search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசளிப்பு"

    • மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் சர்க்கரைஆலை அரசுமேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் கள் சங்கம் சார்பாக அரசுபொதுதேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளிவளாகத்தில் நடந்தது. இந்தவிழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். சங்கதலைவர் கண்ணன், துணைத்தலைவர் கள் செந்தாமரைக்கண்ணன், பரணிராஜா, பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுசெயலாளர் ராமராஜ் வரவேற்றார். இந்தவிழாவில் முதல்பரிசு சாலினி, சரவணக்குமார், இரண்டாம் பரிசு சுபஸ்ரீ, காவியா மூன்றாம் பரிசு கவுசல்யா, கோகுல் ஆகியோருக்கும் சிறப்புபரிசாக கணக்கு பதிவியல் பாடத்தில் நூறுமதிப்பெண் பெற்ற மாணவி கவுசல்யாவுக்கு வழங்கப்பட்டது.

    இதில் சங்கநிர்வாகிகள் கமலபதி, காசிலிங்கம், ராஜேந்திரன், பாலசந்திரன், ராஜசேரராஜேந்திரன், ஜெயக்குமார், இன்னாசியர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை இணைசெயலாளர் லெட்கர்கான் தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    • .சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
    • ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டனர்

    ஊட்டி, ஜூன்.19-

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஊட்டி 200 நிறைவு விழா மற்றும் முதல்-அமைச்சர் கோப்பை க்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளி ப்பு விழா சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    விழாவில் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் 61 அரசு துறை அலுவலர்களுக்கும், ஊட்டி 200 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்த ஒருங்கிணைப்பா ளர்கள் 27 பேருக்கும், 2 நன்கொடையாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை யும், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியான கால்பந்து, கிரிக்கெட், கையுந்து பந்து, வளைகோல் பந்து, கபடி, மாற்றுத்தி றனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

    விழாவில் அவர்கள் ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளி யிட்டார்கள். முன்னதாக ஜானசல்லீன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர். கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நி லைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பாக மாவட்ட அளவில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நி லைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பாக மாவட்ட அளவில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கபிலர்மலை வட்டார அட்மா தலைவரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சண்முகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் கபிலக்குறிச்சி ஊராட்சி துணைத் தலை வர் குணவதி, ஆடிட்டர் சம்பத்குமார், பி.டி.ஏ தலைவர் கோபால், நேரு யுவகேந்திரா ஒன்றிய பொறுப்பாளர் தனபால், தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலைத் திருவிழா போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
    • முன்னாள் மாணவர் ஆசிரியர் ஜோதி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

    பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஆசிரியர் ஜோதி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.

    இப்பள்ளியில் பயின்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களை ஊக்கபடுத்தி பேசினார்.

    இந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்தராஜ்,ஹேமாவதி ராமச்சந்திரன், ஷீலா, உள்ளிட்ட பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ் பாய்ஸ் என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டது.
    • இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்கும் வகையில் பொங்கல் தை திருநாளை முன்னிட்டு மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ் பாய்ஸ் என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டது.

    இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் எஸ்.ஐ.ஆனந்தன் மற்றும் போலீசார், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியை ஆரோக்கியமேரி செய்திருந்தார்.

    • கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது
    • அரசு பள்ளி மாணவர்கள் திறன் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்

    அரியலூர்:அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் தனியார் மண்டபத்தில் பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.இந்நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்,அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இதுபோன்ற திறன் போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் தயக்க உணர்வை போக்க முடியும். மேலும், நேர்முக தேர்வுகளில் கலந்துகொள்ளும் பொழுது தன்னம்பிக்கையுடன் அதனை எதிர்கொள்ளலாம். எனவே, அனைத்து மாணவர்களும் இதுபோன்ற திறன் போட்டிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் பங்குபெற உள்ள மாணவ, மாணவியர்களின் போக்குவரத்து வசதிக்கு எனது சார்பில் தேவையான வசதி ஏற்படுத்தி தரப்படும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு எனது சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.முன்னதாக, அரியலூர் அண்ணாசிலை அருகில் அம்பாலயம் - அரியலூர் மாவட்ட அனைத்து மாற்றுத்தினாளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சர்வேதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா பேரணியை துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்படும் எனவும் மாற்றுத்திறனாளிகளிடம் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி குழந்தைகளின் தனித்திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கும் வகையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி நிர்வாகத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி எப்போது மற்ற அரசு பள்ளிகளை விட தனித்துவமாக செயல்பட்டு பள்ளி குழந்தைகளின் தனித்திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கும் வகையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாண வர்களுக்கு பல்வேறு வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் பலூன் வைத்து நடத்தல், கண்ணை கட்டி முட்டை உடைத்தல், தண்ணீரில் ஆப்பிள் சாப்பிடுதல், கண்ணை கட்டி தண்ணீர் ஊற்றுதல், சைக்கிள் போட்டிகள், பிஸ்கட் மீது காசு வைத்தல், செங்கல் மீது நடத்தல், காலால் முறுக்கு சாப்பிடுதல், மாவு பிஸ்கட் சாப்பிடுதல் என வித்தியாசமான முறையில் பள்ளி குழந்தைகளுக்கு போட்டியில் நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில் அனைத்திலும் விறுவிறுப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமையில் வட்டார கல்வி அலுவர் மரியா ரோஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சந்திரகலா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அரசு பள்ளியில் இது போன்று வித்தியா சமான முறையில் பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இப்பகுதி பெற்றோர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • ராஜபாளையம் நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • ஓவியம் மற்றும் வினாடி-வினா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியின் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம், ராஜபாளையம் வட்டார அனைத்துவகைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடி-வினா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    விழாவில் மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார். உதவித் தலைமையாசிரியர் மாரியப்பன் நகரின் தூய்மைக்கான உறுதி மொழியைக் கூற அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    விழாவில், தலைமை வகித்த நகர்மன்றத்தலைவி பவித்ரா ஷியாம்ராஜா சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, என்ன தான் சட்ட திட்டங்கள் போட்டாலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எந்தவொரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றார்.

    விழாவில் நகராட்சி ஆணையாளர் பார்த்சாரதி பேசும்போது, பூமித்தோஷம், கங்கா தோஷம், விருட்ச தோஷம் என்பவற்றை விளக்கி அவற்றில் இருந்து விடுபட மக்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்கினார்.

    விழாவில் ராஜபாளையம் நகர்மன்றத் துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல், நகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.ஷியாம்ராஜா, இயக்குநர் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் பேசினார்கள்.

    விழாவில் 225-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எ.கா.த.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் பொன் மாரிமுத்து நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×