search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
    X

    தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

    • தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • ஊத்துக்குளி ராஜாராமன், திருவேடகம் பெரிய கருப்பன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரையில் தி.மு.க. வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி ராஜாராமன், திருவேடகம் பெரிய கருப்பன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்கரை ஊராட்சி செயலாளர் சோழராஜா வரவேற்றார். கூட்டத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேசினார். கூட்டத்தில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, டிசம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு ஆகியவற்றில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தான லட்சுமி, மாவட்டஇளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, இளைஞர் அணி பால் கண்ணன் கார்த்தி, மகளிர் அணி இந்திரா காந்தி, ஆதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×