search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் தீ விபத்து"

    • பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.
    • சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் தற்போது 2-வது சீசன் தொடங்கியுள்ளது.

    இதனையடுத்து, ஊட்டிக்கு பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. வார விடுமுறை தினம் என்பதால், நேற்றும், இன்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் ஊட்டியில் நிலவும் சிதோஷ்ண நிலையை அனுபவித்தும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், நாமக்கல் ராசிபுரத்தில் இருந்து நீலகிரிக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் இன்று அதிகாலை கோவை வந்து, மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    பஸ் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க சக்கரம் தீ பிடித்து எரிந்தது. இதனை பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக இயக்கி பஸ்சை முந்தி சென்று, டிரைவரிடம் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டதும் பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.

    மாணவர்கள் எழுந்து பார்த்த போது, பஸ்சின் பின் பகுதியில் தீ பிடித்து கொண்டிருந்தது. இதனால் மாணவர்கள் அனைவரும் எழுந்து, அவசர, அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். சற்று நேரத்தில் பஸ் முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, பஸ்சில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ மள,மளவென எரிந்து கொண்டிருந்தால் சற்று சிரமம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. பஸ்சில் இருந்த பொருட்களும் எரிந்து விட்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.

    பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் பார்த்து டிரைவரிடம் சொன்னதாலும், மாணவர்கள் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்கியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பஸ் எதனால் தீ பிடித்து எரிந்தது, தீபிடித்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த வாரம் தென்காசியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் ஊட்டி மலைப்பாதையில் மீண்டும் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களின் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள்.
    • 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி இன்று அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பஸ், பஞ்சாப் மாகாணம் பிண்டி பட்டியன் அருகே பைசலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது டீசல் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
    • டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மாதவரம்:

    ஆந்திராவில் இருந்து மாதவரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை ஆந்திரா அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30 பயணிகன் இருந்தனர். புழல், சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

    பஸ்சில் இருந்து புகை வந்ததும் பயணிகளை டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
    • பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதா ராமராஜ் மாவட்டம், அனந்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து 24 பயணிகளுடன் தனியார் பஸ் அரக்கு என்ற பகுதிக்கு சென்று கொண்டு இருந்தது.

    மலைப்பாதையில் பஸ் வளைவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது.

    இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    இந்த நிலையில் பஸ் மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்றது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சிலிருந்து கீழே இறங்கினர். அப்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதுகுறித்து பயணிகள் விஜயநகரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து அனந்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×