என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை சமீபத்தில் துவங்கியது.
    • ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த நார்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    டீசரில் ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. டீசரில் ஃபாஸ்ட் அன்ட் ஸ்மூத் (Fast and Smooth) எனும் வாசகம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை துவங்கியது. இதில் தேர்வு செய்யப்படுவோர் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி, அதனை ரிவ்யூ செய்ய முடியும்.

     

    இதுதவிர ஒன்பிளஸ் வலைதளத்தில் பிரத்யேக போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று (ஜூன் 23) துவங்கிய சிறப்பு போட்டிகள் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புதிய நார்டு பட்ஸ் 2R மாடல் அறிமுகமாகும் ஜூலை 5-ம் தேதியே புதிய நார்டு 3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம்.

    டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படும் என்றும் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான ரென்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிரே நிறம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுதவிர புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஏஸ் 2V ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் தான் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

    மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே, இந்த மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
    • செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை முயற்சியின்போது பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.

    உலகெங்கிலும் பிரபலமான முகநூல் (Facebook) எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், "கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்" என்று கூறியிருக்கிறது.

    டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, ஒரு மசோதாவை கொண்டு நிறைவேற்றியிருக்கிறது.

    இதன்படி, கனடா டிஜிட்டல் துறையின் ஜாம்பவான்கள் தங்களது உள்ளடக்கத்திற்காக கனடா நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஜாம்பவான்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு "அவுட்லெட்"களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, செய்திகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.

    மெட்டா நிறுவனத்தின் நடவடிக்கைக்கு பதிலளித்த கனடாவின் பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், மெட்டாவின் முடிவு வருந்தத்தக்கது என்றாலும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எதிராக கனடா நாட்டினர்களின் பக்கம் தான் நிற்பதாக உறுதியளித்தார்.

    இந்த வாரம் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களை, கனடாவின் அதிகாரிகள் சந்தித்ததாகவும், புதிய சட்டம் குறித்த கூடுதல் விவாதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    கடந்த மாதமே சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்தை பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தார். அந்நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் பணிக்காக பணம் கொடுக்க மறுப்பது, 'பொறுப்பற்றதாகவும் தொடர்பில்லாததாகவும்' இருப்பதாகவும் கூறிய அவர், "இந்த மசோதாவை எதிர்ப்பது, நமது ஜனநாயகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது" என்றும் தெரிவித்திருந்தார்.

    கூகுள் நிறுவனமும் கடந்த பிப்ரவரியில், தனது பிரபலமான தேடுபொறியில் கனடா நாட்டு பயனர்களுக்கு செய்திகளுக்கான அணுகலை தற்காலிகமாக கட்டுப்படுத்தியது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜென் க்ரைடர் கூறும்போது, "யாரும் விரும்பாத ஒரு முடிவைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவே முயல்கிறோம்" என கூறினார்."

    ஆன்லைன் விளம்பரங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு நிறுவனங்களும், செய்தி நிறுவனங்களின் உள்ளடக்கத்தை இலவசமாகப் பயன்படுத்தும் போது பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் வெளியே செல்வதாக ஆஸ்திரேலியாவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    இந்த இரு நாடுகளைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளும் இதே போல் சட்டங்கள் கொண்டு வருமா என டிஜிட்டல் ஆர்வலர்கள் விவாதிக்கின்றனர்.

    • சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை மாணவர்கள் சிறப்பு விலையில் வாங்கிடலாம்.
    • மேக்புக், ஐபேட் மற்றும் மேக் மினி போன்ற சாதனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது. இவை பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் மேக் சாதனங்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

    நேற்று (ஜூன் 22) துவங்கிய சிறப்பு சலுகைகள் வழங்கும் பேக் டு யுனிவர்சிட்டி திட்டம் அக்டோபர் 02-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு விலையில் வாங்கிட முடியும். தேர்வு செய்யப்பட்ட மேக் சாதனங்களை வாங்கும் போது ஏர்பாட்ஸ், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவைகளை பெற முடியும்.

    ஆப்பிள் கேர் பிளஸ் சேவையின் கீழ் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்வி சலுகையின் கீழ் உள்ள சாதனங்கள் அனைத்திற்கும் விசேஷ விலையில் வாங்கிடலாம். ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு மாதம் ரூ. 59 விலையிலும் வாங்கிடலாம்.

    மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக் 24 இன்ச், மேக் மினி, ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ஏர் 5th Gen உள்ளிட்ட சாதனங்களை இந்த சலுகையில் வாங்கிட முடியும். மேக்புக் வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் Gen 2 மாடல் வழங்கப்படுகிறது.

    ஐபேட் ஏர் / ஐபேட் ப்ரோ மாடல் வாங்கும்போது ஆப்பிள் பென்சில் 2nd Gen இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் ஆப்பிள் பிகேசி, சகெட் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    • ரெட்மி பிராண்டின் இரண்டாம் தலைமுறை டேப்லெட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • புதிய ரெட்மி பேட் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் துணை பிரான்டு ரெட்மி தனது இரண்டாவது டேப்லெட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பேட் 2 பெயரில் உருவாகி வரும் புதிய டேப்லெட் FCC வலைதளத்தின் மூலம் லீக் ஆகி உள்ளது.

    புதிய ரெட்மி பேட் 2 மாடல் இந்த ஆண்டு இறுதியில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தான் ரெட்மி பேட் 2 விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ரெட்மி பேட் 2 டேப்லெட் 23073RPBFL எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. FCC விவரங்களில் ரெட்மி பேட் 2 மாடல் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    இதன் என்ட்ரி லெவல் மாடலில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மற்றொரு வேரியண்ட்-ம் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்-ம் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    புதிய ரெட்மி டேப்லெட் வைபை வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய FCC சான்றின் மூலம், ரெட்மி பேட் 2 மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகி இருக்கிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ரெட்மி பேட் 2 மாடலில் 2K ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8000 எம்ஏஹெச் பேட்டரி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.

    • மோட்டோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம்.
    • புதிய மோட்டோ ஃபோல்டபில் போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஜூலை மாத துவக்கத்தில் மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகி உள்ளது. மோட்டோ ரேசர் 40 மற்றும் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஜூலை 4-ம் தேதி இந்யாவில் அறிமுகமாகின்றன. அறிமுக நிகழ்வு ஜூலை 4, மாலை 6 மணிக்கு துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கான டீசர்களை மோட்டோரோலா வெளியிட்டு உள்ளது.

     

     மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீனா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 3.6 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144 Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    மோட்டோ ரேசர் 40 மாடலில் சற்றே சிறிய 1.47 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, உள்புறத்தில் 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரும், ரேசர் 40 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களிலும் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம், மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ரேசர் 40 மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    • ஜியோ போன் 5ஜி பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது.
    • இந்த மாடலில் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஜியோ போன் 5ஜி என்று அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய ஜியோ போன் 5ஜி பற்றிய அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் மற்றும் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது.


    தோற்றத்தில் ஜியோ போன் 5ஜி மாடல் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் இதர ஸ்மார்ட்போன்களை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. முன்புறம் வாட்டர் டிராப் நகர நாட்ச் உள்ளது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஜியோ பிரான்டிங் மற்றும் 5ஜி என்று எழுதப்பட்டு உள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு புகைப்படத்தில் ஜியோ 5ஜி நெட்வொர்க்கில் டெஸ்ட் முடிவுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஜியோ போன் 5ஜி மாடலில் 470Mbps டவுன்லோடு வேகமும், 34Mbps அப்லோடு வேகமும் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் 5ஜி பிராசஸர் அல்லது மீடியாடெக் டிமென்சிட்டி 700 சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்த ஜியோ போன் 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் உள்ள யாரும் அறிந்திராத அம்சம் பற்றிய தகவல் வெளியானது.
    • ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்பேஷியல் கம்ப்யூட்டர் - ஆப்பிள் விஷன் ப்ரோ - கடந்த மாதம் நடைபெற்று முடிந்த சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு - WWDC 2023-இல் அறிமுகம் செய்தது. இந்த ஹெட்செட் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தரவுகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் குறித்து ஆப்பிள் நிறுவனம் பல்வேறு அம்சங்களை விளக்கி இருந்தது. இது பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த ஹெட்செட்-க்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கி விட்டது. பலரும் இது எப்போது விற்பனைக்கு வரும் என்று காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் உள்ள யாரும் அறிந்திராத அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

     

    இந்த அம்சத்தை தனியார் செய்தி நிறுவனமான 9டு5மேக் விஷன்ஒஎஸ் SDK-வில் இருந்து கண்டறிந்து இருக்கிறது. அதன்படி கெஸ்ட் மோட் எனும் அம்சம், ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட், மற்றொரு பயனர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அதனை பயன்படுத்த வழி செய்கிறது. விஷன் ப்ரோ ஹெட்செட் உரிமையாளர்கள் தங்களின் ஹெட்செட்-ஐ மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கவும், அனுமதியை நிராகரிக்கவும் முடியும்.

    இந்த ஹெட்செட்-ஐ பயனர்கள் தாங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது, வேறு யாரும் இந்த ஹெட்செட்-ஐ பயன்படுத்த முடியாது. கெஸ்ட் பயனர்கள் குறிப்பிட்ட செயலிகள் அல்லது செட்டிங்களை ஆப்டிக் ஐடி இல்லாமல், பயன்படுத்த முடியாமல் செய்யும் வசதியும் விஷன் ப்ரோவில் வழங்கப்படுகிறது.

     

    இது கெஸ்ட் பயனர்கள் தடுக்கப்பட்ட செயலிகளை, விஷன் ப்ரோ உரிமையாளரின் பயோமெட்ரிக் விவரங்கள் இன்றி பயன்படுத்த முடியாமல் செய்து விடும். ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என்று தெரிகிறது.

    • சாம்சங் நிறுவனம் புதிய கேல்கஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டது.
    • புதிய கேலக்ஸி M34 5ஜி மாடல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர்களின் கீழ்புறமாக கைரேகை சென்சார் இருப்பது காணப்படுகிறது.

    இதே போன்ற செட்டப் கேலக்ஸி M33 5ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் M34 5ஜி மாடலில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

     

    டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அருகிலேயே ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.

    அதன்படி இந்த ஸ்மார்ட்போன் SM-M346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது தவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் லிஸ்டிங்கில் அம்பலமானது. இந்த மாடல் SM-E346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேல்கஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் வெளியீடு ஜூலை மாத வாக்கில் நடைபெறும் என்றும் விலை ரூ. 20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டுள்ளது.
    • விவோ Y36 மாடலில் 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ Y36 ஸ்மார்ட்போனில் 6.64 இன்ச் FHD+ 90Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் பேக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விவோ Y36 அம்சங்கள்:

    6.64 இன்ச் 2388x1080 பிக்சல் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

    அட்ரினோ 610 GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    IP54 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விவரங்கள்:

    விவோ Y36 ஸ்மார்ட்போன் வைப்ரன்ட் கோல்டு மற்றும் மீடியோர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    • நத்திங் போன் 1 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • நத்திங் போன் 2 பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    நத்திங் நிறுவனத்தின் புதிய நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நத்திங் போன் 2 பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதுதவிர நத்திங் நிறுவனரும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை அவ்வப்போது வழங்கி வருகிறார்.

    இந்த வரிசையில், தான் நத்திங் போன் 2 மாடலின் ஐரோப்பாவுக்கான விலை மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய நத்திங் போன் 2 மாடல் இருவித ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நத்திங் போன் 2 மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை 729 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இதன் 512 ஜிபி விலை 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 400 என்று நிர்ணயம் செய்யப்படலாம். இந்த விலை விவரங்கள் ஐரோப்பாவுக்கானது என்பதால், மற்ற பகுதிகளில் நத்திங் போன் 2 விலை வேறுப்படலாம். இதோடு, இந்த விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதால், இதில் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் போன் விலை இந்திய சந்தையில் ரூ. 32 ஆயிரத்து 999 என்று துவங்கியது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

     

    Photo Courtesy: OnLeaks Smartprx
    Photo Courtesy: OnLeaks Smartprx

    இதுவரை வெளியாகி இருக்கும் தவல்களின் படி நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும் நத்திங் போன் 2 மாடல் மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் பெறும் என்றும் நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    • இன்ஸ்டாகிராமில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டிக்டாக் சேவையிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னணி சமூக வலைதள சேவைகளில் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்ஸ்டாகிராம் தனது பனர்களுக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு மற்றும் ஷேர் செய்யும் வசதியை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புதிய அம்சம் பற்றிய தகவலை தனது பிராட்காஸ்ட் சேனலில் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ நேரடியாக தங்களது சாதனத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு ஷேர் ஐகான் மற்றும் டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் தெய்தாலே போதுமானது.

     

    புதிய அம்சம் பயனர் உருவாக்கும் தரவுகளின் மீது அதிக கண்ட்ரோல் வழங்குவதோடு, இன்ஸ்டாகிராம் தளத்தில் உருவாக்கும் தரவுகளை கொண்டாட வழி செய்கிறது. நிறுவனங்கள் சார்பில் வீடியோக்களை நேரடியாக டவுன்லோடு செய்ய அனுமதிக்கப்படுவதால், இதே போன்ற வசதி மற்ற தளங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    தற்போதைக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு செய்யும் வசதி பொது அக்கவுன்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பொது அக்கவுண்ட்களில் டவுன்லோடு செய்யக் கோரும் வசதியை செயலிழக்க செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. டவுன்லோடு செய்யப்படும் ரீல்ஸ்-இல் வாட்டர்மார்க் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    முன்னதாக டிக்டாக் செயலியும் இதேபோன்ற வசதியை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பயனர் வீடியோக்களில் டிக்டாக் லோகோவுடன் மற்றவர்களுக்கு பகிரப்படும். இது டிக்டாக்கிற்கு விளம்பரமாக அமைகிறது.

    • ஹானர் பேட் டேப்லெட்டின் புதிய வேரியண்ட் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ஹானர் பேட் X8 மாடல் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ஹானர் பேட் X8 (4ஜிபி ரேம், 64 ஜிபி) மாடல் அறிமுகம் செய்தது. முன்னதாக இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் அதிக மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஹானர் பேட் X8 மாடலில் 10.1 இன்ச் FHD ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், மேஜிக் யுஐ 6.1, 5MP பிரைமரி கேமரா, 2MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் 7.55mm அலுமினியம் அலாய் பாடி கொண்டிருக்கிறது. இத்துடன் 5100 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    ஹானர் பேட் X8 அம்சங்கள்:

    10.1 இன்ச் 1920x1200 பிக்சல் FHD IPS டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80

    ARM மாலி G52 2EEMC2 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1

    5MP பிரைமரி கேமரா

    2MP செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5100 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஹானர் பேட் X8 மாடலின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷன் புளூ ஹவர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஹானர் பேட் X8 மாடலின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 ஆகும்.

    ×