search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நீதி மய்யம் கட்சி"

    • திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மணல் குவாரியை மூடவேண்டி வரும் நாட்களில் உத்தமர்சீலி அல்லது இடையாற்றுமங்கல கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்வது

    திருச்சி :

    திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில பொறியாளர் அணி செயலாளர் வைத்தீஸ்வரன், மாநில இணைச் செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லால்குடி, உத்தர்சீலி ஆற்றுமணல் ரீச்சை உடனடியாக தமிழக அரசு மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேற்படி மணல் குவாரியை மூடவேண்டி வரும் நாட்களில் உத்தமர்சீலி அல்லது இடையாற்றுமங்கல கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கல்ஹாசன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்வது தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் நாகவேல், பொருளாளர் கருப்பையா, மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன், லால்குடி ஒன்றிய செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமித்துள்ளார். அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் கவனிக்கும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

    முஷ்டாக் அலி (எ) பாபு- அம்பத்தூர், ஆவடி, எம்.லோகரங்கன்- திருத்தணி, திருவள்ளூர், டி.தேசிங்குராஜன்- கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, எஸ்.டி.மோகன்-மாதவரம், திருவொற்றியூர், எம்.அருணாச்சலம்- பூந்தமல்லி, மதுரவாயல்.

    பி.கே.மணிவண்ணன்- ஆலந்தூர், பல்லாவரம், டி. ஆர்.பாலச்சந்திரன்-செங்கல் பட்டு, தாம்பரம், ராமராஜேந்திரன்- செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், ஜி.சத்தியநாராயணன்- காட்பாடி, ஆற்காடு, வேலூர், எஸ்.சிவக்கொழுந்து- ஆம்பூர்.

    பி.ராஜா- கே.வி.குப்பம், குடியாத்தம், ஆர்.சுரேஷ்- அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, எச்.அப்துல்கரீம்- ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, எஸ்.சுரேஷ்-செய்யாறு, வந்தவாசி.

    எம்.நாகராஜன்- செங்கம், கலசப்பாக்கம், ஏ.ரஞ்சித்குமார்- ஆரணி, போளூர், ஆர்.அருள்- திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், பி.பாபு- விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.ஷாஜி- வானூர், திண்டிவனம்.

    ஆர்.ஸ்ரீபதி- செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், கே.கணேஷ்- சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, எஸ். சரவணன்- சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, டி.கே.மூர்த்தி- காட்டுமன்னார்கோவில், புவனகிரி, முகமதுரபீக்- திட்டக்குடி, விருத்தாசலம், டி.வெங்கடேசன்-நெய்வேலி, பண்ருட்டி, கடலூர்.

    ஆர்.ராஜா-காரைக்குடி, திருப்பத்தூர் (சிவங்கை மாவட்டம்), எம்.பெரியார் குணாஹாசன்- சிவகங்கை, மானாமதுரை, எம்.ஜி.ஜோதி அய்யப்பன்- ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பி.கணேஷ் குமார்- போடிநாயக்கனூர், கம்பம், ஜெ.காளிதாஸ்- திருச்சுழி, விருதுநகர்.

    எம்.பி.சீனிவாசகம்- சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், வி.ஜெய்சங்கர்- சாத்தூர், ராஜபாளையம், ஜெ.தேவராஜ்-பரமக்குடி, திருவாடானை, ஆர்.சோமநாத்- ராமநாதபுரம், முதுகுளத்தூர், முகம்மது அப்துர் ரஹீம்-ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்.

    ஆர்.சேகர்-ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, வி.ஸ்ரீ கருணாகர ராஜா- தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், எல்.செல்லப்பா- வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில், எஸ்.செந்தில் குமார்- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பி.சசி-கன்னியகுமாரி, நாகர்கோவில்.

    எம்.எஸ்.ஜேக்சன்- குளச்சல், கிள்ளியூர், ஜெ.நிர்மல் ஜோசப்- விளவங்கோடு, பத்மநாபுரம்.

    கே.முருகேஷ்-ஊத்தங்கரை, பர்கூர், வி.செல்வ மூர்த்தி- ஓசூர், தளி, ஜெ.சத்யநாராயணா- பாப்பிரெட்டிபட்டி, அரூர், ஏ.பாலமுருகன்-பாலக் கோடு, பென்னாகரம், தர்மபுரி, எஸ்.மணி- ராசிபுரம், சேந்தமங்கலம்.

    ஜெ.ஜெயபிரகாஷ்- நாமக்கல், பரமத்திவேலூர், கே.காமராஜ்- திருச்செங்கோடு, குமாரபாளையம், ஏ.சரவணகுமார்- பவானி சாகர், அந்தியூர், எம்.சிவகுமார்-பவானி, கோபிசெட்டி பாளையம், ஆனந்தம் எம்.ராஜேஷ்- ஈரோடு (கிழக்கு), மொடக் குறிச்சி.

    எஸ்.சுரேஷ்பாபு- உதகமண்டலம், கூடலூர், இ.ஷாஜகான்-குன்னூர், எம்.தாமரைக்கண்ணன்- சூலூர், சிங்காநல்லூர், எம்.பரமேஷ்வரன் (எ) தம்புராஜ்- கோவை (வடக்கு), கவுந்தம்பாளையம், மேட்டுப்பாளையம், டி.பிரபு- தொண்டாமுத்தூர், கோவை (தெற்கு), கிணத்துக்கடவு.

    எச்.செந்தாமரைக்கண்ணன்-பொள்ளாச்சி, வால்பாறை, எம்.நம்பிராஜ்- அரவக்குறிச்சி, குளித்தலை, எம்.புகழ்முருகன்- கிருஷ்ணராயபுரம், கரூர், வி.எம்.பிரசாத்குமார்-தாராபுரம், காங்கேயம், பி.வெங்கடேஷ்- பல்லடம், அவிநாசி.

    கே.ஜீவா- திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), ஏ.என்.சந்திரசேகர்- உடுமலைப்பேட்டை, மடத்துக் குளம்.

    எம்.முகமது ஜப்பார்- ஆத்தூர், (திண்டுக்கல்), வேடசந்தூர், இம்மான் ஹசன் (எ) இம்மான் ஜப்பார் சாதிக்- பழனி, ஒட்டன்சத்திரம், ஆர்.எம்.ராஜசேகர்- நத்தம், நிலக்கோட்டை, திண்டுக்கல், எப்.பி.ஷாஜ்குமார்- திருவெறும்பூர், லால்குடி.

    ஆர்.சாம்சன்-மணச்சநல்லூர், முசிறி, துறையூர், என்.சுரேஷ் - திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), எஸ். முத்துக்குமார்- பெரம்பலூர், குன்னம், சையது அனஸ் மொகிதின் சாதிக்- நாகப்பட்டினம், கீழவேலூர், வேதாரண்யம், ஜி.ஞானசம்பந்தம்- திருவாரூர், நன்னிலம்.

    கே.அருண் சிதம்பரம்- திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பி.சதாசிவம்- பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஓரத்தநாடு, பி.சுரேஷ்- கந்தவர்வகோட்டை, விராலிமலை, சி.எம்.ஆர்.கமல் சுதாகர்- புதுக்கோட்டை, திருமயம், எஸ்.மூர்த்தி- ஆலங்குடி, அறந்தாங்கி.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

    ×