search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல் வீரர்கள் கூட்டம்"

    • தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • ஊத்துக்குளி ராஜாராமன், திருவேடகம் பெரிய கருப்பன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரையில் தி.மு.க. வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி ராஜாராமன், திருவேடகம் பெரிய கருப்பன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்கரை ஊராட்சி செயலாளர் சோழராஜா வரவேற்றார். கூட்டத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேசினார். கூட்டத்தில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, டிசம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு ஆகியவற்றில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தான லட்சுமி, மாவட்டஇளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, இளைஞர் அணி பால் கண்ணன் கார்த்தி, மகளிர் அணி இந்திரா காந்தி, ஆதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அரியலூரில் இருந்து வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    கழுதூரில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் உள்ளது. இங்குள்ள வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கலைஞர் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திடலில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

    இதில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ. கணேசன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் தமிழக வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும், தி.மு.க. இளைஞரணி மாநகர, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது.

    முன்னதாக அரியலூரில் இருந்து வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 58-வது வார்டு பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூர் ரோடு 58-வது வார்டு பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. பகுதி செயலாளரும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனுமான ஆஸ்கர் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் வெள்ளபாண்டி,துணைச் செயலாளர்கள் அந்தோணி குரூஸ், கல்பனா, மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணி ராஜ்,ஆதி ஆனந்த், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரகு வரவேற்றார். கூட்டத்தில் வட்டச் செயலாளர்கள் வசந்தி, சுப்பிரமணியன்,மைக்கேல், கருப்பசாமி,முன்னாள் கவுன்சிலர் ஸ்பிக் நகர் ஜெயக்குமார்,பகுதி இளைஞரணி அருண், வேல்மயில்,சுபாஷ் ஞானதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகுதி கழகம் சார்பாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கத்தில் நடைபெற்றது.
    • பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கத்தில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் ஜெயரா மகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னி லை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசினார்.

    ஆலோசனை

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வரைவு வாக்கா ளர் பட்டியலை சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
    • 28 ஆயிரம் பேருக்கு ரூ.600 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட அவை தலைவர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, திருச்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியினர் தி.மு.க. ஆட்சி நடத்துவது சரியில்லை என குறை கூறி வருகின்றனர். ஒருபுறம் கடுமையான நிதி நெருக்கடி, மறுபுறம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியினை தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார், தி.மு.க. கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினரான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து சிறிதளவும் நன்றி இல்லாமல் அதனை மறந்து இடையிலேயே விலகிவிட்டார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரிவேந்தரைப் போல இல்லாமல் தி.மு.க. கட்சிக்கு விசுவாசியாக உள்ள ஒரு நபரை தேர்வு செய்து, 12 ஆண்டு காலமாக உழைத்த நமது கட்சி செயல் வீரர்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் முனைப்புடன் செயல்பட வேண்டும். பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் முசிறி காவேரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து முசிறியில் இருந்து துறையூரை அடுத்த சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளுக்கு காவிரி நீரை குழாய் மூலம் கொண்டு சென்று நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 29-ந்தேதி திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் 3500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் கடன் உதவியும், 28 ஆயிரம் பேருக்கு ரூ.600 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் மணப்பாறையில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் புதிய எந்திரம் ஒன்றையும் தொடங்கி வைக்க உள்ளார். ஆகவே தமிழக முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்க்கும் கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முசிறி ஒன்றிய செயலாளர்கள், நகர, பேரூர் கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    • அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்த்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, அ.தி.மு.க. 51 வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியினை ஏற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மற்றும் ஒன்றிய, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    ×