search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
    X

    மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    • மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் சர்க்கரைஆலை அரசுமேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் கள் சங்கம் சார்பாக அரசுபொதுதேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளிவளாகத்தில் நடந்தது. இந்தவிழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். சங்கதலைவர் கண்ணன், துணைத்தலைவர் கள் செந்தாமரைக்கண்ணன், பரணிராஜா, பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுசெயலாளர் ராமராஜ் வரவேற்றார். இந்தவிழாவில் முதல்பரிசு சாலினி, சரவணக்குமார், இரண்டாம் பரிசு சுபஸ்ரீ, காவியா மூன்றாம் பரிசு கவுசல்யா, கோகுல் ஆகியோருக்கும் சிறப்புபரிசாக கணக்கு பதிவியல் பாடத்தில் நூறுமதிப்பெண் பெற்ற மாணவி கவுசல்யாவுக்கு வழங்கப்பட்டது.

    இதில் சங்கநிர்வாகிகள் கமலபதி, காசிலிங்கம், ராஜேந்திரன், பாலசந்திரன், ராஜசேரராஜேந்திரன், ஜெயக்குமார், இன்னாசியர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை இணைசெயலாளர் லெட்கர்கான் தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×