search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனைக் கூட்டம்
    X

    திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனைக் கூட்டம்

    • திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மணல் குவாரியை மூடவேண்டி வரும் நாட்களில் உத்தமர்சீலி அல்லது இடையாற்றுமங்கல கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்வது

    திருச்சி :

    திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில பொறியாளர் அணி செயலாளர் வைத்தீஸ்வரன், மாநில இணைச் செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லால்குடி, உத்தர்சீலி ஆற்றுமணல் ரீச்சை உடனடியாக தமிழக அரசு மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேற்படி மணல் குவாரியை மூடவேண்டி வரும் நாட்களில் உத்தமர்சீலி அல்லது இடையாற்றுமங்கல கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கல்ஹாசன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்வது தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் நாகவேல், பொருளாளர் கருப்பையா, மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன், லால்குடி ஒன்றிய செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×