என் மலர்
நீங்கள் தேடியது "ஹாலிவுட்"
- இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன.
- 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது.
ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட சீரீஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.
இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதன் 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கடைசி பாகத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ இணைந்துள்ளார். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தலத்தில் ரொனால்டோ இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்தில் ரொனால்டோ முக்கியபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. எனவே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ரசிகர்கள், ரொனால்டோ ரசிகர்கள் என இருவர் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
- அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
டைட்டானிக் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் காம்ரூன்.
தனது படங்களில் பிரமாண்டத்திற்காக அறியப்படும் கேமரூன் 2009 இல் ஒரு படத்தை இயக்கி வெளியிடுகிறார். அதுதான் 'அவதார்'.
ஒரு திரைப்படத்தில் இவ்வளவு பிரமாண்டத்தை அதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்ற அளவுக்கு அவ்வளவு நுட்பமான காட்சி அமைப்புகள், நவீன VFXகள் என அப்படம் அமைந்தது.
2154 ஆம் ஆண்டில் பண்டோரா எனும் கிரகத்தில் வசிக்கும் நவி இன மக்களைப் பற்றி ஆராய சென்று அவர்களில் ஒருவனாக மாறும் ஹீரோ ஜேக் சல்லி, அவர்களுக்காக தனது சொந்த மனித இனத்தையே எதிர்த்து போராடுவதாக படம் அமைந்திருந்தது.நெய்த்திரி என்ற நவி பெண்ணின் மீதான ஜேக் சல்லியின் காதலே இப்படத்தை நகர்த்தும் அச்சாணி.

இப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியானது.
இது முதல் பாகம் அளவு கொண்டாடப்படவில்லை எனினும் முதலாமதை போலவே அதன் பிரமாண்ட காட்சிகளுக்காக போற்றப்பட்டது.
இந்நிலையில் அவதார் சீரிஸ் உடைய கடைசி பாகமான ஃபயர் அண்ட் ஆஷ் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி உள்ளது.
கதை:
முதல் பாகத்தில் காடு, இரண்டாம் பாகத்தில் கடல் என நம்மை வியக்க வைத்த கேமரூன், இந்த மூன்றாம் பாகத்தில் பண்டோரா கிரகத்தின் எரிமலைப் பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அங்கு வசிக்கும் 'மாங்குவான்' எனப்படும் புதிய நவி இன மக்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் மற்ற நவி இனத்தவரைப் போல அமைதியானவர்கள் அல்ல.
மாறாக வன்முறையும், பொறாமையும் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இவர்களே சாம்பல் மக்கள் (Ash people) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தலைவி வராங் இந்த பாகத்தின் முக்கிய வில்லி ஆவார்.
இந்த பாகத்தில், ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி தங்கள் குழந்தைகளைக் காக்கவும், மனிதர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மீண்டும் போராடுகிறார்கள்.

இவர்களுக்கு எதிராக மனிதர்களும், சாம்பல் மக்களும் கைகோர்ப்பது ஜேக்கின் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக அமைகிறது.
இந்த சவாலை அவர்கள் முறியடித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஒரு மணி நேரம் கதை நகராமல் மிகவும் மெதுவாகச் செல்வது பலவீனமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.

காட்சி அமைப்பு:
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் VFX மற்றும் 3D தொழில்நுட்பம்தான். ஒவ்வொரு காட்சியும் மெனக்கிட்டு செதுக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
மலைக்க வைக்கும் அளவு, 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், வழக்கமான கதைக்களத்தை வடிகட்டிய எடுத்த அவதார் 3, அதன் காட்சி பிரமாண்டத்திற்காக மட்டுமே வொர்த் என்று கூறமுடியும். இந்தப் படத்தை பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே அதன் முழுமையான அனுபவத்தைப் பெற முடியும்.

நடிகர்கள்:
ஹீரோ ஜேக் சல்லியாக சாம் வொர்திங்டன் தந்தையாகவும், தலைவனாகவும் முதல் 2 பாகத்தை விட முதிர்ச்சி காட்டி உள்ளார். நெய்த்திரியாக நடித்த ஜோ சால்டனா அன்பிலும் ஆக்ஷனிலும் சமமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.
நெருப்பு உலகத்தின் சாம்பல் மனிதர்களின் தலைவியாக வரும் வில்லி வராங் கதாபாத்திரத்தில் ஷ்பானிஷ் நடிகை ஊனா சாப்ளின் சொல்லி அடித்திருக்கிறார். அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
பின்னணி இசை:
இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்த சைமன் ஃப்ரான்ங்க்லென் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
சாம்பல் இன மக்கள் வரும் காட்சிகளில், ஆக்ஷன் காட்சிகளில் வரும் இசை ஈர்க்கிறது. குடும்ப சென்டிமென்ட்டிலும் இசையை பிழிந்திருக்கிறார் சைமன்!
ஒட்டுமொத்தமாக அவதார் 3 ஒரு அருமையான காட்சி அனுபவம், கணிக்கக்கூடிய கதை அனுபவம். மொத்தத்தில் அவதார் 3 அறிவை விட புலன்களுக்கு ஒரு விருந்து.
மாலைமலர் ரேட்டிங் : 3 / 5
- 79 வயதாகும் ஸ்பீல்பெர்க் 'டிஸ்க்ளோஷர் டே படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது சாத்தியமற்றது.
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சைன்ஸ் பிக்ஷன் புனைகதை பக்கம் திரும்பியுள்ளார்.
1982 இல் இவர் வேற்றுகிரகவாசி பற்றி இயக்கிய "E.T. தி எக்ஸ்டரா டெரஸ்ட்டியல்- " படம் உலகப் பிரசித்தம். தொடர்ந்து ஜுராசிக் பார்க் உட்பட பல்வேறு ஜானர்களில் பல கிளாசிக் படங்களை இயக்கினார் ஸ்பீல்பெர்க்.
79 வயதாகும் ஸ்பீல்பெர்க் தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' என்ற வேற்றுகிரகவாசிகள் பற்றிய சைன்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.
ஜோஷ் ஓ'கானர், எமிலி பிளண்ட், கோல்மன் டொமிங்கோ மற்றும் வயட் ரஸ்ஸல் போன்ற பிரபல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
"இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது" என்று முன்பு ஒருமுறை ஸ்பீல்பெர்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஜூன் 12, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
- பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
- பைசன் படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், 'பைசன்' திரைப்படத்தில் நடித்ததற்காக, துருவ் விக்ரம் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், நடிகைகள் கிருத்தி சனோன், ருக்மிணி வசந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் துருவ் விக்ரமும் இடம்பிடித்துள்ளார்.
- இந்தியில் இவர் மாஸ் ஆக்க்ஷன் ஹீரோவாக கமாண்டோ 1,2,3 என பல படங்களில் நடித்துள்ளார்.
- கடைசியாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு நிகராக ரசிகர்களை ஈர்த்தவர் அப்படத்தில் வில்லனான நடித்த வித்யுத் ஜாம்வால்.
தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், கடைசியாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.
ஆனால் இந்தியில் இவர் மாஸ் ஆக்க்ஷன் ஹீரோவாக கமாண்டோ 1,2,3 என பல படங்களில் நடித்துள்ளார். உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான உடல், தற்காப்பு கலை உள்ளிட்டவத்திற்கு விதியுத் பெயர் பெற்றவர்.
இந்நிலையில் விதியுத் பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். "ஸ்டிரீட் ஃபைட்டர்" எனும் புதிய படத்தில் தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
அவரின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. ஸ்டிரீட் ஃபைட்டர் என்பது ஹாலிவுட்டில் பிரபல திரைப்பட சீரீஸ் ஆகும்.
2026 வெளியாக உள்ள இந்த படத்தில் வித்யுத் உடன் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் "அகுமா" எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
- தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார்.
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.
16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு அறிவித்தார்.
இந்நிலையில், தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார். இதன்மூலம் 90's கிட்ஸின் Hero ஜான் சீனா தோல்வியுடன் WWE மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
- உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
- இந்தாண்டு அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டு உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆண்டாக அமைந்தது. உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. சீனா, தென் கொரியாவை சேர்ந்த படங்களும் உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகின்றன.
லைவ் ஆக்சன் படங்களை விட சமகாலத்தில் அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன. இந்தாண்டும் அதிக வசூலித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை அனிமேஷன் திரைப்படம் தான் பிடித்துள்ளது.
அவ்வகையில் இந்தாண்டு உலக அளவில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியலில் இந்த ரீவைண்டில் பார்ப்போம்.

1. Ne Zha 2
சீன அனிமேஷன் திரைப்படமான Ne Zha 2 திரைப்படம் உலக அளவில் ரூ.19,750 கோடி வசூலித்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹாலிவுட் படங்களே எப்போதும் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நிலையில் அந்த இடத்தை Ne Zha 2 இந்தாண்டு தட்டி பறித்துள்ளது.

2. Lilo & Stitch
2002 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷனை திரைப்படமான Lilo & Stitch மாபெரும் வெற்றியை பெற்றது. அதனால் இப்படத்தை தற்கால தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி லைவ் ஆக்சன் படமாக டிஸ்னி வெளியிட்டது. இப்படம் உலக அளவில் ரூ.9,350 கோடி வசூல் குவித்து இப்பட்டியலில் 2 ஆம் பிடித்துள்ளது.

3. A Minecraft Movie
உலக புகழ்பெற்ற Minecraft என்ற வீடியோ கேமை மையமாக கொண்டு A Minecraft Movie படம் உருவாக்கப்பட்டது. இப்படம் வீடியோ கேமிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உலக அளவில் ரூ.8,600 கோடி வசூலை ஈட்டி இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

4. Jurassic World: Rebirth
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ' ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
டைனோசர் படங்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது. உலக அளவில் இப்படம் ரூ.7,800 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்துள்ளது.
5. How to Train Your Dragon
How to Train Your Dragon என்ற அனிமேஷன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் லைவ் ஆக்சன் திரைப்படம் இந்தாண்டு வெளியானது. அனிமேஷனை படத்தை போலவே இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.5690 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.

6. F1: The Movie
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார். இப்படம் இந்தாண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் F1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
உலக அளவில் இப்படம் ரூ.5580 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

7. Superman
ஹென்றி கேவில் நடித்த சூப்பர்மேன் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தாண்டு ரீபூட் செய்யப்பட்ட புதிய சூப்பர்மேன் படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. உலக அளவில் இப்படம் ரூ.5525 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 7 ஆம் இடம் பிடித்துள்ளது.

8. Mission: Impossible – The Final Reckoning
Mission: Impossible படங்களின் கடைசி பாகம் என்ற எதிர்பார்ப்போடு The Final Reckoning படம் வெளியானது. டாக் குரூஸ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட உலக அளவில் இப்படம் ரூ.5360 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.

9. The Fantastic Four: First Steps
வழக்கமாக டிசி படங்களை விட மார்வெல் படங்கள் அதிக வசூலை ஈட்டும் நிலையில், இந்தாண்டு மாற்வல் படங்கள் வசூலில் சற்று சறுக்கியது. மார்வெல் தயாரிப்பில் வெளியான The Fantastic Four: First Steps படம் நல்ல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.4650 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.
10. Captain America: Brave New World
இப்பட்டியலில் கடைசி இடத்தை Captain America: Brave New World படம் பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. உலக அளவில் இப்படம் ரூ.3725 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.
- மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும்.
- உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்கின்றன.
மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும். அந்த நகரம் தான் 'ஜூடோபியா'
2016இல் வெளியான முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு காவல்துறை வேளையில் சேர முயல் குடும்பத்தை சேர்ந்த ஜூடி ஹாப்ஸ் செல்கிறாள்.
அங்கு ஒரு திருட்டு நரி (நிக் வைல்ட்) உதவியுடன் ஒரு வழக்கின் மர்மங்களை ஜூடி ஹாப்ஸ் கண்டுபிடிப்பதே கதை. இறுதியில் நிக் வைல்டும் காவல் அதிகாரி ஆகிவிடுகிறான்.
இந்நிலையில் 'ஜூடோபியா 2' படத்தின் கதை முதல் பாகத்திலிருந்து தொடர்கிறது. காவல் துறையில் பார்ட்னர்களாக இருந்து வரும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது.
ஜூடி ஒரு பாம்பு ஜூடோபியாவில் ஊடுருவியதாக சந்தேகிக்கிறாள். ஜூடோபியா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பாம்புகள் அங்கு வந்தது என அவள் கூறியதை யாரும் நம்பவில்லை.
ஆனால் ஜூடி நிக்கை சம்மதிக்க வைத்து அவனுடன் சேர்ந்த இதுகுறித்து விசாரணையை தொடங்குகிறாள்.
இதற்கிடையில், ஜூடோபியாவின் நிறுவனர்களான லிங்க்ஸ்லி என்ற சிங்கக் குடும்பம் ஒரு விருந்து வைக்கிறது. இந்த விருந்தின்போது ஒரு திருட்டு நடக்கிறது. பாம்பு ஏன் ஊருக்குள் வந்தது, அதற்கும் இந்த திருட்டுக்கும் என்ன தொடர்பு, ஜூடியும், நிக்கும் ஒற்றுமையாக இந்த மர்மத்தை அவிழ்த்தார்களா என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்: படம் அனிமேஷன் என்பதால் டப்பிங் கலைஞர்கள் கையில் தான் கதாபாத்திரங்களின் உயிர் உள்ளது. மேலும் முதல் படத்தை போல காமெடி வசனங்கள், சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.
இயக்கம்: அனிமேஷன் காட்சியமைப்புகள் ஜூட்டோபியாவுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.கதை மீதான பார்வையாளரின் நம்பிக்கையை நிறுவுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமர்க்களப்படுகிறது.
நகரில் மனிதர்களை போல வெவ்வேறு பணிகளை செய்யும் வெவ்வேறு விலங்குகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்வது அங்கு கள எதார்த்தம் போலும். மேலும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை வைத்து நகைச்சுவை, சமூக கட்டமைப்பு, வர்க்க பேதங்கள் என அசல் நவநாகரீக மனித நகரங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்.
நிக், ஜூடி இடையே ஏற்படும் சச்சரவுகள், சண்டை என இருந்தாலும், இருவருக்கும் உள்ள கெமிஸ்ரிக்கு 100 மார்க் கொடுக்கலாம்.
மொத்தத்தில் கத்தி, துப்பாக்கி, சிவப்பு பெயிண்ட் (ரத்தம்) என கண்களை புண்ணாக்கும் படங்களுக்கு மத்தியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்ல ஏதுவான டிசம்பர் ட்ரீட் இந்த 'ஜூடோபியா 2'
மாலைமலர் ரேட்டிங் : 3.5 / 5
- இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் நடக்கிறது.
- துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது.
2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பின்லாந்து திரைப்படம் "SISU". இப்படம் இரண்டாம் உலகப் போரில் முடியும் தருவாயில் 1944 காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். பின்லாந்தில் வாழும் முன்னாள் கமாண்டோ அட்டாமி கோர்பி பின்லாந்தின் வடக்கு சமவெளியில் தனியே தோண்டுதல் பணி நடத்தி தங்கத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லும்போது ஹிட்லரின் நாஜி படை அதிகாரிகள் அவரின் தங்கத்தை பரித்துச் செல்கின்றனர்.
அட்டாமி கோர்பி அவர்களை துரத்திச் சென்று தனது தங்கத்தை மீட்பதே கதை. சாதராண முதியவர் என்ற பிம்பத்துக்கு பின்னால் அட்டாமி கோர்பியின் மிகவும் ஆக்ரோஷமான முன்னாள் கமாண்டோ என்ற பிம்பம் வெளிப்படும். இதுவே படத்தின் உயிர்நாடி. அட்டாமி கோர்பியை, "SISU"என்ற பின்னாலாந்தின் அர்பேன் லெஜண்ட் ஆக அவ்வூர் மக்கள் கருதுவார்கள். படம் முழு அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த பிம்பத்தோடு அவர் எதிர்கொள்ளப் போகும் புதிய சவால் என்ன?. அதுவே தற்போது வெளியாகி உள்ள 'SISU - தி ரோட் டு ரிவெஞ்ச்' என்ற இரண்டாம் பாகம்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் SISU இரண்டாம் பாக கதை நகர்கிறது. இரண்டாம் உலகப் போரில் தனது குடும்பத்தை இழந்த பிறகு, அட்டாமி கோர்பி அவர்களுடன் வாழ்ந்த மர வீட்டை பிரித்து மூட்டை கட்டி அமைதியான ஒரு இடத்தில் வீட்டை மீண்டும் உருவாக்கி வாழலாம் என புறப்படுகிறார். இதன்போது அவர் சோவியத் யூனியன் எல்லைக்குள் நுழையவே இதை அறிந்த சோவியத் யூனியனின் செம்படைத் தலைவர் இகோர் அட்டாமியைக் கொல்ல தனது படைகளுடன் செல்கிறார்.
அவர்களே தனது குடும்பத்தை கொன்றவர்கள் எனவும் அட்டாமி கோர்பி அறிகிறார். அவர்களிடம் இருந்து தான் பெரிதாக கருதும் வீட்டின் மர பாகங்களை எப்படி அட்டாமி காற்றினார், தனது குடும்பத்துக்காக அவர்களை பழிவாங்கினாரா, அமைதியாக இடத்தில் மீண்டும் வீட்டை கட்டும் தனது கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் மீதிக் கதை.

இயக்கம்:
இந்த முழு படத்திலும் பத்து பக்க வசனங்கள் கூட இல்லை. படம் முழுவதும் ஆக்ஷனால் நிரம்பியுள்ளது. துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது. எனவே ஆக்ஷன் ரசிகர்களுக்கு படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது.
முதல் பாகத்தை போலவே மிகவும் ஆக்ரோஷமான காட்சிகளுடன் படம் நகர்கிறது. இருப்பினும் காட்சிகளிலும் கதையிலும் முதல் பாகத்தில் இருந்த வலு குறைந்துள்ளதாக தெரிகிறது. முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாதபோது வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் அவ்வாறு தோன்றலாம்.
நடிகர்கள்:
அட்டாமி கோர்பி கதாபாத்திரத்தில் பின்லாந்து நடிகர் ஜோர்ம டோம்மிலா நடித்துள்ளார். படம் முழுவதும் அவர் பேசாமல், தனது முதிர்ந்த மற்றும் ஆக்ரோஷமான உடல் மொழியால் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார்.
சோவியத் செம்படைகளின் தலைவராக இகோர் கதாபாத்திரத்தில் ஜாக் டூல்டன் நடித்துள்ளார். அட்டாமி கோர்பியை மையமாக வைத்தே கதை நகர்வதால் மற்ற பாத்திரங்கள் பெரிதும் வெளித்தெரியவில்லை.

ஒளிப்பதிவு:
படத்தின் ஒளிப்பதிவை மிகா ஒராசமா கையாண்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அடர்ந்த காடுகளின் பின்னணியில் நடக்கும் கதையை நம்பும்படியாக படம்பிடித்துள்ளார்.
சண்டைக் காட்சிகளுக்கு ஒராசமாவின் மெனக்கிடல் படத்தில் பிரதிபலிக்கிறது. அதிகப்படியான ரத்தம் மற்றும் கிராஃபிக் வன்முறை காட்சிகளை காத்திரம் குறையாமல் காட்டியிருக்கிறார்.
பின்னணி இசை
அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேசாததால், கதைப் பின்னணியின் தீவிரத்தையும், அவரது உணர்ச்சியையும் பார்வையாளருக்கு யாரிட் கிளிஞ்சர் உடைய அழுத்தமான பின்னணி இசை வெற்றிகரமாக கடத்தியுள்ளது.
ரேட்டிங் : 3.5 / 5
- காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது.
- வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.
வளிமண்டலத்தில் ப்ரிடேட்டர் இனத்திற்கென்று தனியான ஒரு கிரகம் இருக்கிறது. இந்தக் கிரகத்தின் பெயர் யாட்ஜா பிரைம். இதில் வசிக்கும் ப்ரிடேட்டர்கள் யாட்ஜா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
யாட்ஜா என்றால் பலசாலியாகவும், கருணையே அற்ற வேட்டைக்காரனாகவும் இருக்க வேண்டும். ஆனால், கதையின் நாயகனான யாட்ஜா இனத்தைச் சேர்ந்த டெக், மற்ற யாட்ஜா-களை விட பலவீனமாக இருக்கிறான். இதனால் டெக்கை வெறுக்கும் அவனது தந்தை, அவனைக் கொல்ல உத்தரவிடுகிறார். ஆனால், டெக்கின் அண்ணன், தன் தம்பிக்குத் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவனைக் கொல்ல மறுக்கிறான்.
தந்தையே டெக்கைக் கொல்ல முயலும்போது, அண்ணன் தம்பியைப் பாதுகாக்கும் முயற்சியில் தந்தையின் கையால் இறக்கிறான். இறப்பதற்கு முன், தம்பி டெக்கை ஒரு விண்கலத்தில் ஏற்றி கென்னா என்ற கிரகத்திற்கு அனுப்பி வைக்கிறான். கென்னா கிரகத்தில் யாராலும் அழிக்க முடியாத காலிஸ்க் என்ற மிருகம் உள்ளது. அதைக் கொன்று வேட்டையாடினால், தன்னைத் தனது கிரகத்தில் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் டெக், அந்தக் காலிஸ்க்கைத் தேடிப் பல வினோத உயிரினங்கள் உள்ள அந்தக் கிரகத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறான்.
வழியில், பூமியிலிருந்து அந்தக் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட தியா என்ற மனித வடிவிலான ரோபோவை டெக் சந்திக்கிறான். தியா ஏற்கனவே காலிஸுடன் சண்டையிட்டு தனது உடலின் ஒரு பாதியை இழந்தவள். எனவே, காலிஸ் இருக்கும் இடத்தைத் தான் காட்டுவதாக டெக்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து பயணத்தைத் தொடர்கிறாள்.
இதற்கிடையே, காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது. டெக், தியா காலிஸைக் கண்டுபிடித்தார்களா? இறுதியில் காலிஸ் வேட்டையாடப்பட்டதா? என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்:
டெக் கதாபாத்திரத்தில் டிமிட்ரியஸ் ஷுஸ்டர்-கோலோமதாங்கி மற்றும் தியா கதாபாத்திரத்தில் எல்லே பன்னிங் சிறப்பாக நடித்துள்ளனர். படம் முழுவதும் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், டெக் கதாபாத்திரத்திற்கு டிமிட்ரியஸ் ஷுஸ்டர் நியாயம் செய்திருக்கிறார். நகைச்சுவை உணர்வு கொண்ட தியா கதாபாத்திரத்திற்கு எல்லே பன்னிங் வலு சேர்த்துள்ளார். அதிக ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படத்தில், இருவரின் கெமிஸ்ட்ரி காண்போருக்கு இதமளிக்கிறது.
இயக்கம்:
மனிதனே அல்லாத, அதிக CGI உடன் வேற்றுகிரகவாசிகள், மிருகங்கள், ரோபோக்கள் என நகரும் படத்தில், குடும்ப உறவு, அண்ணன் தம்பி பாசம், நட்பு, விரோதம், பலவீனம், நிராகரிப்பு போன்ற உணர்ச்சிகளை இயக்குநர் டான் ட்ராக்டென்பெர்க் தொட்டுக் காட்டி இருக்கிறார். முந்தைய படங்களில் வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.
காட்சிகள் - ஒளிப்பதிவு:
கென்னா கிரகம் மிக பிரம்மாண்டமாக CGI வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டெக் - தியா தங்கள் சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் டிராகன்கள், யானை போன்ற மிருகங்கள், விசித்திரத் தாவரங்கள் சுவாரஸ்யமூட்டுகின்றன. டெக் மற்றும் காலிஸ்க் இடையே நடக்கும் சண்டை மிரட்டலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொருந்தக்கூடிய பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
மொத்தத்தில், ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் சாகசப் படமாக, அதிரடிகளுடன் கூடிய த்ரில்லிங் அனுபவத்தை 'ப்ரிடேட்டர்: பேட்லேன்ட்ஸ்' அளிக்கிறது.
ரேட்டிங்: 3.5/5
- அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
- டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் நட்சத்திர ஜோடியாக வளம் வந்தனர்.
ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது.
அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூட வதந்தி பரவியது. ஆனால் மாறாக இருவரும் பிரிந்துவிட்டதாக அமெரிக்க ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இருவருக்கும் இடையிலான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த உறவு எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடிக்காது என்று உணர்ந்த இருவரும், இணக்கமாகப் பிரிவது நல்லது என்று முடிவு செய்துள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயது வித்தியாசம் காரணமாக அவர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

- அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் பிரசித்தி பெற்றது.
- பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.
WWE முன்னாள் மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமானவர் "The Rock" என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் (53 வயது). அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் வகுக்காவே பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிந்தன.
இந்நிலையில் அண்மையில் ராக் பொதுவெளியில் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். அவரின் பிரதான அடையாளமான அவரது ஆஜானுபாகுவான உடல் தோற்றம் குன்றி ஒல்லியாக அவர் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார்கள். அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை உள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என சமூக ஊடகங்களில் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும், இது அவரது வரவிருக்கும் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக இருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சிலரோ, வயதானால் அப்படிதான் என ஆறுதல்பட்டுக்கொள்கின்றனர்.
பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது. இது Mark Kerr என்ற பிரபல பாக்சிங் சாபியனின் வாழக்கை வரலாற்று படமாகும். இந்த படத்திற்காகவே ராக் தனது உடல் எடையில் 27 கிலோ குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.






