search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாஜி கிருஷ்ணமூர்த்தி"

    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஸ்மிஸ் செய்து பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு தி.மு.க. தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அதில் தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    அதை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
    • இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது.

    சென்னை :

    தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, டி.ஜெயக்குமார், குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதாகியுள்ளார். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகள் பாய்ந்தன.

    இந்த விவகாரத்தில் தனி ஒருவராக நின்று நடிகை குஷ்பு சாதித்து காட்டி இருக்கிறார். தனக்கு எதிரான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் குஷ்புவிடம் இருப்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்து வருகிறோம்.

    பெண்களை பற்றி தவறான கருத்துக்களை யாராவது தெரிவித்தால் பல கட்சிகள், அமைப்புகள் வரிந்துகட்டி குரல் கொடுக்கும். வீதிக்கு வந்து போராடவும் செய்வார்கள்.

    ஆனால் குஷ்பு விவகாரத்தில் எந்த ஒரு அமைப்பும், கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் தனி நபராக நின்று போராடுகிறார். இந்த விஷயத்திலும் தனக்காக என்ற எண்ணத்தில் அவர் போராடவில்லை. அனைத்து பெண்களுக்காகவும் தான் குரல் கொடுக்கிறார்.

    பெத்த அப்பாவுக்கும், கட்டின புருஷனுக்கும் இந்த உரிமையை கொடுக்காதபோது ரோட்டில் போகும் எவனோ ஒருத்தனுக்கு இந்த உரிமையை கொடுத்துவிட முடியுமா? இந்த மாதிரி ஆண்களை முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும் என்றபோது அவரது பேச்சில் அனல் தெறித்தது.

    குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க திருப்பி அடிச்சாதாங்கமாடீங்க. என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு பேசுவா. நாளைக்கு மறந்திடுவா என்று சாதாரணமாக நினைக்காதீங்க. குஷ்பு மன்னிச்சுடுவா... ஆனால் எதையும் மறக்கமாட்டா... அந்த புத்தி எனக்கு கிடையாது.

    மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் என்னை சீண்டிபார்த்தால் அவருக்கே தெரியும் என் பதிலடி எப்படி இருக்கும் என்று. இதை அவருக்கும் எச்சரிக்கையாகவே சொல்கிறேன் என்று குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே சென்றது எல்லோரையும் அதிர வைத்தது.

    இந்த நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தரம்கெட்ட அந்த நபரின் பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை. அந்த பெயரை உச்சரிப்பதே அவமானம். அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி. கவர்னரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரத்தில் நான் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கவில்லை. நானாக புகார் கொடுத்தால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருப்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக சில கட்சிகள் விமர்சிக்கும். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு தொடுத்துள்ளது. எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிப்போம்.

    நான் எனக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. எந்த பெண்களையும் தரக்குறைவாக பேசக்கூடாது. நடத்தக்கூடாது என்று தான் பேசுகிறேன். பெண்களின் காவலர்கள் போல் தங்களை காட்டிக் கொள்ளும் எந்த கட்சியும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே என்கிறார்கள். நான் பா.ஜனதாவில் இருப்பதால் அப்படி இருக்கலாம்.

    நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. மற்றவர்களுக்கும் இது தெரியும். எனது கருத்துக்காக என் மீது போடப்பட்ட வழக்குகளை தனி ஒருத்தியாகத்தான் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று 5 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றேன்.

    இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது. அதற்கேற்ற வகையில் எனது நடவடிக்கை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×