search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சீட்டு முறை"

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    நிஜாமாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 200க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை முடிந்து மனுக்களை வாபஸ் பெறுவது நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 185 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு அதிக அளவிலான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.



    இந்த தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மது யாஷ்கி கவுடா, பாஜக சார்பில் தர்மபுரி அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இதற்கு முன்பு 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, நல்கொண்டா மாவட்டத்தில் புளோரைடால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, 480 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.

    ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும். ஒரு கண்ட்ரோல் யூனிட்டுடன் 4 இயந்திரங்களை இணைக்கலாம். எனவே நோட்டாவுடன் சேர்த்து 64 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் குளறுபடி சர்ச்சையை அடுத்து 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். #Mayawati #ParliamentElection #BallotPapers
    லக்னோ:

    கடந்த 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டினார்.

    மேலும், உ.பி., குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்தது. ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசையை பா.ஜ.க. பயன்படுத்தி, வாக்கு பதிவு இயந்திரங்களுக்குள் ஊடுருவி இந்த தில்லுமுல்லுவை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

    ஏற்கனவே, வாக்கு பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.



    இதற்கிடையே, சையது சுஜாவின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம், இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜனநாயகத்தின் நலனை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும். பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் முடியாது என்றால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தலாம். வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Mayawati #ParliamentElection #BallotPapers
    தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    புதுடெல்லி:

    கடந்த 1-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட சுனில் அரோரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 1.76 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் மிக குறைந்த அளவு (ஒரு சதவீதத்துக்கும் குறைவான) எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை. எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எந்திரங்கள் சேதப்படுத்தப்படுவது வேறு, கோளாறு ஏற்படுவது வேறு. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவி தான். அது கம்ப்யூட்டர் போல திட்டமிடப்பட்டதோ, பண்பட்டதோ அல்ல.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தேர்தல் முடிவு வந்தது. அடுத்து அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட முடிவு வந்தது. சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் இப்போது ஒரு முடிவும், அங்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் களில் ஒரு முடிவும் வந்தது.

    ஒருவேளை தேர்தல் முடிவு ‘எக்ஸ்’ என்று வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறை கூறுவதில்லை. அதே முடிவு ‘ஒய்’ என்று வந்தால் மின்னணு எந்திரங்களில் கோளாறு என்கிறார்கள். தேர்தல் கமிஷனையோ, அதன் பாரபட்சமற்ற நடவடிக்கையையோ தேர்தலில் முக்கிய பங்கேற்பாளர்கள் என்ற முறையில் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கின்றன. அது அவர்களது உரிமை.

    ஆனால் மின்னணு எந்திரங்களை கால் பந்தாட்டத்தில் ‘டாஸ்’ போடுவதுபோல பயன்படுத்துவது எங்களை காயப்படுத்துகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் தான் முக்கிய பங்கேற்பாளர்கள். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது. இப்போதுள்ள நடை முறையே தொடரும்.

    அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது பற்றி நாங்கள் அறிவோம். அதற்கான அலுவலக ரீதியான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாட்கள் முன்பு தொடங்கிவிட்டது. அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கவனத்துடன் தயாரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

    முக்கிய நிகழ்வான நாடாளுமன்ற பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது நம்பிக்கையை இழந்துள்ள இந்தியாவின் 70 சதவீதம் அரசியல் கட்சிகள் இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வலியுறுத்தியுள்ளன. #ECtorevertballot #ballotpapervoting
    புதுடெல்லி:

    விரைவில் சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்திருந்தது.

    டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர சுமார் 70 சதவீதம் கட்சிகளின் பிரதிநிதிகள் இனிவரும் தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக பழைய வாக்குச்சீட்டு முறையையே பின்பற்றுமாறு வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் வகையில் நாட்டில் உள்ள 30 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களுடன் வாக்குச்சீட்டு முறையும் வைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், தற்போது சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகைக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் மாநில வாக்களர் பட்டியலில் 60 லட்சம் போலி வாக்காளர்களும், ராஜஸ்தானில் 45 லட்சம் போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை நாங்கள் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றோம் என்று அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், 'கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக பரிசீலிப்போம். அவர்களுக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்கும்’ என கூறினார். #ECtorevertballot  #ballotpapervoting 
    பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு அ.தி.மு.க. வரவேற்பதாக கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #ParliamentElection
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கரூர் மாவட்டம் நெரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் வழக்கை விசாரித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறந்த அதிகாரி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சிலை கடத்தல் என்பது தமிழகம் மற்றும் அண்டை மாநிலம் மட்டும் அல்லாமல் வெளி நாடுகளிலும் விரிந்து கிடக்கிறது. அதனால் இதனை விசாரித்து புலனாய்வு செய்ய மத்திய அரசு ஒத்துழைப்பு தேவைபடுகிறது. அதனால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது வாக்கு சீட்டு முறையை வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளில் வாக்கு சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்குச்சீட்டு முறையை அ.தி.மு.க வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர். #ADMK #ThambiDurai #ParliamentElection
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி உள்ளனர். #Parliamentelection
    புதுடெல்லி:

    தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்ற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



    நேற்று முன்தினம் கூட அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, டெல்லியில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக ஆதரவை திரட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த 17 எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

    இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டெரக் ஓபிரையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். மேலும் தேர்தல் கமிஷனிலும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்’ என்று கூறினார்.

    வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவளிக்குமாறு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவிடமும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். அந்த கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரேயும் வாக்குச்சீட்டு முறைக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Parliamentelection
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் காகித பயன்பாடு குறைவதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தல் உள்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் வரை நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.



    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    ×