search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
    X

    ஆலேசானை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

    • கமுதியில் நடந்த வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    • பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ராமநாத புரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பருவ மழையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    வட்டாட்சியர் சேது ராமன் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் பருவ மழை காலத்தில் மழைநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார்படுத்த வேண்டும். ரேசன் கடைக ளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட் களை இருப்பு வைக்க வேண்டும்.

    மழை தொடங்கும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்தும், சேதமடைந்த மின் கம்பங் களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்வயர்கள் அறுந்து விழுந்தால் உடனடி யாக மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணி களை மேற்கொள்ள வேண்டும்.

    மழை கால நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பேரிடர் மேலாண்மை சார்பில் தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீர், வாகனங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    பாக்குவெட்டி, மண்டல மாணிக்கம், பேரையூர், செய்யமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப் பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் போலீ சார், ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள், சுகா தாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×