search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Developments"

    • கமுதியில் நடந்த வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    • பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ராமநாத புரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பருவ மழையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    வட்டாட்சியர் சேது ராமன் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் பருவ மழை காலத்தில் மழைநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார்படுத்த வேண்டும். ரேசன் கடைக ளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட் களை இருப்பு வைக்க வேண்டும்.

    மழை தொடங்கும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்தும், சேதமடைந்த மின் கம்பங் களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்வயர்கள் அறுந்து விழுந்தால் உடனடி யாக மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணி களை மேற்கொள்ள வேண்டும்.

    மழை கால நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பேரிடர் மேலாண்மை சார்பில் தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீர், வாகனங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    பாக்குவெட்டி, மண்டல மாணிக்கம், பேரையூர், செய்யமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப் பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் போலீ சார், ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள், சுகா தாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைகளுக்கென ராஜகம்பீரம் தலைமை நீரேற்று நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும், மானாமதுரை பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருசக்கர வாகன நிறுத்தம் தொடர்பாகவும் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மானாமதுரை பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் கூடுதல் அலுவலகக் கட்டிடத்திற்கென ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய நகர்ப்புற சுகாதார மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சியின் உரக்கிடங்கு மையத்தில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் ஆய்வு செய்தேன்.

    இந்த மையத்தின் கசடு கழிவு நிலைய மேலாண்மைப் பணிக்கான இடத்தை தேர்வு செய்வது குறித்தும், அரசக்குழி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மின் மயான கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் என மொத்தம் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது போன்று சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிரவிக்குமார், மானாமதுரை நகர்மன்றத் தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர்மன்றத் துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×