search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்
    X

    கன்னியாகுமரியில் மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்

    • பயணிகள் உயிர் தப்பினர்
    • போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு பஸ் 20 பயணிகளுடன் கோவளம் நோக்கி புறப்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே திரும்பும் போது "திடீர்"என்று ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    உடனே பஸ்சில் இருந்த 20 பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பெரும் விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றினர். அதன்பிறகு பழுதடைந்து நின்ற பஸ்சை போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்

    Next Story
    ×