search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambareesh"

    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்வதாக நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார். #ActressSumalatha #Mandya
    மண்டியா :

    கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் மண்டியாவில் பிரசாரம் செய்த நடிகை சுமலதா பேசியதாவது:-

    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் குமாரசாமி பேசி வருகிறார். எங்கள் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் எத்தகைய தாக்குதலும் நடத்த தயாராக உள்ளனர்.

    மேலும் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினருக்கும், நடிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இறுதி பிரசார நாளான 16-ந் தேதி என் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார். எனவே எனது உயிருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ActressSumalatha #Mandya 
    பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. #Sumalatha #ParliamentElection

    பெங்களூரு:

    மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி தேர்தலில் டிக்கெட் கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணியான ஜே.டி. எஸ். கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியது.

    அங்கு முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுமலதா சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு அம்பரீஷின் ரசிகர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு ஆதரவாக காங்கிரசாரே உள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு சுமலதா, பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் சந்தித்து பேசினார். அப்போது தன்னை பா.ஜனதா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

     


    மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. மாண்டியா தொகுதியை சுமலதாவுக்கு விட்டு கொடுத்துள்ளது.

    இதனால் சுமலதாவுக்கும், முதல்வர் குமாரசாமி மகன் நிகிலுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பா.ஜனதா ஏற்கனவே 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    மாண்டியா தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை. கோலார் தொகுதியில் எஸ்.முனிசாமியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இன்னும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜனதா அறிவிக்க வேண்டியுள்ளது. #Sumalatha #ParliamentElection

    பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினி காந்த், கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். #ActorAmbareesh
    அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். அவர் கன்னட படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் நேற்றிரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஆழந்த இரங்கலை தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் இன்று கர்நாடகா சென்ற ரஜினிகாந்த், அம்பரீஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார். அம்பரீஷ் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. #ActorAmbareesh
    குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் கூறினார்.
    மண்டியா :

    மண்டியாவில் நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக குறைந்தது ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் ரூ.162 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மண்டியா மாவட்ட மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

    சுற்றுலாத்துறை மற்றும் தொழில் துறைக்காவது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

    கே.ஆர்.எஸ். அணை அருகே அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அறிவிக்கப்பட்டதுதான். அதைத்தான் குமாரசாமியும் அறிவித்துள்ளார். ககனசுக்கி நீரீவீழ்ச்சி சுற்றுலா தலத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.

    மண்டியாவில் உள்ள மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும், கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை போக்க, குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது 2 மட்டும்தான் மண்டியா மாவட்டத்திற்கு கிடைத்துள்ள புதிய திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அம்பரீஷ் கூறினார். 
    ×