என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மோட்டோ ரேசர் 40 சீரிஸ் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ப்ளிப் போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.9 இன்ச் FHD+ உள்புறம் மடிக்கக்கூடிய போல்டபில் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் அல்ட்ரா மாடலில் 1-165Hz ரிப்ரெஷ் ரேட், LTPO டிஸ்ப்ளே, ரேசர் 40 மாடலில் 144Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் உள்ளது.

    ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 3.6 இன்ச் FHD+ வெளிப்புறம் pOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இதன் கவர் ஸ்கிரீன் 1.4 இன்ச் அளவில் உள்ளது. ரேசர் 40 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரேசர் 40 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

     

    மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள்:

    6.9 இன்ச் 2640x1080 பிக்சல் ஃபிலெக்ஸ்வியூ FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    1.47 இன்ச் 194x368 பிக்சல், குயிக்வியூ AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 644 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம்

    256 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, OIS

    13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

    32MP செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

    ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    4200 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    5 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

     

    மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள்:

    6.9 இன்ச் 2640x1080 பிக்சல் ஃபிலெக்ஸ்வியூ FHD+ pOLED LTPO டிஸ்ப்ளே, 1-165Hz ரிப்ரெஷ் ரேட்

    3.6 இன்ச் 1056x1066 பிக்சல், குயிக்வியூ AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி LPDDR5 ரேம்

    256 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    12MP பிரைமரி கேமரா, OIS

    13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

    32MP செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

    ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    3800 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    5 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோரோலா எட்ஜ் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பேன்டம் பிளாக், கிளாஸ் பேக் மற்றும் விவா மஜென்டா, வீகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், மோட்டோரோலா வலைதளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் ஜூலை 15-ம் தேதி துவங்க இருக்கிறது.

    மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல் சேஜ் கிரீன், சம்மர் லிலக் மற்றும் வென்னிலா கிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனையும் ஜூலை 15-ம் தேதி அமேசான், மோட்டோரோலா வலைதளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. 

    • ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • இந்த மொபைலில் ஜியோ சினிமா ஆப் கொண்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இந்த பிரான்டிங்கில் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களை சென்றடைய ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    ஜியோ பாரத் போன் ஸ்மார்ட் ஃபீச்சர் போன் ஆகும். இதில் இண்டர்நெட் பயன்படுத்துவதோடு, யுபிஐ பேமன்ட் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

     

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ஜியோ பாரத் போனின் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4ஜி ஸ்மார்ட்போன் ஃபீச்சர் போன் மாடல் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ரிடெயில் தவிர இதர பிரான்டுகளும் ஜியோ பாரத் பிளாட்ஃபார்மில் இணைந்து ஜியோ பாரத் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. ஜியோ பாரத் போன்களின் முதல் பத்து லட்சம் யூனிட்களுக்கான பீட்டா டெஸ்டிங் ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது.

    ரிசார்ஜ் சலுகை விவரங்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ பாரத் சலுகைகளின் விலை ரூ. 123 முதல் துவங்குகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் வருடாந்திர சலுகையின் விலை ரூ. 1234 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் போன் அம்சங்கள்:

    ஜியோ பாரத் போனின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த போன் வழக்கமான ஃபீச்சர் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிறிய ஸ்கிரீன், கீபோர்டு மற்றும் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.

    இந்த மொபைல் கொண்டு யுபிஐ பேமன்ட் செய்ய முடியும். இதற்கு ஜியோ பே செயலியை பயன்படுத்த வேண்டும். இத்துடன் ஜியோ சினிமா ஆப் கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    ஜியோ பாரத் போனுடன் ஜியோ சாவன் ஆப் சந்தா வழங்கப்படுகிறது. இதில் சுமார் எட்டு கோடிக்கும் அதிக பாடல்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர எப்எம் ரேடியோ, டார்ச்லைட் போன்ற அம்சங்களும் உள்ளன.

    • டெக்னோ கேமான் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த மாதம் நடைபெற இருந்தது.
    • இந்தியாவில் டெக்னோ கேமான் 20 சீரிஸ் மாடல்கள் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 மற்றும் கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் கேமான் 20 பிரீமியர் 5ஜி டாப் எண்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது டெக்னோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றி அறிவித்து இருக்கிறது.

    அதன்படி இந்தியாவில் டெக்னோ கேமான் 20 பிரீமியர் ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் விற்பனை ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    டெக்னோ கேமான் 20 பிரீமியர் 5ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்

    ARM G77 MC9 GPU

    8 ஜிபி ரேம்

    512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஹைஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    108MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

    2MP போர்டிரெயிட் கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர், எஃப்எம் ரேடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    டெக்னோ கேமான் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் செரினிட்டி புளூ மற்றும் டார்க் வெல்கின் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும்.

    டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.

    அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும்.

     

    "தகவல் திருட்டு மற்றும் சிஸ்டம் தவறாக கையாளுவது உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் நோக்கில், நாங்கள் தற்காலிக கட்டுப்பாடுகள்- வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 6 ஆயிரம் பதிவுகள் / வெரிஃபைடு இல்லா பயனர்கள் தினமும் 600 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 300 அக்கவுன்ட்களையும் பார்க்க முடியும்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்து இருந்தார்.

    பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மற்றொரு பதிவில், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.

    இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை கலை பொருளாக மாற்ற நினைத்ததன் விளைவு தான் கேவியர் எடிஷன் உருவாக காரணம்.
    • விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் 18 கேரட் தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ விஷன் ப்ரோ பெயரில் அறிமுகம் செய்தது. தற்போது துபாயை சேர்ந்த கேவியர் எனும் நிறுவனம் ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    புதிய மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் என்று ஆப்பிள் நிறுவனம் அழைக்கிறது. அதன்படி ஆப்பிள் ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை கலை பொருளாக மாற்ற நினைத்ததன் விளைவு தான் கேவியர் எடிஷன் உருவாக காரணம் என்று கேவியர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் உருவாக டாம் ஃபோர்டின் ப்ளிப்-அப் மற்றும் குக்கி ஸ்கை மாஸ்க் உள்ளிட்டவைகளை கொண்டு அதிவநீன தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட்-ஐ கேவியர் கலை பொருளாக உருவாக்கி இருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் மற்றும் அதன் பாதுகாப்பு மாஸ்க் உள்ளிட்டவை 18 கேரட் தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. இதற்காக சுமார் 1.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த ஹெட்செட்-இன் ஹெட்பேண்ட் கொனொலி லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே லெதர் ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பயன்படுத்துவோருக்கு அதிக சவுகரியமாகவும், சிறப்பான அனுபவத்தையும் வழங்குகிறது.

     

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட் விலையை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 87 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் விலை 39 ஆயிரத்து 900 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 லட்சத்து 73 ஆயிரம் என்று துவங்குகிறது. கேவியர் நிறுவனம் இந்த ஹெட்செட்-இன் 24 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட இருக்கிறது. இவை அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    • கேமிங் டேப்லெட் வெளியீட்டை ஒட்டி இரண்டு போஸ்டர்கள் வெய்போ தளத்தில் வெளியிடப்பட்டது.
    • ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் 10000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் பிரான்டில் புதிய கேமிங் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ரெட் மேஜிக் 8s ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரு சாதனங்களின் அறிமுக நிகழ்வு ஜூலை 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய கேமிங் டேப்லெட் பற்றிய விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

    ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் வெளியீட்டை ஒட்டி நுபியா நிறுவனம் இதுவரை இரண்டு போஸ்டர்களை சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டுள்ளது. அதில் முதல் போஸ்டர் டேப்லெட் முன்புற தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அம்பலப்படுத்துகிறது. இதுதவிர வேறு எந்த தகவலும் முதல் போஸ்டரில் இடம்பெறவில்லை.

     

    மற்றொரு போஸ்டரில் இந்த டேப்லெட் அதிகபட்சமாக 10000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ரெட்மி மேஜிக் டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி புதிய ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் 12.1 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் வழங்கப்பட இருக்கும் கேமராக்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    மேலும் இந்த டேப்லெட் 5ஜி வெர்ஷன் வடிவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் மாடல் ZTE ஆக்சன் பேட் 5ஜி மாடலின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்சன் பேட் மாடலில் 12.1 இன்ச் LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 10000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங், 13MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    • டெக்னோ பேன்டம் V போல்டு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • டெக்னோ பேன்டம் V ப்ளிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆனது.

    டெக்னோ பேன்டம் V போல்டு மாடல் மூலம் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையின் பட்ஜெட் பிரிவில் டெக்னோ களமிறங்கியது. மற்ற முன்னணி பிரான்டுகளை போன்றில்லாமல், டெக்னோ பிரான்டு விலை உயர்ந்த, டாப் என்ட் சாதனங்களை உருவாக்கவில்லை. மாறாக பட்ஜெட் பிரிவில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

    பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்ட டெக்னோ பேன்டம் V போல்டு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், டெக்னோ நிறுவனம் புதிய ப்ளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் டெக்னோ பேன்டம் V ப்ளிப் அல்லது பேன்டம் V யோகா பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

     

    சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி டெக்னோ பேன்டம் V ப்ளிப் ஸ்மார்ட்போன் AD11 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பேன்டம் V ப்ளிப் மாடல் வைபை, ப்ளூடூத், 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்டுள்ளது.

    டெக்னோ பேன்டம் V ப்ளிப் 5ஜி மாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக டூயல் பேட்டரி செட்டப் இருக்கும். இதில் ஒரு பேட்டரி 1165 எம்ஏஹெச், மற்றொரு பேட்டரி 2735 எம்ஏஹெச் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    டெக்னோ பேன்டம் V ப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டெக்னோ பேன்டம் V ப்ளிப் மாடல் ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13, 64MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • சாட் ஹிஸ்ட்ரியை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்க வேண்டியது அவசியம் ஆகும்.

    வாட்ஸ்அப் செயலியில் சாதனங்கள் இடையே சாட் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதனை செய்துமுடிக்க ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இந்த நிலையில், மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. ஆனால் இதற்கு இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்கவேண்டியது அவசியம் ஆகும்.

     

    கடந்த சில மாதங்களாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    சாட்களை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

    - இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் கொண்டிருப்பது, வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    - சாட் டிரான்ஸ்பர் செய்ய லொகேஷன் எனேபில் செய்யப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும்.

    - பழைய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாட் -- சாட் டிரான்ஸ்ஃபர் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

    - புதிய ஸ்மார்ட்போன் மூலம், பழைய ஸ்மார்ட்போனின் திரையில் காணப்படும் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இனி சாட்-களை தேர்வு செய்து அனுப்பலாம்.

    - டிரான்ஸ்பர் ஆக வேண்டிய புதிய ஸ்மார்ட்போனில் தகவல்களை பெறுவதற்கு Accept ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி சாட் டிரான்ஸ்பர் முடிக்கப்பட்டு விடும்.

    இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாட் டிரான்ஸ்பர் வசதி இரு சாதனங்களிடையே நடைபெறுகிறது. சாட் டிரான்ஸ்பின் போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிக ஃபைல் சைஸ் கொண்ட தரவுகளை அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    • இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 839 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 17 விலையில் சோட்டா ஹீரோ பேக் சலுகைகளை அறிவித்த நிலையில், தற்போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் புதிய சலுகை வி செயலியில் இருந்து ரிசார்ஜ் செய்யும் வகையில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் இதனை வலைதளம் மற்றும் இதர செயலிகளில் ரிசார்ஜ் செய்ய முடியாது.

    பலன்கள்:

    வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் மேலும் சில பலன்களும் வழங்கப்படுகிறது.

    அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாத டேட்டாவினை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் பிரீமியம் சந்தா இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2ஜிபி வரையிலான டேட்டா பேக்கப் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த சலுகை வி வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது.

    • இயர்படஸ் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.
    • ரியல்மி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும்.

    ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் இயர்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இயர்போனின் வெளியீட்டு தேதி, குறிப்பிட்ட சில அம்சங்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்தியாவில் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் மாடல் ஜூலை 6-ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரில் புதிய நெக்பேன்ட் இயர்போன் 13.6mm டைனமிக் பாஸ் டிரைவர்கள் மற்றும் 30db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    புதிய ரியல்மி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த வயர்லெஸ் நெக்பேன்ட் இயர்போன் ரியல்மி நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மியின் புதிய இயர்படஸ் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று டிப்ஸ்டரான சுதான்ஷூ அம்போர் தெரிவித்து இருக்கிறார். மேலும் அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் அறிமுகமாகும் நிகழ்விலேயே நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ 60 சீரிஸ் விலை ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று தெரிகிறது.

    • சாம்சங் ஒடிசி OLED G9 மானிட்டரில் மேம்பட்ட நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ உள்ளது.
    • இந்த மானிட்டரில் கோர்-சின்க் மற்றும் கோர் லைட்னிங் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    சாம்சங் இந்தியா நிறுவனம் ஒடிசி OLED G9 கேமிங் மானிட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேமிங் மானிட்டர் நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ கொண்டிருக்கிறது. 49-இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் சாம்சங் ஒடிசி OLED G9 கேமிங் மானிட்டரில் 1080R கர்வேச்சர், டூயல் குவாட் ஹை டெஃபனிஷன் (DQHD) 5120x1440 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது.

    இரண்டு QHD ஸ்கிரீன்களை அருகில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவதை போன்ற அனுபவத்தை இந்த மானிட்டர் கொடுக்கும். கேமர்கள் இந்த மானிட்டரில் 0.03ms கிரே-டு-கிரே ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 240Hz ரிப்ரெஷ் ரேட் பெறமுடியும். இந்த மெல்லிய மானிட்டர் அழகிய டிசைன் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கிறது.

     

    இத்துடன் கோர்சின்க் மற்றும் கோர் லைட்னிங் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இவை கேமிங்கின் போது அதிக தரமுள்ள கிராஃபிக்ஸ்-ஐ வெளிப்படுத்துவதோடு தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் பில்ட்-இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், காட்சிகளுக்கு ஏற்ற ஆடியோவையும் மானிட்டரிலேயே கேட்க முடியும்.

    சாம்சங் ஒடிசி OLED G9 மானிட்டரில் மேம்பட்ட நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ உள்ளது. இந்த சிப்செட் டீப் லெர்னிங் அல்காரிதம் கொண்டு புகைப்படங்களை சிறப்பாக மேம்படுத்தி, அசத்தலான காட்சிகளை காண்பிக்க செய்கிறது. இந்த மானிட்டர் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்ன்ட் மற்றும் தலைசிறந்த சினிமா தரத்தை வழங்குகிறது.

    இதில் உள்ள AMD FreeSync பிரீமியம் ப்ரோ கேம்பிளேவை மேம்படுத்தி சீரான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் டிஸ்ப்ளே-HDR ட்ரூ பிளாக் 400 தொழில்நுட்பம் பிரகாசமான நிறங்களை, அதிக தெளிவாக பிரதிபலிக்கிறது. இத்துடன் ஆட்டோ சோர்ஸ் ஸ்விட்ச் பிளஸ் அம்சம் கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் பயன்பாடுகளுக்கு ஏற்ப தானாக செட்டிங்களை மாற்றிக் கொள்கிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் ஒடிசி OLED G95SC மானிட்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்தத்து 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேமிங் மானிட்டர் விற்பனை சாம்சங் ஷாப், அமேசான் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
    • ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ரெனோ 10 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிசில், ஒப்போ ரெனோ 10, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்று இருந்தன.

    இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று டீசரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

     

    பிரபல டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒப்போ ரெனோ 10 5ஜி மாடல் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்றும், ரெனோ 10 ப்ரோ விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் விலை ரூ. 50 ஆயிரத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ நிறுவன வலைதளங்களில் புதிய ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு தேதி அப்டேட் செய்யப்படவில்லை. எனினும், இவை ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் இந்திய வேரியன்டில் 64MP டெலிபோட்டோ போர்டிரெயிட் கேமரா, OIS, 50MP சோனி IMX890 சென்சார், OIS, 8MP சோனி IMX355 வைடு ஆங்கில் கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மற்ற மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ×