search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர் ஆணையம்"

    • நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பவன்குமார் கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே துணை மாநில வரி அலுவலர் திருமால் செல்வன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்க வேல்ராஜனிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    ×