search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோசடி வழக்கு"

    • தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.
    • என் மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுதர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவரும் லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் அவர் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் தான் பங்கேற்று இருப்பதாக அவர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, "என்மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது. எனது வக்கீல்கள் குழுவால் இது கையாளப்படும்" என்றார்.

    • மதுரை, நெல்லை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகளை நியோ மேக்ஸ் நிறுவனம் பெற்றது.
    • முதலீட்டு தொகையை திருப்பி தராததோடு, வட்டியும் வழங்கப்படவில்லை.

    மதுரை:

    மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏழை, எளியோரை குறி வைத்து அவர்களிடம் மூளைச்சலவை செய்து குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறினர்.

    இதனை நம்பிய ஏராளமானோர் பணத்தை டெபாசிட் செய்தனர். குறிப்பாக மதுரை, நெல்லை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகளை நியோ மேக்ஸ் நிறுவனம் பெற்றது. முதலில் வாக்குறுதி அளித்தபடி அதிக வட்டித்தொகையை கொடுத்தது.

    அதன்பின்னர் முதலீட்டு தொகையை திருப்பி தராததோடு, வட்டியும் வழங்கப்படவில்லை. இதனால் பணத்தை செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கை தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பணத்தை ஏமாந்தவர்கள் துணிச்சலுடன் வந்து புகார் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஏராளமானானோர் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் வந்து புகார் அளித்தனர். இதையடுத்து நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    இந்தநிலையில் நியோ மேக்ஸ் தொடர்புடைய தென்மாவட்டங்களில் 30 இடங்களில் 2வது முறையாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை பெறப்பட்ட 100 புகார் மனுக்களில் ரூ.22 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடி கம்பெனியில் இவர்கள் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்தனர்.
    • குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட 32 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வட்டிப்பணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

    அதை நம்பி ஏராளமான பேர், அந்த நிறுவனத்தில் முதலீட்டு தொகையை கொண்டு கொட்டினார்கள். ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. அசல் தொகைக்கும் பட்டை நாமம் போட்டு விட்டது.

    ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் முதல் கட்டமாக 1,500 ஆயிரம் பேர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்களை குவித்தார்கள். தற்போது 10 ஆயிரம் பேர்களிடம் பணத்தை சுருட்டியது அம்பலமாகி உள்ளது.

    மோசடி தொகையும் ரூ.500 கோடியில் இருந்து ரூ.800 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் அலெக்சாண்டர், சவுந்திரராஜன் உள்ளிட்ட 21 பேர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய புள்ளி நேரு (வயது 49) என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட 32 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான மணிகண்டன் (51) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இதர 19 குற்றவாளிகளில் 3 முக்கிய பெண் குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களது பெயர் திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தி, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி, அண்ணாநகரைச் சேர்ந்த சுஜாதா என்பதாகும். குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடி கம்பெனியில் இவர்கள் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்தனர்.

    கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான இவர்கள் 2,835 பேர்களிடம், ரூ.235 கோடி அளவுக்கு பணத்தை வசூல் செய்து கொடுத்து, மோசடிக்கு முக்கிய ஆணி வேர்களாக செயல்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது.
    • மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங். இவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 9 மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

    ×