search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சீட்டு முறையை அ.தி.மு.க. வரவேற்கிறது- கரூரில் தம்பித்துரை பேட்டி
    X

    வாக்குச்சீட்டு முறையை அ.தி.மு.க. வரவேற்கிறது- கரூரில் தம்பித்துரை பேட்டி

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு அ.தி.மு.க. வரவேற்பதாக கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #ParliamentElection
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கரூர் மாவட்டம் நெரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் வழக்கை விசாரித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறந்த அதிகாரி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சிலை கடத்தல் என்பது தமிழகம் மற்றும் அண்டை மாநிலம் மட்டும் அல்லாமல் வெளி நாடுகளிலும் விரிந்து கிடக்கிறது. அதனால் இதனை விசாரித்து புலனாய்வு செய்ய மத்திய அரசு ஒத்துழைப்பு தேவைபடுகிறது. அதனால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது வாக்கு சீட்டு முறையை வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளில் வாக்கு சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்குச்சீட்டு முறையை அ.தி.மு.க வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர். #ADMK #ThambiDurai #ParliamentElection
    Next Story
    ×