search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து ஊழியர்கள்"

    • யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
    • ஊழியர்கள் மீது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணியாற்றிய மேலும் 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், 40 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

    கடந்த 14ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் நடவடிக்கையாக, மதுபோதையில் பணியாற்றிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது.
    • அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
    • தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மை தான். அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.

    ஆனால் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்துவிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

    ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும்.

    நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவு.
    • போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும்.

    அரசு போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதில், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 151 நாள் முதல் 199 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.195 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள், சாதனை ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

    மேலும், போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    • பயணிகள் உயிர் தப்பினர்
    • போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு பஸ் 20 பயணிகளுடன் கோவளம் நோக்கி புறப்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே திரும்பும் போது "திடீர்"என்று ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    உடனே பஸ்சில் இருந்த 20 பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பெரும் விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றினர். அதன்பிறகு பழுதடைந்து நின்ற பஸ்சை போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்

    • ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    தமிழக அரசின் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. இணைந்து, மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    மண்டல தலைவர் அழகர்சாமி முன்னிலை யில் நடந்த இந்த போராட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற- மரணமடைந்த ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் தர வேண்டும்.

    ஒப்பந்தப்படி ஓய்வூதி யத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும், வேலைநிறுத்தம் செய்த 21 நாட்களை முறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×