search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய திட்டங்கள்"

    • புதிய திட்டங்கள் அறிவிப்புக்கு முதல்-அமைச்சருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
    • மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    தொண்டி

    கடந்த வாரம் ராமநாத புரத்தில் நடந்த மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டுப்போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் 33 படகு களின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொண்டி பகுதி மீனவர்கள் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் மதுரை உயர் நீதி மன்ற கிளையின் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் டாக்டர் சீனிராஜன், ராமேசுவம் வில்லாயுதம் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் பால் மாஸ் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார் ராமநாதபுரம் மலைச்சாமி, உப்பூர் துரைபாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோர பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்ல பயிற்சி அளிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுமையான ஹெர்போலிவ் முறை மூலமான பயிர் பாதுகாப்பு மற்றும் காட்டு விலங்கு மேலாண்மை, கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி ஆகிய 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    வேளாண் ஆளிள்ளா விமானம் (ட்ரோன் புராஐக்ட்) மூலம் வன விலங்கிடம் இருந்து பயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகளை புதுமையான ஹெர்போலிவ் என்னும் இயற்கை மருந்தினை ஆளிள்ளா விமானம் மூலம் தெளிப்பது மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை சார்ந்து இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்கள் புதிய முயற்சியாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டிடும் வகையில் புதிய தொழில் முனைவோர்களாக மாறி வருகின்றனர். உழவர் உற்பத்தியாளர் குழுவில் விவசாயிகள் இணைந்து சிறந்த முறையில் மதிப்பு கூட்டப்பொருள்கள் விற்பனை செய்வதன் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த புதிய 3 திட்டங்களுமே விவசாயிகளை சென்றடைய வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாகவும் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்லும் வகையில் பயிற்சி அளிக்கலாம்.

    இங்கு வருகை புரிந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுசேவை செய்யும் பழகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் தொழில் முனைவோர்களாக உருவாகிட வேண்டும்.

    இந்த புதிய முயற்சியை செயல்படுத்தவுள்ள விவசாயிகளுக்கும், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தாளவாடி வட்டம், கொங்கள்ளி கிராமத்தில் செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீ வனத்தை பயிரிட்டுள்ள விவசாயி மாதேஷ் என்பவரிடம் பசுந்தீவனம் குறித்து தொலைபேசி வீடியோ அழைப்பு மூலமாக கலந்துரையாடினார்.

    புதுமையான ஹெர்போலிவ் முறையில் தெளிக்கப்படும் வளர்ச்சி ஊக்கியின் வாசத்தின் காரணமாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், முள்ளம்பன்றிகள், காட்டு எருமைகள். மயில்கள், முயல், எலிகள், பறவைகள், அணில், குரங்குகள் மற்றும் கிளிகள் மூலம் விலங்குகளை அழிக்காமல் விளை பயிர்கள் சேதமடைவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

    பயிர்கள் நல்ல வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. பூச்சிகள் வராமல் தடுக்கிறது. பூஞ்சான்நோய்களை கட்டுப்படுத்தி நிலத்தின் சத்துக்களை அதிகப்படு த்துகிறது. மூலிகைகளை கொண்டு செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவனமானது வறட்சிகாலத்தில் கால்நடை விவசாயிகளுக்கு ஏற்றவகையில் இருக்கும்.

    இதனையடுத்து 4 விவசாயிகளுக்கு செறிவூட்ட ப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன தொகுப்பு களையும், சிறப்பாக களப்பணியாற்றிய 15 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் நிலைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர்.அழகேசன், திட்ட தலைவர்; சுதர்சன், கோபி ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம், தலைவர் திருவேங்கடசாமி, செயலாளர் வெங்கடேஷ், சரவணன் உள்பட விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
    • சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது. சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் பின்புறம் ஜின்னா சாலை முதல் இக்பால் சாலை வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலி, சோலார் மின் விளக்குகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்க இருக்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாமராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, செல்வராஜ், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.பாண்டியன், ஆலங்காயம் பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, அம்மா பேரவை சதீஷ்குமார், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் எம்.ஜி என்கின்ற ஜெய்சங்கர், ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற உறுப்பினர் சையத் சபியுல்லா, ரபீக் அஹமத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×