக ப்ளூடூத் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதனை கம்ப்யுட்டர் மற்றும் டேப்லெட் உடன் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். இதன் வயர்லெஸ் ரேன்ஜ் 33 அடிகள் ஆகும். இந்த ப்ளூடூத் மவுஸ் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. நிறங்களை பொருத்தவரை இந்த ப்ளூடூத் மவுஸ் கிராஃபைட், ரோஸ் மற்றும் ஆஃப் வைட் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     

    இந்த ப்ளூடூத் மவுஸ் 18 மாதங்களுக்கான பேட்டரி லேஃப் கொண்டிருக்கிறது. மேலும் பேட்டரி பேக்கப்-ஐ மேம்படுத்தும் நோக்கில் ஆட்டோ ஸ்லீப் வசதி உள்ளது. M240 சைலன்ட் போன்ற மவுஸ் பயன்படுத்தும் போது லேப்டாப் 30 சதவீதம் வேகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மவுஸ்-இல் அல்ட்ரா-குயெட் க்ளிக் மூலம் மவுஸ் க்ளிக் செய்யும் போது ஏற்படும் சத்தத்தை 90 சதவீதம் வரை குறைக்கிறது.

    லாகிடெக் M240 சைலன்ட் மவுஸ்-ஐ இடது கை மற்றும் வலது கை பழக்கம் கொண்டவர்களும் எளிதில் பயன்படுத்த முடியும். இந்த மவுஸ் கார்பன் நியூட்ரல் சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பிளாஸ்டிக் பாகங்களில் 48 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டவை ஆகும்.

    புதிய லாகிடெக் M240 சைலன்ட் மவுஸ் இந்தியா முழுக்க லாகிடெக் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1595 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
    • பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனினை இந்தியா கொண்டுவந்துள்ளது. 2023 சர்தேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய அதிநவீன கூலிங் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் நோக்கில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் உருவாக்கப்பட்டுஇருக்கிறது.

    புதிய கூலிங் தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் தொழில்நுட்பம் (Active CryoFlux technology) என்று அழைக்கிறது. இதன் திறன்கள் குறித்து ஒன்பிளஸ் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. ஆனால் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கும் போது, பின்புற பேனலில் சிறிய பைப்லைனில் நீல நிற திரவம் ஓடுவதை பார்க்க முடியும்.

    டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் ரோட் ட்ரிப் நிகழ்ச்சியின் அங்கமாக இது நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒன்பிளஸ் பிராண்டு மற்றும் ரசிகர்கள் இடையே உறவை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 32 அடி நீளமுள்ள இரண்டு பேருந்துகள், நாட்டின் 25 நகரங்களை சற்றி பயணம் செய்ய இருக்கிறது.

    பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன. ஒன்பிளஸ் 11 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட், ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2, ஒன்பிளஸ் கீபோர்டு ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் மானிட்டர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். ஒன்பிளஸ் பாப் அப் எக்ஸ்பீரியன்ஸ் பேருந்து - சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ, கோயம்புத்தூர், சென்னை, பூனே, கொச்சி மற்றும் பல்வேறு நகரங்களில் பயணம் செய்ய இருக்கிறது.

     

     

    ஒன்பிளஸ் புதிய கூலிங் தொழில்நுட்பம் 2.1 டிகிரி வரை வெப்பத்தை குறைக்கும் என்பதால், பயனர்கள் தடையின்றி கேமிங் செய்ய முடியும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேம்களின் ஃபிரேம் ரேட் 3 முதல் 4fps வரை அதிகரிக்கும். மேலும் இந்த கூலிங் தொழில்நுட்பம் ஃபாஸ்ட் சார்ஜிங்கின் போதும் உதவுகிறது.

    டெல்லி நிகழ்வின் போது ஒன்பிளஸ் தனது ஒன்பிளஸ் 5ஜி ஸ்கெட்ச்பாட் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. இதில் ரோபோடிக் கை இடம்பெற்று இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இது எளிதில் படங்களை வரையும். பயணத்தின் போது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் சிறு போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் Z2 மாடலை பரிசாக வழங்குகிறது.

    • புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடல் முழு சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    • அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. அமேஸ்ஃபிட் பாப் 3S என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் HD AMOLED டிஸ்ப்ளே, 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், மெட்டாலிக் டிசைன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் இதய துடிப்பு, மன அழுத்த அளவுகள், நாடியில் ஆக்சிஜன் அளவுகளை கண்டறியும் திறன் உள்ளது. இந்த வாட்ச்-இல் ஜிபிஎஸ் வழங்கப்படவில்லை. எனினும், ஸ்மார்ட்போனில் இருக்கும் ஜிபிஎஸ் பயன்படுத்த வழி செய்கிறது. புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடலில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 12 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது.

     

    அமேஸ்ஃபிட் பாப் 3S அம்சங்கள்:

    1.96 இன்ச் 410x502 பிக்சல் AMOLED ஸ்கிரீன்

    ப்ளூடூத் 5.2

    பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர்

    அக்செல்லோமீட்டர் சென்சார்

    ஹார்ட் ரேட் சென்சார்

    3-ஆக்சிஸ் மோஷன் சென்சார்

    24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2

    மன அழுத்தம் டிராக் செய்யும் சென்சார்

    கலென்டர் ரிமைன்டர், கால் நோட்டிஃபிகேஷன்

    செடன்டரி ரிமைன்டர், ஸ்மார்ட் ஆப்ஸ் நோட்டிஃபிகேஷன்

    மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)

    300 எம்ஏஹெச் பேட்டரி

    12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிலிகான் ஸ்டிராப் வழங்கப்படுகிறது. இதன் மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • சியோமி நிறுவனத்தின் புதிய பேட் 6 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய டேப்லெட் வாங்குவோருக்காக சியோமி நிறுவனம் பன்டில்ஸ் வசதியை அறிவித்து இருக்கிறது.

    சியோமி நிறுவனம் புதிய பேட் 6 டேப்லெட் மாடலை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. மிட் ரேன்ஜ் பிரிவில் இது சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் ஆகும். எனி்னும், இதில் ஃபிளாக்ஷிப் தர ஹார்டுவேர் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சியோமி நிறுவனம் புதிய பேட் 6 டேப்லெட்-ஐ வாங்குவோருக்காக புதிதாக பன்டில்ஸ் (Bundles) அறிவித்து இருக்கிறது. இதில் புதிய டேப்லெட் உடன் பயனர்களுக்கு ஸ்மார்ட் பென், கீபோர்டு மற்றும் பேக் கவர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சியோமி பேட் 6 பன்டில்ஸ்-இல் முதல் பன்டில் உடன் சியோமி ஸ்மார்ட் பென் (2nd Gen) மற்றும் சியோமி பேட் 6 கீபோர்டு வழங்கப்படுகிறது. இந்த கீபோர்டில் 1.3mm கீ டிராவிலில் 64 கீ உள்ளன. இவற்றை குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் எவ்வித சிரமம் இன்றி பயன்படுத்த முடியும். 6 ஜிபி ரேம் வெர்ஷனின் துவக்க விலை ரூ. 34 ஆயிரத்து 997 ஆகும். 8 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 36 ஆயிரத்து 997 ஆகும்.

    அடுத்த பன்டிலில் ஸ்மார்ட் பென் மற்றும் சியோமி பேட் 6 பேக் கவர் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 31 ஆயிரத்து 497 என துவங்குகிறது. இதன் டாப் என்ட் விலை ரூ. 33 ஆயிரத்து 497 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கிற்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் மற்றொரு பன்டிலில் பேக் கவர் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 25 ஆயிரத்து 498 மற்றும் ரூ. 27 ஆயிரத்து 498 ஆகும்.

    சியோமி பேட் 6 மாடலில் 11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, அதிகபட்சம் 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14, 14MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    • ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 11 ப்ரோ சீரிசில், ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் உள்ளன.
    • இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது ரிய்லமி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் துவங்கியது. சில நாட்களுக்கு முன் விற்பனை துவங்கிய நிலையில், ரியல்மி நிறுவனம் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.

    விற்பனை துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிக விலை கொண்ட பிரிவில் அதிவேக விற்பனை இது என்றும் ரியல்மி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இதுதவிர ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் விலை பிரிவில் முதல் நாளில் அதிக யூனிட்கள் விற்பனையை பதிவு செய்து இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

    புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 2 ஆயிரம் வரை வங்கி சலுகை, எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் வாங்கும் போது, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் வாங்கும் போது 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் வழங்கப்படுகிறது.

    சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று (ஜூன் 16) துவங்கியது. இதன் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு வங்கி சலுகைகளின் படி ரூ. 1500 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 1500 தள்ளுபடி, ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    • இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
    • அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு.

    அசுஸ் நிறுவனம் தனது கையடக்க கேமிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய அசுஸ் ரோக் Ally இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே அசுஸ் ரோக் Ally மாடல் ஜப்பான், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அசுஸ் ரோக் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரோக் Ally மாடலுக்கான டீசர் ட்விட் செய்யப்பட்டு உள்ளது. அசுஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இந்திய கேமர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

    தற்போது நின்டென்டோ ஸ்விட்ச் மற்றும் வால்வ் ஸ்டீம் டெக் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் வாங்க முடியும். எனினும், இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இவற்றின் விலை அதிகரிக்கும். மேலும் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை கிடைக்காது.

    இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது. இந்த கன்சோல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது சிறப்பான நகர்வாக இருக்கும் போதிலும், இவை சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை அவற்றின் விலை தான் முடிவு செய்யும்.

    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி AMD ரைசன் Z1 பிராசஸர் கொண்ட ரோக் Ally மாடலின் விலை ரூ. 71 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும், AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் பிராசஸர் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:

    அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது.

    விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கும் இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது. இதில் உள்ள டூயல் ஸ்பீக்கர் செட்டப், அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம், சிறப்பான ஆடியோவுடன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

    கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. அசுஸ் ரோக் Ally மாடலில் 40 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
    • இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் நிர்வானா 525 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய கேமிங் இயர்பட்ஸ் வெளியாகி உள்ளது.

    புதிய போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை போட் நிறுவனத்தின் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த இயர்பட்களில் எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆக்டிவேட் செய்ய டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் 40ms வரையிலான லோ லேடன்சி வசதி BEAST மோடில் வழங்கப்படுகிறது.

    புதிய ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்ஸடன்ட் வேக் அன்ட் பேர் (IWP) அம்சம் உள்ளது. இது மிக விரைவில் ஸ்மார்ட்போன்களுடன் இணைய செய்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

    போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள்:

    10mm டிரைவர்கள்

    எல்இடி லைட்கள்

    கேமிங் சார்ந்த டிசைன்

    ப்ளூடூத் 5.3

    போட் சிக்னேச்சர் சவுன்ட்

    டச் கண்ட்ரோல்

    குவாட் மைக் மற்றும் ENx தொழில்நுட்பம்

    400 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்)

    40 எம்ஏஹெச் பேட்டரி (இயர்பட்ஸ்)

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    யுஎஸ்பி டைப் சி கனெக்டர்

    BEAST மோட் மற்றும் 40ms வரையிலான லோ லேடன்சி

    IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் பிளாக் சாபர் மற்றும் வைட் சாபர் நிறங்களில் கிடைக்கிறது. 

    ×