என் மலர்
தொழில்நுட்பம்
- சாம்சங் கேல்கஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது நான்கு நிறங்ளில் கிடைக்கிறது.
- கேலக்ஸி S23 அல்ட்ரா புதிய நிற வேரியண்ட்கள் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்ஷிப் மாடல் முதன் முதலில் ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் நிற ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் ரெட் மற்றும் லைட் புளூ என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய நிற வேரியண்ட்களின் விலையும் அதன் மற்ற நிறங்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய லைட் புளூ மற்றும் ரெட் நிற வேரியண்ட்கள் சாம்சங் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஸ்டோர்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும். கேலக்ஸி S23 அல்ட்ரா 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா அம்சங்கள்:
6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ GPU
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 1 டிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1
IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
200MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
10MP டெலிபோட்டோ லென்ஸ்
10MP டெலிபோட்டோ லென்ஸ்
12MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி போர்ட்
- அசுஸ் நிறுவனத்தின் கையடக்க கேமிங் கன்சோலுக்கு அறிமுக சலுகை அறிவிப்பு.
- புதிய அசுஸ் கேமிங் கன்சோல் வின்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும். அறிமுகம் மட்டுமின்றி புதிய அசுஸ் ரோக் Ally மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 120Hz ரிப்ரெஷ் ரேட், AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் விண்டோஸ் 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது.
அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:
7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU
16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்
512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்
விண்டோஸ் 11 ஒஎஸ்
ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்
டூயல் ஸ்பீக்கர்
அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்
3.5mm ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்
ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்
40 வாட் ஹவர் பேட்டரி
65 வாட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 12-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற இருக்கிறது. ஜூலை 7-ம் தேதி இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற உள்ளது.
அறிமுக சலுகையாக அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இ-ஷாப் அல்லது அசுஸ் ஸ்டோர்களில் ஜூலை 12-ம் தேதி வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள அசுஸ் ரோக் Ally கேஸ் வழங்கப்படுகிறது.
- முதல் நாள் விற்பனையில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 27 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.
ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன் இதன் விற்பனை துவங்கிய நிலையில், முதல் நாளிலேயே 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், விற்பனை துவங்கிய முதல் ஐந்து நாட்களில் ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. அறிமுகமானதில் இருந்தே ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

இதன் காரணமாக ரியல்மி ஏற்கனவே படைத்த சாதனங்களை அந்நிறுவனம் தற்போது முறியடித்து வருகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தவிர அனைத்து அம்சங்களும் ரியல்மி 11 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி 11 ப்ரோ மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனையும் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தடுக்கும் வசதி வழங்கப்படுகிறது.
- புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள செய்யும். இதன் மூலம் பயனர் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் பயனர்களை தொந்தரவு செய்யாது. எனினும், நோட்டிஃபிகேஷன் பகுதியில் அழைப்பு வந்ததற்கான தகவல் மற்றும் கால்ஸ் டேபில் அழைப்பு விவரம் இடம்பெற்று இருக்கும்.
அந்த வகையில் புதிய அம்சம் அழைப்புகளை முழுமையாக தடுக்காது. மாறாக, அழைப்பு வந்த தகவலை வழங்கி, யாரோ அழைப்பை மேற்கொள்ள முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கும். புதிய அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப் பிரைவசி செக்கப்:
பெயருக்கு ஏற்றார்போல் புதிய வாட்ஸ்அப் பிரைவசி செக்கப் அம்சம் கொண்டு செயலியில் கிடைக்கும் பிரைவசி செட்டிங்களை இயக்க வழி செய்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள பிரைவசி செக்கப் ஆப்ஷனில், ஸ்டார்ட் செக்கப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பிரைவசி செட்டிங் நிறைந்த மெனு திரையில் காணப்படும்.
இதில் யார் உங்களை தொடர்பு கொள்ள முடியும், தனிப்பட்ட விவரங்களை கட்டுப்படுத்துவது, சாட் பிரைவசி என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். பல்வேறு வகையான பிரைவசி செட்டிங்களை ஒரே பெயரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக புதிய பிரைவசி செக்கப் உள்ளது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபில் போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரென்டர்களின் படி ஒன்பிளஸ் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஹேசில்பிலாடு பிரான்டிங், அலர்ட் ஸ்லைடர், லெதர் போன்ற ஃபினிஷ் மற்றும் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. ரென்டர்களில் ஆன்டெனா பேன்ட்கள் காணப்படுவதால், இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள், பெரும்பாலும் பெரிஸ்கோப் கேமரா சேர்த்து வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் கேமரா பம்ப் பேக் பேனலின் மத்தியிலும், எல்இடி ஃபிளாஷ் வலதுபுற ஓரத்திலும் காணப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது.
வெளிப்புற டிஸ்ப்ளேவின் மேல்புறம் பன்ச் ஹோல் கேமரா திரையின் மத்தியல் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை எந்த அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், வெளிப்புற ஸ்கிரீன் சற்றே பெரிதாக காட்சியளிக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
Photo Courtesy: @OnLeaks @smartprix
- அசுஸ் நிறுவனத்தின் புதிய AIO சீரிஸ் கம்ப்யூட்டர் 7.2 கிலோ எடை கொண்டிருக்கிறது.
- புதிய அசுஸ் கம்ப்யூட்டரில் 23.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக தனது சாதனங்களை விரிவுப்படுத்தி வருகிறது. உலகளவில் அசுஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. அசுஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஆல்-இன்-ஒன் கம்ப்யுட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த வரிசையில், தற்போது புதிய AIO சீரிஸ் சக்திவாய்ந்த செயல்திறன், ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இவை கம்ப்யூட்டரை அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக மாற்றுகிறது. சக்திவாய்ந்த ஆல்-இன்-ஒன் கம்ப்யூட்டரை வாங்குவதற்கு இந்த மாடல்கள் கச்சிதமான தேர்வாக இருக்கும்.

இந்திய சந்தையில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே AIO மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த நிலை மாறி இருக்கிறது. புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் இன்டெல் 13th Gen பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. புதிய கம்ப்யூட்டர் தலைசிறந்த சவுன்ட் கொண்டிருப்பதோடு, அசத்தலான செயல்திறன் கொண்டுள்ளது.
புதிய A5 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான DDR4 ரக ரேம் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி M.2 NVMe PCIe SSD ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு உயர் ரக ஆடியோ உபகரணங்கள், பிரீமியம் சப்-வூஃபர், அதிக தரமுள்ள ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசத்தலான மல்டிமீடியா அனுபவம் கிடைக்கிறது.
டிஸ்ப்ளேவை பொருத்தவரை 23.8 இன்ச் FHD, 1920x1080, 16:9, IPS லெவல் பேனல், எல்இடி பேக்லிட் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, வின்டோஸ் 11 ஹோம் எடிஷன் ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் துவக்க விலை ரூ. 94 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- பயனர் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக ரியல்மி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
- அம்சம் நீக்கப்பட்டதோடு அதற்கான விவர குறிப்பும் மாற்றப்பட்டு உள்ளது.
ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களில் பயனர் அனுமதி இன்றி செயல்படுத்தப்பட்டு இருந்த என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) அம்சம் புதிய அப்டேட் மூலம் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் குறித்து டுவிட்டரில் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், சர்ச்சை ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ரியல்மி தனியார் செய்தி நிறுவனங்களுக்கு தன்தரப்பு விளக்கங்களை கொடுத்தது. இந்த நிலையில் தான் ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு (RMX3771_13.1.0.524(EX01) மற்றும் RMX3741_13.1.0.524(EX01)) அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் தானாக செயல்படுத்தப்பட்ட என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் அம்சத்தை நீக்குகிறது.
அம்சத்தை நீக்கியதோடு, இதற்கான விவர குறிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விவர குறிப்பில் ரியல்மி நிறுவனம்- ஆப் பயன்பாட்டு விவரங்கள், கலென்டர் நிகழ்வுகள், படிக்கப்படாத குறுந்தகவல் மற்றும் தவறிய அழைப்புகள் சார்ந்த தகவல்களை சேகரிப்பதாக கூறும் தகவலை நீக்கி இருக்கிறது.
பயனர் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரியல்மி நிறுவனம் இவ்வாறு செய்யவில்லை என்றும், பயனர் தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்து இருந்தது.
- சாம்சங் அன்பேக்டு நிகழ்வு முதல் முறையாக கொரியாவில் நடைபெற இருக்கிறது.
- கேலக்ஸி வாட்ச் 6 சீரிசில் ஏராளமான மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் ரென்டர்கள் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புதிய கேலக்ஸி வாட்ச் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய விலை விவரங்கள் ஃபிரான்சில் இருந்து வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இவை ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபட அதிக வாய்ப்புகள் உண்டு.
லீக் ஆன விலை விவரங்கள்:
கேலக்ஸி வாட்ச் 6 40mm ப்ளூடூத் கிராஃபைட் மற்றும் கிரீம் 319.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 774
கேலக்ஸி வாட்ச் 6 40mm 4ஜி கிராஃபைட் மற்றும் கிரீம் 369.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 236
கேலக்ஸி வாட்ச் 6 44mm ப்ளூடூத் கிராஃபைட் மற்றும் சில்வர் 349.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் 31 ஆயிரத்து 439
கேலக்ஸி வாட்ச் 6 44mm 4ஜி கிராஃபைட் மற்றும் சில்வர் 399.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 931

கோப்புப் படம்
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 43mm ப்ளூடூத் பிளாக் மற்றும் சில்வர் 419.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 727
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 43mm 4ஜி பிளாக் மற்றும் சில்வர் 469.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 42ஆயிரத்து 219
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 47mm ப்ளூடூத் பிளாக் மற்றும் சில்வர் 449.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 422
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 47mm 4ஜி பிளாக் மற்றும் சில்வர் 499.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 44 ஆயிரத்து 914
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாத கடைசி வாரத்தில் அன்பேக்டு நிகழ்வு முதல் முறையாக கொரியாவில் நடைபெறுகிறது. இதே நிகழ்வில் கேலக்ஸி Z ஃப்ளிப் 5, கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- விவோ நிறுவனம் X90 சீரிஸ் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸ் கொண்டிருக்கும் என தகவல்.
- புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ, தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் விவோ X90s ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது விவோ நிறுவனத்தின் நான்காவது X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இதுதவிர விவோ X90s மற்றும் ஐகூ 11s ஸ்மார்ட்போன் மாடல்களின் அம்சங்கள் வெளியாகி உள்ளது.
விவோ X90s ஸ்மார்ட்போன் சீன சந்தைில் ஜூன் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

கோப்புப் படம்
சீன சமூக வலைதளமான வெய்போவில் டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் புதிய விவோ X90s மாடல் விவரங்களை பகிர்ந்து இருக்கிறார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிளஸ் பிராசஸர், LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இதுதவிர இணையத்தில் வெளியான மற்றொரு தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐகூ 11s ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
- டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது.
- புதிய செயலி குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தகவல்.
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க், தனது நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்காக பிரத்யேக வீடியோ ஆப் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார். டுவிட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தார்.
'எங்களுக்கு ஸ்மார்ட் டிவி-க்கான பிரத்யேக டுவிட்டர் வீடியோ ஆப் வேண்டும்,' என்று டுவிட்டர் பயனர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க்- 'இது வந்து கொண்டு இருக்கிறது,' என பதில் அளித்தார். அந்த வகையில் புதிய டுவிட்டர் வீடியோ ஆப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்..

- மற்ற நிறுவனங்களை போன்றே டுவிட்டர் நிறுவனமும் வீடியோக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த வீடியோ ஆப் டுவிட்டர் நிறுவனம் வீடியோ தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை உணர்த்துகிறது.
- புதிய திட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது. யூடியூப் ஷாட்ஸ், டிக்டாக் போன்ற சேவையை டுவிட்டர் நிறுவனமும் அறிமுகம் செய்யலாம்.
- வீடியோ பிரிவில் கவனம் செலுத்துவதற்காக டுவிட்டர் நிறுவனம் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் தான் பெரிஸ்கோப் லைவ் ஸ்டிரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
- வீடியோக்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை டுவிட்டர் வழங்கி வருகிறது.
- புதிய செயலி டுவிட்டர் மட்டுமின்றி அதன் பயனர்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. மேலும் இது வருவாய் வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.
- ரியல்மி நிறுவனம் பயனர் விவரங்களை சேகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று மத்திய மந்திரி கருத்து.
பயனர் விவரங்களை சேகரிப்பதாக ரியல்மி நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் ரியல்மி சாதனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று தெரிவித்து உள்ளார்.
குற்றச்சாட்டுகளுடன் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் தனது பதிவில் இணைத்து இருக்கிறார். அதன்படி ரியல்மி யுஐ 4.0 -இல் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) அம்சம் மூலம் பயனர் விவரங்களை மேம்படுத்துவதாக கூறி அவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக டுவிட்டர் பயனர் குற்றம்சாட்டியுள்ளார்.

ரியல்மி யுஐ 4.0 வெர்ஷனில் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் விவர குறிப்பில், 'இந்த அம்சம் சாதனத்தின் விவரங்கள், செயலி பயன்பாட்டு தகவல், லொகேஷன் விவரங்கள், காலென்டர் நிகழ்வுகள், எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள்' தொடர்பான விவரங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக சேகரிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் ஸ்மார்ட்போன்களில் தானாக செயல்படுத்தப்படுகிறதா அல்லது பயனர் அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது தொடர்பாக ரியல்மி பதில் அளித்துள்ளது. அதில் இந்த அம்சம் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பெறப்படுவதாகவும், பயனர் விவரங்கள் அதிகளவு பாதுகாப்பாக வைக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது.
- சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகமாகிறது.
- நத்திங் போன் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலின் சிப்செட், டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் போன்ற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலின் யுஎஸ்பி டைப் சி கேபிள் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

டைப் சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது. நத்திங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று தெரிகிறது. நத்திங் நிறுவனம் 45 வாட் சார்ஜரை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்கிறது.
நத்திங் போன் 1 மாடலில் அதிகபட்சம் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-க்கான சப்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நத்திங் போன் மாடலில் எவ்வளவு சார்ஜிங் வேகம் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.






