search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லை பெரியாறு"

    • முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம்.
    • இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    வேலூர்:

    "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.

    முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம். நாங்களும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.


    மேகதாது அணை விவகாரத்தில் இன்னும் ஆய்வு மேற்கொள்வது குறித்து கேட்டதற்க்கு, அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆய்வு பண்ணாலும் சரி படம் வரைந்தாலும் சரி, செய்து போட்டோ எடுத்து போட்டாலும் சரி, டி.பி.ஆர் தயாரிக்கும் ரிப்போர்ட்டுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் வேண்டும், இரண்டாவது மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் ஒத்துக் கொள்ளும் வரை அது நடக்காது.

    வெள்ள பாதிப்பில் இன்னும் நிதி வரவில்லை கேட்டிருக்கிறோம்.


    "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தை இப்பதான் தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கோம் அதுக்குள்ள குழந்தையை பற்றி கேட்டால் எப்படி தெரியும். எங்களிடம் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் தந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

    இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் விலகியது ஒரு திருவிளையாடல் தான். இது மாதிரி திடீர் திடீர் செய்திகள் வரும் இதெல்லாம் எதிர்பார்த்துதான் கூட்டணி அமைக்கிறோம். எதிர்பார்த்துதான் தேர்தலை சந்திக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல. எங்களுக்கு இது பழசு தான்.

    தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தையை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மட்டும் தான் தற்போதைக்கு பேசிவிட்டு செல்கின்றார்கள்.

    சோசியல் மீடியாவில் தவறாக பரவும் தகவலை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் நிலைபாடு மாறிக்கொண்டே இருக்கும். என்றைக்கோ பேசியதை இன்றைக்கு பரப்பக்கூடியது என்பது ஆண்மை இல்லாத தனம்.

    இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு வருவார்கள் போவார்கள் கூட்டணி இறுதி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.
    • புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.

    126 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் அதிகபட்ச நீர்மட்ட விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அணையின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் அது தொடர்பாக அம்சங்கள் தொடர்பாக இரு மாநிலங்களும் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதுள்ள அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவில் பிரசாரம் செய்யப்பட்டது. இதையடுத்து முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது. இந்த அறிக்கை மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணையை கட்டுவதற்காக வடிவமைப்பை பொறியியல் வல்லுனர்கள் சமீபத்தில் நிறைவு செய்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.

    அதன்பிறகு மத்திய நீர் ஆணையம் புதிய அணை கட்டுவதற்கான தொடர் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. கடந்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டதை விட அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்காக மத்திய நீர் ஆணையத்தை கேரள மாநில அரசு கடந்த வாரம் அணுகியது. அப்போது புதிய அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க விரும்புவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    ×